நம்பிய கணவன்; இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பிக்க அரை நிர்வாணமாய் ஓடிய அவலம்

Madhya Pradesh
By Sumathi Jun 22, 2024 04:03 AM GMT
Report

பெண்ணை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தூர், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கணவருடன் வேலை தேடி உஜ்ஜைனி வந்துள்ளார். அப்போது இந்திரா நகர்ப் பகுதியில் வேலை கேட்டுள்ளனர்.

நம்பிய கணவன்; இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பிக்க அரை நிர்வாணமாய் ஓடிய அவலம் | Women Gang Raped Inmadhya Pradesh

அந்த நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவி செய்வதாக கூறி இருவரையும் மோட்டார் சைக்கிளில் தாஜ்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த இம்ரான் என்பவர் அங்கே வந்துள்ளார்.

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

பகீர் பின்னணி

தொடர்ந்து, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக அந்தப் பெண்ணின் கணவரை கடைக்கு ரவி அழைத்துச் சென்றுள்ளார். இம்ரான் அந்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், கடைக்குச் சென்றிருந்த ரவி, அந்தப் பெண்ணின் கணவரை அங்கேயே அமரவைத்துவிட்டு,

நம்பிய கணவன்; இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பிக்க அரை நிர்வாணமாய் ஓடிய அவலம் | Women Gang Raped Inmadhya Pradesh

அவரும் தாஜ்பூருக்கு வந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதிலிருந்து தப்பிக்க வெளியே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பெண் அரை நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனைப் பார்த்த சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், அந்தப் பெண்ணுக்கு உடை கொடுத்து உதவியுள்ளனர்.

பின் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பியோடி தலைமறைவாக இருந்த ரவி மற்றும் இம்ரானை கைது செய்துள்ளனர். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.