சிறுமியை ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக்கிய பெண் - கொடூர சம்பவம்!

Chennai Sexual harassment Crime
By Sumathi Jun 10, 2024 05:16 AM GMT
Report

சிறுமியை பெண் ஒருவர் காதலனுக்கு பரிசாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அண்ணாநகரில் உள்ள கஃபேவுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

somesh - pradhisha

அப்போது அந்த சிறுமியிடம் சினிமா ஆடை வடிவமைப்பாளர் என பிரதிக்ஷா அகிலா என்பவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் என்று கூறிய பிரதிக்ஷா,

அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சென்ற சிறுமியை வரவேற்ற பிரதிக்ஷா, அவருக்கு இனிப்பை கொடுத்துள்ளார். அந்த இனிப்பை சாப்பிட்டதும் சிறுமி மயங்கியுள்ளார்.

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

பெண் கொடூரம் 

இதனையடுத்து, தனது காதலன் சோமேஷ், அவருடைய நண்பர் வில்லியம்ஸ் ஆகியோரை வரவழைத்து அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய பிரதிஷா உதவியாக இருந்துள்ளார். மயக்கம் தெளிந்த சிறுமியிடம் இதை யாரிடம் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

சிறுமியை ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக்கிய பெண் - கொடூர சம்பவம்! | 15 Years Old Sexually Abused By 2 Boys Chennai

அதன்பின், வீடு திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே பெற்றோர் போலீஸில் புகாரளித்ததைத் தொடர்ந்து, பிரதிக்ஷாவும் சோமோஷும் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர் வில்லியம்ஸை போலீஸார் தேடி வருகிறார்கள்.