மலை பகுதியில் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொருங்கிய பேருந்து - உடல் நசுங்கி 24 பேர் பலி!
பேருந்து ஒன்று மலை பகுதியில் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்ததில் 24 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.n
விபத்து
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் அயகுச்சோவா என்ற பகுதியில் இருந்து ஹூகான்சாயோ என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த மலை பகுதியில் கொண்டை ஊசி வளைவு அதிகமாக இருக்கும்.
இதில் ஒரு கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து பேருந்து உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது.
உயிரிழப்பு
இந்நிலையில், பேருந்து பல ஆடி உயரத்தில் இருந்து உருண்டு கீழே விழுந்ததால் பெருந் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினக் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், இதில் படுகாயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.