மர்ம நபரால் பயங்கர துப்பாக்கிச் சூடு; 22 பேர் பலி - வெளியில் வரவேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை!
துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
அமெரிக்கா, மெய்ன் மாகாணத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று லூயிஸ்டன் சிட்டி. அங்குள்ள விளையாட்டு மைதானம், உணவு விடுதி, பார்கள் ஆகியவற்றில் புகுந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
அதில், 22 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
22 பேர் பலி
இதற்கிடையில், சிசிடிவி மூலம் கிடைத்த மர்ம நபரின் புகைப்படங்களை வைத்து போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட நபர் 40 வயதான ராபர்ட் கார்ட் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் கோடைக் காலத்தில் மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இரண்டு வார கால சிகிச்சையை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்.
தொடர்ந்து, லூயிஸ்டன் சிட்டி நகர மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.