13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 முதியவர்கள் செய்த கொடூரம்!

Sexual harassment POCSO Crime Ariyalur
By Sumathi Jul 24, 2024 03:46 AM GMT
Report

13 வயது சிறுமியை 3 முதியவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, பள்ளியில் 6ல் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 முதியவர்கள் செய்த கொடூரம்! | 3 Old Men Brutal Rape Of A 13 Year Old Girl

  இந்நிலையில் விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பி வந்து பார்க்கையில், அவரது வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

மூவர் கைது

உடனே இதுகுறித்து தாய், மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது ராஜேந்திரன்(65), பன்னீர்செல்வம்(76), சின்னத்தம்பி(70) ஆகியோர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறி அழுதுள்ளார்.

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 முதியவர்கள் செய்த கொடூரம்! | 3 Old Men Brutal Rape Of A 13 Year Old Girl

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 முதியவர்களையும் கைது செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.