31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - எப்படி சாத்தியம்?
92 வயது மூதாட்டிக்கு கல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
எக்டோபிக் கர்ப்பம்
சீனாவைச் சேர்ந்தவர் ஹூவாங் யூஜின். அவர் தனது 31 வயதில் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், அதனை எக்டோபிக் கர்ப்பம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக கரு முட்டையானது கருக்குழாயின் உள்ளே பொருந்தியிருக்கும்.
ஆனால் இவருக்கோ வெளியே வளர்ந்து வந்துள்ளது. துரதிஷ்டவசமாக ஹூவாங்கின் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. வழக்கமாக கரு சிறியதாக இருக்கும் போதே, நம்முடை உடல் அதன் திசுக்களை உடைத்து வெளியேற்றிவிடும்.
கல் குழந்தை
ஆனால் ஹூவாங்கின் அடிவயிற்றில் உள்ள கருவானது, பெரிதாக வளர்ந்துவிட்டதால் உடலால் தானாக வெளியேற்ற முடியவில்லை. எனவே, கருவை அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றிவிடலாம், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு ரூ.12,500 தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவ்வளவு பணம் அவரிடம் இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கருவும் அவர் வயிற்றுக்குள் அப்படியே இருந்துள்ளது.
இதன் காரணமாக அது “கல் குழந்தையாக” மாறிவிடுகிறது. ஒரு வழியாக, அவருக்கு 92 வயதாக இருக்கும் போது, 60 வருடங்களாக வயிற்றுக்குள் சுமந்து வந்த கருவை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.