2023 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தட்டி தூக்கிய தனித்துவமான எழுத்தாளர்!
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொருத் துறைகளுக்கும் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கபட்டது.
தற்பொழுது இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்
இந்நிலையில், எழுத்தாளர் ஜான் ஃபோஸ் கவிதை, உரைநடை, சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். n
2003-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை பெற்றார். மேலும் 2014-ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய இலக்கியப் பரிசையும் ஜான் ஃபோஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.