கொடூர செயல்: கருவுற்ற நாயை அடித்துக்கொன்ற கல்லூரி மாணவர்கள்!

Delhi Crime
By Sumathi Nov 22, 2022 10:19 AM GMT
Report

கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கர்ப்பிணி  நாய்

டெல்லி, நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அதை 4 கல்லூரி மாணவர்கள் இரக்கமின்றி அடித்து கொன்றுள்ளனர். அதுகுறித்த வீடியோ வெளியாகி பதை பதைக்க செய்தது.

கொடூர செயல்: கருவுற்ற நாயை அடித்துக்கொன்ற கல்லூரி மாணவர்கள்! | 4 Delhi Men Beating Pregnant Dog To Death

அதில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து ஒரு கர்ப்பிணி நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒருவர் மட்டும் நாயை அடிக்க உடனிருந்தவர்கள் அவரை ஊக்குவித்துள்ளனர்.

கொடூரம்

இந்த வீடியோ வெளியாகி பரவிய நிலையில், பேலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 4 பேரும் ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் என்றும் கர்ப்பிணி நாய் மாணவர்களை பார்த்து குரைத்ததால் எரிச்சல் அடைந்து கொன்றதாகவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.