<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-26T06:38:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாஸ்மாக் பார்களுக்கு புதிய விதிமுறைகள்.. 100 மீட்டர் சுற்றளவில் அமைக்க அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tasmac-bar-rules-relaxed-new-move-by-tn-govt-1785046413"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tasmac-bar-rules-relaxed-new-move-by-tn-govt-1785046413</id>
            <summary type="text">தமிழகத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறை 

டாஸ்மாக் மதுக்கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>

புதிய விதிமுறை </h2><p>

டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இதுவரை பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p>

மேலும், பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய டெண்டர் விதிமுறைகள் மூலம், இதுவரை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தி வந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7594ce5-c790-4204-9e58-8ee5d242bf5b/26-6a65a58fe9e63.webp' /></p><p>இதன் மூலம் புதிய நபர்களும் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
பழைய உரிமக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் வரை பார்களின் இயக்கம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதேநேரத்தில், பார்களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். </p><p>

சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.</p>]]></content>
            <updated>2026-07-26T06:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/prahlad-joshi-appointed-education-minister-1785043138"></link>
            <id>https://ibctamilnadu.com/article/prahlad-joshi-appointed-education-minister-1785043138</id>
            <summary type="text">நீட் போராட்டம் எதிரொலி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 3 கோரிக்கைகளும் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ்

நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் போராட்டம் எதிரொலி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 3 கோரிக்கைகளும் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ்

நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p> இதையடுத்து, தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0413b87c-1934-4c44-b787-dd99497fa915/26-6a659cf48751b.webp' /></p><p>

நீட் தேர்வு முறைகேட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவு அதிகரித்த நிலையில், நாட்டின் நலனையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
</p><p>
இதையடுத்து, போராட்டத்தின் முதல் கோரிக்கை நிறைவேறியதால் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, "இளைஞர்களுடன் மோதாதீர்கள்; இதுதான் ஜனநாயகம்" என்று தெரிவித்தார்.</p><p>

இதற்கிடையில், எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்குடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.பி. நட்டா, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார்.
</p><p>
அரசு மூன்று கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f967351-02d4-48d8-a877-5a09ba8564b5/26-6a659de33f7fc.webp' /></p><h2>அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை&nbsp;</h2><p>
</p><p>
இதனிடையே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>

கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி, முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd687d1-44e2-429d-8899-7fc6c67c0553/26-6a659de3f0daa.webp' /></p><p> </p><p>நிர்வாகத் திறன், பிரச்சினைகளை அமைதியாகக் கையாளும் திறன் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

தற்போது, நீட் தேர்வு சர்ச்சையால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையைப் போக்கி, தேசிய அளவிலான தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே பிரகலாத் ஜோஷி எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-26T05:41:15+00:00</updated>
        </entry>
    </feed>
