1 வருஷத்தில் சாப்பாட்டுக்காக அதிகம் கொல்லப்படும் உயிரினம் எது தெரியுமா? ஷாக் லிஸ்ட்!
உணவுக்காக கொல்லப்படும் விலங்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விலங்குகள் பலி
பிரபல முன்னணி செய்தி நிறுவனம் விலங்குகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்டொன்றுக்கு உணவுக்காக மட்டும் 10,000 கோடி விலங்குகள் கொல்லப்படுகின்றன.
அதன்படி, ஆண்டு ஒன்றுக்கு 1900 கோடி கோழிகளும், 150 கோடி மாடுகளும், 100 கோடி ஆடுகளும், நூறுகோடி பன்றிகளும் உணவுக்காக கொல்லப்படுகின்றன. நாளொன்றுக்கு 20 கோடிக்கும் அதிகமான கோழிகள்,
கோழி தான் டாப்
அதாவது ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோழிகள் உணவிற்காக கொல்லப்படுகிறது. இதேபோல், ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் ஆமைகளும், 83 ஆயிரம் முதலைகளும், ஒரு லட்சம் எருமை மாடுகளும், 8 லட்சம் ஒட்டகங்களும், 50 லட்சம் குதிரைகள் பலியாக்கப்படுகின்றன.
மேலும், நாய்கள், புறாக்கள், சுறா உள்ளிட்டவையும் அதிக எண்ணிக்கையில் வேட்டையாடப்படுகிறது. தொடர்ந்து, அதிக அளவு அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் நாடாக (25 சதவீதத்திற்கும் அதிகமாக) சீனா உள்ளது.
ஒட்டு மொத்த உயிரினங்களில் அதிகம் உணவுக்காக சாப்பிடப்படும் உயிரினமாக கோழி உள்ளது குறிப்பிடத்தக்கது.