பணத்திற்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Chennai
By Karthikraja Aug 06, 2024 12:30 PM GMT
Report

பணத்திற்காக 16 வயது மகளை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டி தொழில்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தன் கணவர் நிஷாந்த் உடன் இணைந்து வட்டிக்கு பணம் தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாலியல் தொழிலும் நடத்தி வருகிறார்கள். 

chennai

இந்நிலையில், முத்துலட்சுமியிடம், 40,000 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கிய பெண் ஒருவர், 2 மாதங்களாக வட்டி தராமல் இருந்துள்ளார். இதனால், வாங்கிய கடனுக்காக, தன் 16 வயது மகளை பாலியல் தொழிலுக்காக முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார். 

இரவு 7 மணிக்கு வெளியே சென்றது ஏன்? பாலியல் புகாரை ஏற்க மறுத்த காவல்துறை

இரவு 7 மணிக்கு வெளியே சென்றது ஏன்? பாலியல் புகாரை ஏற்க மறுத்த காவல்துறை

உடல் நலக்குறைவு

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அந்த சிறுமிக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், முத்துலட்சுமி அவரை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். எனினும், அதிக பணத்துக்கு ஆசை பட்ட சிறுமியின் தான் உடல்நிலை தெரியதும் மீண்டும் முத்துலட்சுமியிடமே பாலியல் தொழிலுக்காக கொண்டு போய் ஒப்படைத்து விட்டாராம்.

arrest

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் முத்து லட்சுமி மற்றும் சிறுமியின் தாயை கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியிடம் பாலியலில் ஈடுபட்ட முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த், அஜித்குமார், மகேஸ்வரன் உட்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள்ளனர்.

மேலும் சிறுமியிடம் காதலிப்பது போல நடித்த இளைஞர் ஒருவர் அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவரை காவல்துறை தேடி வருகிறது. சிறுமிக்கு தற்போது கவுன்சிலிங் தரப்பட்டு பாதுகாப்பாக காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.