10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து...தலை துண்டித்து கொடூர கொலை!

Delhi Sexual harassment Crime
By Swetha Jun 29, 2024 12:00 PM GMT
Report

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

10 வயது சிறுமி

டெல்லியில் உள்ள நரேலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் சிறுமியைத் தேடினர். அப்படியும் சிறுமியை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து...தலை துண்டித்து கொடூர கொலை! | 10 Yr Ols Girl Got Raped And Killed

இதையடுத்து சிறுமியை காணவில்லை என நரேலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு ஒரு போன் வந்துள்ளது. அதில், சிறுமியின் உடல் ஒரு இடத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு போலீஸார் விரைந்து சென்று பார்த்தபோது காணாமல் போன சிறுமி, தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது பிரேதம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. அந்த உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்.

நம்பிய கணவன்; இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பிக்க அரை நிர்வாணமாய் ஓடிய அவலம்

நம்பிய கணவன்; இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பிக்க அரை நிர்வாணமாய் ஓடிய அவலம்

கொடூர கொலை

சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு மற்றும் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். இது பற்றி அப்பகுதி மக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ராகுல்(20) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து...தலை துண்டித்து கொடூர கொலை! | 10 Yr Ols Girl Got Raped And Killed

அதன்படி, ரப்பர் சிலிண்டர் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ராகுலைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.மேலும், நரோவில் குடை தொழிற்சாலையில் பணிபுரியும் தேவ்தத்(30) உடனிருந்தார். அவர்கள் இருவரும் சிறுமியை சேர்ந்து தான் சிறுமியை வன்கொடுமை,

செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.