12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் - மருத்துவர்கள் செய்த சம்பவம்!

India Crime Doctors
By Swetha Oct 21, 2024 10:00 AM GMT
Report

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கத்தரிக்கோல் 

சிக்கிம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அதன் காரணமாக காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.

12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் - மருத்துவர்கள் செய்த சம்பவம்! | 2 Scissors Inside Womens Stomach Got Removed

இந்த நிலையில், அவரை சோதனை செய்து வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது. அதை அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,

ஒரே உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்; திக் திக் நிமிடங்கள்..மருத்துவர்கள் படைத்த சாதனை!

ஒரே உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்; திக் திக் நிமிடங்கள்..மருத்துவர்கள் படைத்த சாதனை!

மருத்துவர்கள் 

12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது.

12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் - மருத்துவர்கள் செய்த சம்பவம்! | 2 Scissors Inside Womens Stomach Got Removed

இதையடுத்து, மருத்துவ குழு, அந்த பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையைநடத்தி வயிற்றிலிருந்த 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் அந்த பெண் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.