தலைகேறிய போதை.. ஈபிள் டவர் உச்சிக்கு ஏறி மட்டையான 2 பேர் - ஷாக்கான பாதுகாவலர்!

United States of America France
By Vinothini Aug 17, 2023 07:53 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பிரான்ஸ் ஈபிள் டவர் உச்சியில் இருவர் உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிள் டவர்

பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக உள்ளது பாரிஸ் ஈபிள் டவர். உலகறிந்த மிக முக்கியமான சர்வதேச சுற்றுலா தளம் இந்த ஈபிள் டவர், இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை பாதுகாவலர்கள் ஈபிள் கோபுரத்தை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

2-drunken-men-slept-on-top-of-eiffel-tower

ஈபிள் டவரின் உச்சியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளம் தடைசெய்யப்பட்ட பகுதி அங்கு சுற்றுலாப் பயணிகள் இருவர் போதையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

விசாரணை

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலா பயணிகளுடன் வந்த இரண்டு அமெரிக்கர்கள் தடை செய்யப்பட்ட ஆபத்தான உச்சி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் மதுபோதையில் அங்கேயே உறங்கியுள்ளனர். இதனை மறுநாள் கவனித்த நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அங்கே வரவழைத்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.

2-drunken-men-slept-on-top-of-eiffel-tower

தற்பொழுது ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்த சூட்டில் இந்த சம்பவம் நடந்ததில், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் போதையில் உறங்கிய அமெரிக்கர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இன்றி விடுவித்தனர்.