பேருந்து கவிழ்ந்து கோர விபத்து..25 பேர் உயிரிழப்பு..!
உத்ரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
28 பயணிகளுடன் பேருந்து ஒன்று யாத்ரீக ஸ்தலமான யமுனோத்ரி நோக்கி சென்றது. அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 25 பேரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each.
— PMO India (@PMOIndia) June 5, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.