<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-28T19:51:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-rajmohan-says-90-tamils-unreachable-nepal-1787925430"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-rajmohan-says-90-tamils-unreachable-nepal-1787925430</id>
            <summary type="text">minister rajmohan says 90 tamils unreachable in nepal: நேபாளத்தில் சுமார் 90 தமிழர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister rajmohan says 90 tamils unreachable in nepal: நேபாளத்தில் சுமார் 90 தமிழர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம்</h3><p> 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f58a34a-558c-4381-9db6-a5cfce9df223/26-6a9193b84863b.webp' /></p><p>இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சென்று அங்கு ஏராளமான சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.</p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/679e0665-e161-4672-9a7a-b151cc1675df/26-6a9193b8f1b6e.webp' /></p><p>
அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர்.</p><h3>90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை</h3><p>

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6f0c78c-7f07-462a-881b-31b9514fbc36/26-6a9193b9a6f45.webp' /></p><p> 

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.</p><p>

சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T13:57:23+00:00</updated>
        </entry>
    </feed>
