ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 1 வயது குழந்தை - மீட்பு பணி தீவிரம்!

Borewell Madhya Pradesh
By Vinothini Jul 18, 2023 01:34 PM GMT
Report

மத்திய பிரதேசத்தில் 18 மாத குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறி விழுந்த குழந்தை

மத்தியப் பிரதேசம், விடிஷா மாவட்டத்தில் உள்ள கஜாரி பார்கேடா என்ற கிராமத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

18-months-old-child-felt-in-borewell

அந்த பெண் குழந்தை பிறந்து 18 மாதங்களே ஆன நிலையில் தவறி கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பு பணி தீவிரம்

இந்நிலையில், மாவட்டத்தின் பொறுப்பாளர் மருத்துவக் கல்வி த்துறை மந்திரி விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

18-months-old-child-felt-in-borewell

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருக்கும்போது தெரியாமல் தவறி உள்ளே விருந்ததாக துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி லலித் சிங் டங்கூர் தெரிவித்துள்ளார்.