10 வயதில் 50 நாடுகளுக்கு பயணம் சென்ற சிறுமி - பெற்றோர் கூறிய சுவாரஸ்ய காரணம்!
சிறுமி ஒருவர் தனது 10 வயதில் 50 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
10 வயது தான்..
தென் லண்டனைச் சேர்ந்தவர் சிறுமி அதிதி திரிபாதி(10). இவரது பெற்றோர் தீபக் மற்றும் அவிலாசா தம்பதி. இருவரும் கணக்காளராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தனது மகள் உலக நாடுகளுக்கு பயணப்பட வேண்டும் என விரும்பியுள்ளனர்.
மேலும், படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் என்பதால் பள்ளியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து விடுமுறை தினங்களில் மட்டும் தனது மகளுடன் பயணங்களை திட்டமிட்டுள்ளனர்.
பயணத்தில் விருப்பம்
அதன்படி, சிறுமி ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணித்துள்ளார். பயணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு 20,000 பவுண்டுகள் சராசரியாக செலவிட்டுள்ளனர். இதனால், மகள் வெவ்வேறு கலாச்சாரங்கள், உணவுகள் மற்றும் மக்களைப் புரிந்து கொள்ள முடியும்.
போக்குவரத்து செலவுகளை சேமித்து, அதை தங்கள் பிள்ளைகளுக்காகவே செலவிடுவதாக தெரிவிக்கின்றனர். 3 வயதிருக்கும் போதே பயணங்களை தொடங்கிய சிறுமி தற்போது தனது 10 வயதில் 50 நாடுகளை பார்த்துள்ளார்.
தமக்கு மிகவும் பிடித்தமான நாடுகள் அல்லது இடங்கள் என எதுவும் இல்லை என்றாலும், நேபாளம், ஜார்ஜியா, ஆர்மீனியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இன்னொருமுறை செல்ல ஆசை என சிறுமி தெரிவித்துள்ளார்.