இனி வாரத்தில் 3 நாட்கள் முட்டை, பிஸ்கட் - முதலமைச்சர் அதிரடி!
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அங்கன்வாடி
கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தவதற்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர்,
அங்கன்வாடி மையங்களில் 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய இலவச அரிசி வழங்குவதால் பட்டினியின்மை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்,
நியாயவிலைக்கடைகளின் தரத்தை உயர்த்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.