<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:53:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-keerthana-about-parandur-acquisition-land-1787664849"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-keerthana-about-parandur-acquisition-land-1787664849</id>
            <summary type="text">minister keerthana about acquisition land for parandur airport: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister keerthana about acquisition land for parandur airport: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.</p><h3>

பரந்தூரில் மாற்று திட்டம்
</h3><p>
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1179d39f-ab58-4f41-9a1c-208152d42a79/26-6a8d99d36bf9e.webp' /></p><p> 

இதனால் சென்னையின் தொழில் வாய்ப்புகள் பறிபோகும், ஏற்கனவே 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என அரசின் இந்த முடிவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.</p><p> 

இன்றைய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இது குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் காரசாரமாக விதித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41851c95-bd61-4da7-a882-1ea3071a2066/26-6a8d99d4202be.webp' /></p><p> 

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என அதிமுக எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலமும் கையகப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55da936-badc-4ddf-ba41-c8bd249b289b/26-6a8d99d2bc391.webp' /></p><p>

பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>

இதனையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9886ff6-0b7c-4a5b-b598-464fb373edc0/26-6a8d99d4c6c5e.webp' /></p><p>
இதனிடையே பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், ஒரு திட்டதிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. அல்லது நிலத்தை மக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இதில் அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0fbcc3d-09f4-4d3c-9a1f-4f4b191f2cf3/26-6a8d99d57668f.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, "ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம், அந்த திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T13:34:21+00:00</updated>
        </entry>
    </feed>
