<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-27T11:49:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-send-4-ministers-to-delhi-nepal-rescue-1787821873"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-send-4-ministers-to-delhi-nepal-rescue-1787821873</id>
            <summary type="text">4 tamilnadu ministers to reach delhi for nepal flood rescue நேபாளத்தில் 103 தமிழ்நாட்டு பயணிகள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த 4 அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 tamilnadu ministers to reach delhi for nepal flood rescue நேபாளத்தில் 103 தமிழ்நாட்டு பயணிகள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி செல்ல உள்ளனர்.
</p><h3>
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள்
</h3><p>
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b31be87-4925-49e4-9be6-a6b906e29409/26-6a8fff3373eb4.webp' /></p><p>1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.</p><p> 

இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98313be1-8a43-4788-b61a-d7b7540974e3/26-6a8fff3427f9b.webp' /></p><p>
இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை&nbsp; காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார். </p><h3>

 டெல்லி விரையும் 4 அமைச்சர்கள் </h3><p>

இதனையடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு சுற்றுலா பயணிகளை மீட்பது குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4fac3d1-138a-4444-865b-69003eec4a99/26-6a8fff32af3ca.webp' /></p><p>
இதனையடுத்து, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 பேரையும் மீட்பு பணிகளை மத்திய அரசுடன் இணைந்து தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் செல்ல உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T09:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்

இந்தியாவில் டெல்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.</p><h3>

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்
</h3><p>
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f9f27a-7ce3-4881-b474-da4706cf3000/26-6a8fd1a93b692.webp' /></p><p>
டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.</p><h3> 

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் </h3><p>

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60738fd-527e-4261-a05a-9dfca4014715/26-6a8fd1a7d04bc.webp' /></p><p> 

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், "பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. </p><p>

மே மாதத்துக்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f7deed3-bcf8-4675-904a-5ebddee57b16/26-6a8fd1a8832ef.webp' /></p><p>

தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:02:21+00:00</updated>
        </entry>
    </feed>
