<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-17T08:28:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548"></link>
            <id>https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548</id>
            <summary type="text">புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. </p><p>புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவன், ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மகள் யோகலட்சுமி.
</p><p>
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவம் (MD) இறுதியாண்டு படித்து வந்தார்.
</p><p>
தேர்வுக்கு தயாராகிவந்த யோகலட்சுமி நேற்று முன்தினம் இரவு தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec635c0-f3be-4117-bedd-f9b62577dc3d/26-6aab75ab647ff.webp' /><br></p><p>

மறுநாள் காலை வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சடலமாக கிடந்துள்ளார்.
</p><p>
பக்கத்தில் காலியான மயக்க மருந்து பாட்டில் மற்றும் இன்சுலின் ஊசி இருந்துள்ளது.
</p><p>
உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
</p><p>
இதன்பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.
</p><p>
அதில், இந்த முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என எழுதியிருந்தார்.<br></p>]]></content>
            <updated>2026-09-17T05:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/grand-consecration-ceremony-at-meenakshi-temple-1789614546"></link>
            <id>https://ibctamilnadu.com/article/grand-consecration-ceremony-at-meenakshi-temple-1789614546</id>
            <summary type="text">17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா இன்று காலை நடைபெற்றது.உலகப்புகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா இன்று காலை நடைபெற்றது.</p><p>உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு கொண்டது.
</p><p>
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மகா குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFnzjZU1riE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன. </p><p>இன்று காலையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது, இதற்காக மதுரை நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டது. </p><p>இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12ம் கால யாகபூஜை நடைபெற்றதை தொடர்ந்து சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர கும்பாபிஷேகம் நடைபெற்றது. </p><p>தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேஷ்வரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-17T03:12:38+00:00</updated>
        </entry>
    </feed>
