பயிற்சியில் ஓடும்போதே 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி!
மாணவர் ஒருவர் ஓடும்போது நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சியில் மாணவர்
அமெரிக்க நாட்டின், புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் 14 வயதான நாக்ஸ் மேக்ஈவன். இவர் அதே பகுதியில் டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். இவர் ஓட்ட பந்தையத்திற்காக பயிற்சி செய்வது வழக்கம்.
அந்த மாணவர் 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை மேற்கொண்டார். அப்பொழுது அவர் ஓடிக் கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அவசர கால சிகிச்சை குழுவினர் சென்று பார்த்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், அவசர கால சிகிச்சை குழுவினர் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஈவன் அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், ஈவனின் இறுதி சடங்கிற்காக குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார். இந்த மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.