உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியை..நடுங்க வைத்த கொடூரத்தின் உச்சம்!
கள்ளக்காதல் விவகாரத்தில் யோகா ஆசிரியையை உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யோகா ஆசிரியை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேவனஹள்ளியின் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் 30 வயதுடைய பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வசிக்கிறார். இவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியைக்கு, சந்தோஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக மாறி ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த சுழலில் முன்னாள் ராணுவ வீரரான சதீஷ் ரெட்டி என்பவர் யோகா கற்றுக்கொள்வதற்காக ஆசிரியை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது துப்பாக்கி சுடக் கற்றுத்தருவதாகக் கூறி, அவ்வப்போது ஆசிரியை வீட்டுக்குச் சென்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 23ம் தேதி, சதீஷ் ரெட்டி, ஆசிரியையை காரில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
புதைக்கப்பட்ட சம்பவம்
அந்த சமயத்தில் ஆசிரியை கழுத்தை சதீஷ் ரெட்டி நெரித்துள்ளார். இதில் ஆசிரியை இறந்தது போன்று நடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளை அரை நிர்வாணமாக இருந்த ஆசிரியையைப் பள்ளம் தோண்டி, அதில் அவரை போட்டுவிட்டு மரக்கிளைகளால் மூடிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அதன்பின் பள்ளத்திலிருந்து எழுந்து, வெளியே வந்த ஆசிரியை, தனக்கு நேர்ந்த சம்பவத்தை திப்பூரஹள்ளி காவல் நிலையத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் சதீஷ் ரெட்டி, ரமணா , சல்மான், ரவி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலர் சந்தோஷ் குமாரின் மனைவி யோகா ஆசிரியையைச் செய்ய ஏவியதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
