12 வயது சிறுமியை சீரழித்த கும்பல் - ஆடையின்றி ரத்தம் கசிந்த நிலையில் உதவிகேட்ட கொடூரம்!

Crime Madhya Pradesh
By Sumathi Sep 28, 2023 07:16 AM GMT
Report

12 வயது சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

மத்தியப்பிரதேசம், உஜ்ஜெயினியை அடுத்து பட்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு 12 வயது சிறுமியை கும்பல் ஒன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளது.

12 வயது சிறுமியை சீரழித்த கும்பல் - ஆடையின்றி ரத்தம் கசிந்த நிலையில் உதவிகேட்ட கொடூரம்! | 12 Years Old Girl Raped Bleeding Half Naked Mp

பின், அந்த சிறுமியை கும்பல் விரட்டிய நிலையில் ரத்த கசிவுடன், அரை நிர்வாணமாக தெருவில் நடந்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, உதவி செய்யுமாறு அங்கிருந்த வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கேட்டுள்ளார்.

கொடூர சம்பவம்

ஆனால், அங்குள்ள யாரும் அதற்கு முன்வரவில்லை. அதன்பின், ஆசிரமம் ஒன்றை அடைந்துள்ளார். அங்குள்ள பூசாரி ஒருவர் சிறுமிக்கு உதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

12 வயது சிறுமியை சீரழித்த கும்பல் - ஆடையின்றி ரத்தம் கசிந்த நிலையில் உதவிகேட்ட கொடூரம்! | 12 Years Old Girl Raped Bleeding Half Naked Mp

பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. உடனே, தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்துள்ளனர்.

குழந்தை கேட்ட 2வது கணவன் - மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கர்ப்பமாக்கிய கொடூர தாய்!

குழந்தை கேட்ட 2வது கணவன் - மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கர்ப்பமாக்கிய கொடூர தாய்!

இதற்கிடையில், சிறுமிக்கு யாரும் உதவி செய்ய முன்வராத காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.