வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி
சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் என்பவர் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார்.
பத்து மாதக் குழந்தைக்கு வேலை
இந்த நிலையில், கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
ஆகவே ரயில்வே விதிகளின் படி, ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.
பணியினை உறுதி செய்த நிர்வாகம்
சிறிய குழந்தை என்பதால், அதன் கைரேகையை பதிவு செய்து பணி உறுதிபடுத்தப்பட்டது, குழந்தைக்கு 18 வயதை பூர்த்திசெய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விண்வெளி மண்டலத்தின் முதல் நட்சத்திரம் உருவானது எப்படி ? - நாசா வெளியிட்ட முதல் புகைப்படம்
தற்போது 10 மாத குழந்தைக்கு அரசு வேலை வழங்கியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.