120 ஆண்டுகளுக்கு முன் மாயமான கப்பல் கண்டுபிடிப்பு; சேதமே இல்ல - அதிசயம் ஆனால் உண்மை!
120 ஆண்டுகளுக்கு முன் மாயமான கப்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எஸ் எஸ் நெம்சிஸ்
ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகருக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கடந்த 1904 ஆம் ஆண்டு 240 அடி நீளம் கொண்ட சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது தொடர்ந்து,
நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் மாயமான எஸ் எஸ் நெம்சிஸ் என்ற இந்த நீராவி கப்பலை தேடும் பணி நடைபெற்றது. அதன்பின், சில நாட்களில் கப்பலில் பயணம் செய்த சிப்பந்திகள் இறந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினர்.
120 ஆண்டுகளுக்கு பின்..
ஆனால், கப்பலை கண்டுபிடிக்க முடியாததால் தேடும் பணியை கைவிட்டனர். இந்நிலையில், 120 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 525 அடி ஆழத்தில் கிடந்த கப்பல் எந்த சேதமும் இல்லாமல் இருந்துள்ளது.
தொடர்ந்து, தேசிய அறிவியல் முகமை இந்த கப்பலை படம் பிடித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
புரெஸ்சினல் மரைன் சர்வீஸ் என்ற நிறுவனம் இதனை கண்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, கப்பல் விபத்தில் பலியான சிப்பந்திகளின் குடும்ப உறுப்பினர்களை திகாரிகள் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.