17 வயது மாணவி; பல மாநிலங்களில் மூன்றரை மாசமா சீரழித்த கொடூர கும்பல்!
17 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு மூன்றரை மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசம், பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித் ராம்(21) என்பவரால் கடத்தப்பட்டார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நர்ஹி கால்வாய் புலியா பகுதியில் பதுங்கியிருந்த அஜித் ராம் கைது செய்யப்பட்டு மாணவி மீட்கப்பட்டார்.
பகீர் பின்னணி
தொடர்ந்து நடத்தில் விசாரணையில், குஜராத்தில் உள்ள பரோடா, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் ஆகிய இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று
மூன்றரை மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.
அதனையடுத்து, சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.