13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 83 வயது முதியவர் - பகீர் சம்பவம்!

Sexual harassment Kerala
By Sumathi Jul 26, 2023 05:38 AM GMT
Report

சிறுவனுக்கு, முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

கேரளா, மாகியை சேர்ந்தவர் ஆனந்தன்(83). இவரது வீட்டு மாடியில் புனேவில் தங்கி வேலை செய்யும் நபரின் மனைவி மற்றும் 13 வயது சிறுவன் தங்கியிருந்தனர். இந்நிலையில், சிறுவனின் தாய் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார்.

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 83 வயது முதியவர் - பகீர் சம்பவம்! | 13 Year Old Sexual Assaulted By Oldman Kerala

அப்போது சிறுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளான். தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதில் பயந்த சிறுவன் கீழ் வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது, அந்த முதியவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 முதியவர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தனது தாய் கோவிலில் இருந்து திரும்பி வந்ததும் அதுகுறித்து கூறியுள்ளார். தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுக்க பயந்த சிறுவனின் தாய், வேறு வீட்டிற்கு மாறிய பின் குழந்தைகள் நலக் குழுவில் புகாரளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், முதியவர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார்.