விஷச்சாராய இழப்பீடு;10 லட்சம்...இவ்வளவு அதிக தொகை எப்படி வழங்க முடியும்? நீதிமன்றம் கேள்வி!

Governor of Tamil Nadu Death Kallakurichi Madras High Court
By Swetha Jul 05, 2024 07:54 AM GMT
Report

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பலியானவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

விஷச்சாராய இழப்பீடு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விஷச்சாராய இழப்பீடு;10 லட்சம்...இவ்வளவு அதிக தொகை எப்படி வழங்க முடியும்? நீதிமன்றம் கேள்வி! | 10 Lakh Is Too Much Chennai High Court Questions

இதுவரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 65 ஆக உள்ளது. பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அதில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது.

விஷச்சாராய விவகாரம்; 49 பேர் உயிரிழப்பு- முக்கிய குற்றவாளி கைது!

விஷச்சாராய விவகாரம்; 49 பேர் உயிரிழப்பு- முக்கிய குற்றவாளி கைது!

நீதிமன்றம் கேள்வி

என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

விஷச்சாராய இழப்பீடு;10 லட்சம்...இவ்வளவு அதிக தொகை எப்படி வழங்க முடியும்? நீதிமன்றம் கேள்வி! | 10 Lakh Is Too Much Chennai High Court Questions

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும்,

இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.