கல்குவாரி பயங்கர விபத்து; உடல் சிதறி 4 பேர் உயிரிழப்பு - நடுங்க வைக்கும் காட்சிகள்!

Accident Death Virudhunagar
By Swetha May 01, 2024 06:09 AM GMT
Report

கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கல்குவாரி  விபத்து 

விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, அந்த இருந்த வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் திடீரென வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.

கல்குவாரி பயங்கர விபத்து; உடல் சிதறி 4 பேர் உயிரிழப்பு - நடுங்க வைக்கும் காட்சிகள்! | 4 Killed 8 Injured In Explosion At Quarry

இதில் அந்த கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.இது தொடர்பான காட்சிகள் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் கல்குவாரி விபத்து -காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!

காஞ்சிபுரத்தில் கல்குவாரி விபத்து -காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!

4 பேர் உயிரிழப்பு

மேலும், வெடிவிபத்து உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதை தொடர்ந்து விபத்து நடந்த குவாரியின் அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் சேர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கல்குவாரி பயங்கர விபத்து; உடல் சிதறி 4 பேர் உயிரிழப்பு - நடுங்க வைக்கும் காட்சிகள்! | 4 Killed 8 Injured In Explosion At Quarry

 இதற்கிடையில், இந்த கல் குவாரி அனுமதி பெற்றே இயங்கிவருவதாகவும், இருப்பினும் கல்குவாரியில் விதிமீறல் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.