மகளிருக்கு மாதம் ரூ.2500.. இன்னும் 5 தேர்தல் வாக்குறுதிகளை கூறிய சோனியா காந்தி!
ஆட்சிக்கு வந்தால் இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தி உரை
தெலங்கானாவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகர் பகுதியில் விஜயபேரி சபாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இந்த 5 உத்தரவாதங்களை வழங்குவதாக அறிவித்தார்.
5 வாக்குறுதிகள்
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, " ’மகாலட்சுமி’ எனும் திட்டத்தின்படி தெலங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.சமையல் எரிவாயு ரூ.500 தொகையில் வழங்கப்படும்.
தெலங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்" என பல வாக்குறுதிகளை அறிவித்தார். மேலும் தெலங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் எனவும் கூறினார்.