கார் மீது டெம்போ மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

Accident Death Dindigul
By Sumathi Oct 09, 2024 05:18 AM GMT
Report

கார் மீது டெம்போ மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்து 

திண்டுக்கல், பழனியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரீத்தி. இவர்களுக்கு ஜெயபிரியன் என்ற மகன் இருந்தார்.

car accident

இந்நிலையில் தியாகராஜன் தனது தாயார் மனோன்மணி, மனைவி மற்றும் மகனுடன் காரில் கிணத்துகடவு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இவர்களுடன் மேலும் சிலர் சென்றதாக கூறப்படுகிறது.

பின் அங்கிருந்து பழனி திரும்பியுள்ளனர். . அப்போது அவர்களுடைய கார் உடுமலை அருகே புறவழிச் சாலையில் வந்து கொண்டிருக்கையில், அதே பகுதியில் எதிரே டெம்போ ட்ராவலர் வந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

வேன் மோதி கோரவிபத்து - 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

வேன் மோதி கோரவிபத்து - 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

4 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உடனே, தகவலறிந்து விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் மீது டெம்போ மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! | 4 Family Members Died Van Car Collision Udumalai

மேலும், காரில் சென்ற மற்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.