5வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த 12வயது சிறுவன்!
5வயது சிறுமிக்கு 12வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப் பிரதேசம், உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவர் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன்,

அந்தச் சிறுமியை ஏமாற்றி அங்கிருந்து தனியாக அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையி, சிறுவனை சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.