<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-17T09:32:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சிலையை கரைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்த 9 நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974"></link>
            <id>https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக்கூடிய சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் பொழுது ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைக்கும் நிகழ்வில் படி மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ce20d4-6d2a-43a6-b61d-67633aadffd8/26-6aabad8df34b4.webp' /></p><p></p><p> </p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர் கார், பத்ரக், கோர புட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>
 ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட இந்த தகவலின் படி ஜெகத்சிம்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் இருக்கக்கூடிய கோபால்பூர் பகுதியில் ஓடானலா இந்த இடத்தில் ஆற்றின் மூழ்கிய நான்கு நபர்கள் உடைய சடலங்களை மீட்டு எடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p> </p><p>மூன்று நபர் காணாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் உயிரிழந்த சோகமும் காணாமல் போன செய்தியும் கிடைத்திருக்கிறது. மொத்தம் ஒன்பது பேர் சடலங்கலாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு, மீட்பு பணிகள் இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவங்களுக்கு ஓடிஸா முதல்வர் மோகன் சரண் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்புகளை முன்னிட்டு நடந்த இந்த சோகமான செய்தி அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548"></link>
            <id>https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548</id>
            <summary type="text">புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. </p><p>புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவன், ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மகள் யோகலட்சுமி.
</p><p>
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவம் (MD) இறுதியாண்டு படித்து வந்தார்.
</p><p>
தேர்வுக்கு தயாராகிவந்த யோகலட்சுமி நேற்று முன்தினம் இரவு தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec635c0-f3be-4117-bedd-f9b62577dc3d/26-6aab75ab647ff.webp' /><br></p><p>

மறுநாள் காலை வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சடலமாக கிடந்துள்ளார்.
</p><p>
பக்கத்தில் காலியான மயக்க மருந்து பாட்டில் மற்றும் இன்சுலின் ஊசி இருந்துள்ளது.
</p><p>
உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
</p><p>
இதன்பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.
</p><p>
அதில், இந்த முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என எழுதியிருந்தார்.<br></p>]]></content>
            <updated>2026-09-17T05:08:15+00:00</updated>
        </entry>
    </feed>
