<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-29T12:31:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531</id>
            <summary type="text">தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb5e796-117b-49e5-9464-a25d59102b27/26-6a69c9fcdd1e2.webp' /></p><p> இதில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அமைச்சர்,</p><h2>கல்வித் துறையில் புதிய முயற்சிகள்</h2><p> </p><p>முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். </p><p>மேலும், ஆசிரியர் சங்கங்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை கண்காணிக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மனுக்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604d721-4b5d-4a12-adac-efeda1769d21/26-6a69c9fd8c1b7.webp' /></p><p>
</p><p>
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் புதிய முயற்சியாக வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><p> மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கியதாகவும், அதனை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தியதாகவும், கலைஞர் அதில் முட்டையை சேர்த்ததாகவும் குறிப்பிட்ட அவர், அதே வரிசையில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
</p><p>
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்த விவகாரத்தில், தங்களது அரசு தமிழ் தாய் வாழ்த்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-29T09:39:16+00:00</updated>
        </entry>
    </feed>
