கணவன், குழந்தைகள் கண்முன்னே 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை - நெஞ்சை உலுக்கிய கொடூரம்!
3 குடும்பங்களின் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஹரியானா, பானிபட்டில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 24, 25 மற்றும் 35 வயதுடைய பெண்கள். இவர்கள் ஒரே குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், திடீரென நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்த 4 ஆண்கள், கைவசம் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவர்களை கயிற்றால் கட்டிப் போட்டு,
பகீர் சம்பவம்
கத்தி முனையில் 3 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின், தனியறையில் கணவர்கள் மற்றும் குழந்தைகளை அடைத்துவிட்டு, அதிகாலை வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்துள்ளனர்.
அதனையடுத்து, வீட்டிலிருந்த ரொக்கம் மற்றும் வெள்ளி உடமைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
உடனே, பாதிக்கப்பட்டதில் பெண் ஒருவர் ஊர்த்தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் சென்றது.
தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.