<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-15T07:40:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பார்க்கிறார்கள்: செந்தில் பாலாஜி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121</id>
            <summary type="text">திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தவெக ஆட்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி</h2><p>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்.</p><p>நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன் சென்னை திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.</p><p>போலிஸ் நிலையத்தில் அவர் ஆஜராகாத நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc3be65-849b-4faf-b62d-b1e534eba3d0/26-6a572deb03004.webp' /><br></p><h2>செந்தில் பாலாஜி கடிதம்</h2><p>அந்த கடிதத்தில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் எங்கும் ஓடிஒளியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் வழக்கின் விசாரணைக்காக தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q1WgXyV-1gw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:51:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலில் 19 காயங்கள்: அடித்துக் கொலை செய்யப்பட்ட சபரி வர்மன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sabari-varman-case-update-1784088033"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sabari-varman-case-update-1784088033</id>
            <summary type="text">நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சபரிவர்மன்

கன்னியாகுமரியின் தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.</p><h2>

சபரிவர்மன்
</h2><p>
கன்னியாகுமரியின் தென்தாமரைக்குளம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன்(வயது 34).</p><p>

வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சபரிவர்மன் குட்கா விற்பனை செய்வதாக கூறி கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
தொடர்ந்து நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார், இந்நிலையில் 12ம் தேதி சிறைவார்டன் உள்ளிட்டோர் அவரை தாக்கியதில் 13ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் போலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fe27e6-e59f-4684-ac3a-158da68ba0c4/26-6a5706988d516.webp' /><br></p><p>
</p><h2>
இறப்பில் சந்தேகம்
</h2><p>
சபரிவர்மன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
</p><p>
இச்சம்பவத்தில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், தலைமை சிறை காவலர் திருமலை நம்பி கைது செய்யப்பட்டுள்ளனர், 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
நீதிபதி தலைமையில் விசாரணை</h2><p>

இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>
மேலும் சிறப்பு மருத்துவ குழுவினர் உடற்கூறு நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது உடலில் தலை முதல் கால் வரை 19 காயங்கள் இருந்துள்ளது, கையில் உள்ளங்கை திசுக்களில் ரத்தக்கசிவு பதிவாகியுள்ளது.
</p><p>
பல இடங்களில் சிராய்ப்பும், அனைத்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாகவும் மருத்துக குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf8b5c6d-b161-4835-aa75-86977d528079/26-6a57069940379.webp' /><br></p><h2>

பிரேத பரிசோதனை அறிக்கை
</h2><p>
அறிக்கையின்படி, சபரிவர்மனின் வலது முன்னங்கை மற்றும் வலது காலின் கீழ்ப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளது. </p><p>

வலது கையில் பலத்த ரத்தக்கட்டு இருப்பதுடன், அங்கு எலும்பு முறிந்திருப்பதும், தோலுக்கு அடியில் பல இடங்களில் ரத்தம் உறைந்து போயிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>

மண்டை ஓட்டைப் பிரித்து ஆய்வு செய்தபோது, சபரிவர்மனின் உச்சந்தலையில் தடிமனான ரத்தக்கட்டும், பிடரி பகுதியில் ஆழமான காயமும் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BIbSn5FVe78" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-15T04:03:56+00:00</updated>
        </entry>
    </feed>
