2 வயது மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம் - விளையாட்டே வினை ஆனது!

United States of America Death
By Vinothini Jun 25, 2023 09:44 AM GMT
Report

அமெரிக்காவில் ஒருவரின் 2 வயது மகன் விளையாட்டாக செய்த காரியத்தல் ஏற்பட்ட துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை செய்த காரியம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க், இவருக்கு 31 வயது ஆகிய நிலையில், இவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், இவர் 8 மாதம் கர்பிணியாகவும் உள்ளார்.

2-years-old-boy-shots-his-mother-while-playing

இவர் தனது வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளார், அப்பொழுது இவர்களின் படுக்கையறைக்குச் சென்ற அந்த சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாடும்போது தெரியாமல் தனது தாயை சுட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இந்நிலையில், அவர் உடனடியாக தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகன் சுட்டுவிட்டதாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் குழந்தையை அப்புறப்படுத்த கூறினார்.

2-years-old-boy-shots-his-mother-while-playing

மேலும், அந்த குழந்தை தெரியாமல் சுட்டுவிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இவரும் இவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சப்பினவாம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.