சிவகங்கை: நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை!

Tamil nadu Festival
By Sumathi Oct 22, 2022 10:24 AM GMT
Report

சிவகங்கையில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருபூஜை - 144 தடை

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவர்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

சிவகங்கை: நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை! | 144 Prohibitory Order In Sivagangai

இந்நிலையில் சிவகங்கை, திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காளையார்கோயிலில் நடைபெறும்

குருபூஜை தினத்தையொட்டி நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்.