கொடிக்கம்ப விவகாரம்!! 100 நாளில் 10000 கொடிகள்!! தேதி குறித்து சவால் விடும் அண்ணாமலை!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Oct 21, 2023 07:40 AM GMT
Report

நேற்று சென்னை பனையூரில் பாஜகவின் கொடி கம்பம் நீக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதனை கண்டித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

கொடிக்கம்ப விவகாரம்

சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் இருந்த 50 அடி பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்டது. அப்போது அங்கு பாஜகவின் தொண்டர்கள் பலரும் குழுமியதால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பாஜக தொண்டர்களை கைது செய்து காவல் துறையினர் மண்டபத்தில் அடைத்தனர்.

10000-bjp-flags-in-100-days-annamalai-challenges

இந்த சம்பவங்களின் போது, தமிழக பாஜக சமூக ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசிற்கு சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பக்க பதிவில், குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

10000-bjp-flags-in-100-days-annamalai-challenges

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆன்மீகத்திற்கு அல்ல...ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி!! முக ஸ்டாலின் உறுதி!!

ஆன்மீகத்திற்கு அல்ல...ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி!! முக ஸ்டாலின் உறுதி!!

10000 கொடிகள்

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கர் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.