படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது அண்ணன் - மூடி மறைத்த தாய்

Madhya Pradesh
By Karthikraja Jul 28, 2024 07:01 AM GMT
Report

 9 வயது தங்கையை 13 வயது அண்ணன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி பலாத்காரம்

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

child body

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

நிஜ கஜினி; கொலையானவரின் உடலில் இருந்த பெயர்கள் - டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளிகள்

நிஜ கஜினி; கொலையானவரின் உடலில் இருந்த பெயர்கள் - டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளிகள்

விசாரணை

இது தொடர்பாக 50 க்கு மேற்பட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை அவளது 13 வயது அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த உண்மை வெளியானது. ஆபாசப் படங்களைப் பார்த்து வந்த அந்த சிறுவன் அன்றைய இரவு, தனது அருகில் படுத்திருந்த தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

madhyapradesh 13 year old watching mobile

தங்கை இதை அப்பாவிடம் கூறி விடுவேன் என சொல்லியதால் பயத்தில் சிறுவன் தங்கையை கழுத்தை நெரித்து கொலை செய்த முயற்சி செய்துள்ளான். இதன் பின் சிறுவன் தாயை எழுப்பி நடந்த விஷத்தை கூறிய போது, தாய் சிறுமி இன்னும் உயிருடன் உள்ளதை பார்த்துள்ளார். இதன் பின் சிறுவன் மீண்டும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இந்த விஷயம் சிறுவனின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் தெரிந்துள்ளது.

காவல்துறை விசாரணையில், சிறுமி பூச்சி கடித்து இறந்ததாக முதலில் தெரிவித்தனர். மேலும் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதால் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.