ஈபிள் கோபுரம் உயரம் அதிகரிப்பு - காரணம் என்ன?
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் உயர் 6 மீட்டர் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள முக்கிய அடையாளங்களில் ஒன்று ஈபிள் டவர்.1889 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈபிள் டவரின் உயரம் 1024 அடியாக இருந்தது.
கடந்த 15-ஆம் தேதி ஈபிள் டவர் விரிவாக்கம் செய்யப்பட்டது.6 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பொறியாளர்கள் உதவியுடன் ஈபிள் டவர் மீது புதிய தகவல் தொடர்பு ஆண்டொனா ஹெலிகாப்டர் உதவியுடன் பொருத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்த விரிவாக்கம் என ஈபிள் டவர் விரிவாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வை சுற்றுலா பயணிகள் பலரும் ட்ரோகாடெரோ எஸ்பிளனே உதவியுடன் பார்வையிட்டனர்.
The Parisian Eiffel Tower known affectionately as the Iron Lady grew by six meters (20 feet)on Tuesday by the addition of a new radio antenna to transmit digital radio for the capital.~Insider~Paper #Tuesday #March15th pic.twitter.com/vttvPcp65Y
— Lori Adams (@lazygirl_lori) March 15, 2022