நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..!

Tamil nadu Governor of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Jun 16, 2022 12:15 AM GMT
Report

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிந்திருக்கிறது.

பொதுத்தேர்வு

2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..! | 10 Th Examination Results To Be Released Tomorrow

அவர்களின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி 9-ந் தேதியுடன் நிறைவுபெற்றது.

திருத்திய மதிப்பெண்களை பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிந்திருக்கிறது.

தேர்வு முடிவுகள்

ஏற்கனவே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கல்வித்துறை திட்டமிட்டபடியே தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாகவும், தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் மகிழ்ச்சி செய்தி..கல்லுாரி மாணவிகளுக்கு ரூ.1000 ரெடி..!