<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-12T14:35:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல - தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381"></link>
            <id>https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381</id>
            <summary type="text">nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><h3> 

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் </h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85b47ae-3424-4ed8-99d7-96efd3dc4f80/26-6a7c7d170d0a7.webp' /></p><p>
இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p><h3>

தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல</h3><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a0941b-b4cb-469d-9fb3-cabe6e9f8426/26-6a7c7d17b4574.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.&nbsp;</p><p>
"ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும்.</p><p> 

இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் – தமிழக நலனுக்கு எதிரானது!<br><br>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள <a href="https://x.com/TVKPartyHQ?ref_src=twsrc%5Etfw">@TVKPartyHQ</a> அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். &quot;ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு&quot;…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2087477690853122412?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
</p><p>
 கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T14:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://ibctamilnadu.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணம் உயர்வு சர்ச்சை: நடிகை வைஷாலி குற்றச்சாட்டுக்கு TANGEDCO விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235</id>
            <summary type="text">கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.வழக்கமாக செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.</p><p>வழக்கமாக செலுத்தி வந்த தொகையைவிட, தற்போது பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வருவதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fb2cc6-e5d3-4396-9fba-d7fa8e1d251f/26-6a7c2ec1b9f84.webp' /></p><p> </p><p>குறிப்பாக, சில வீடுகளில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புகார்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.</p><h2>நடிகை வைஷாலி வைரல் வீடியோ</h2><p>அந்த வீடியோவில், மின் கட்டணம் தொடர்பாக தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தற்போதைய மின் கட்டண உயர்வு குறித்து தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>

நடிகை வைஷாலி தனது வீடியோவில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இதுகுறித்து முன்பு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண மக்களுக்கு வழக்கத்தைவிட அதிகமான மின் கட்டணங்கள் வருவதாகவும், இதனால் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய முறையைப் போலவே நியாயமான கட்டணத்தை வசூலித்தால்கூட பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். தற்போதைய நிலை தொடர்ந்தால், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
</p><p>
நடிகையின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) விளக்கம் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><h2>மின்சார வாரியம் விளக்கம்&nbsp;</h2><p>

மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை
மின்சார வாரியத்தின் விளக்கத்தின்படி, நடப்பாண்டில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. அதாவது, மின் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டதால்தான் தற்போது பொதுமக்களுக்கு அதிக கட்டணம் வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வாரியம் மறுத்துள்ளது.
</p><p>
கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாடு
மின் கட்டணம் அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாக, கோடை காலத்தில் ஏற்பட்ட அதிகப்படியான மின் பயன்பாட்டை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோடை வெயில் நீண்ட நாட்கள் நீடித்ததன் காரணமாக, வீடுகளில் மின்விசிறி, ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f87e081-8e18-43b7-8fcf-6a9200c7bf05/26-6a7c2ec269aa1.webp' /></p><p></p><p>இதன் காரணமாக மொத்த மின் நுகர்வு அதிகரித்து, அதற்கேற்ப சில நுகர்வோரின் கட்டணத் தொகையும் உயர்ந்திருக்கலாம் என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே, மின் கட்டண விகிதம் உயர்த்தப்படவில்லை; மாறாக, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்ததே சில நுகர்வோருக்கு அதிக கட்டணம் வருவதற்கான காரணம் என வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், மின் கட்டணம் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின் இணைப்புகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>

மொத்தம் 3.43 லட்சம் மின் இணைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வில், வெறும் 0.75 சதவீத இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக வாரியம் கூறியுள்ளது.
</p><p>
இதன் மூலம், மாநிலம் முழுவதும் மின் கட்டணக் கணக்கீட்டில் மிகப்பெரிய அளவில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839"></link>
            <id>https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839</id>
            <summary type="text">aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். 

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b8fdea-6942-46a5-bb2a-83b781e3f6de/26-6a7c30c0d5283.webp' /></p><p> 

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்
</h3><p>
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f06545-1a41-4ef3-9ad1-11eb678dfbd0/26-6a7c30c23a011.webp' /></p><p>

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தற்போது 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் சேர்ந்தாலே பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும். </p><p>

தென் இந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப்பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டும் அல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.</p><h3> 

ஆர்.பி.உதயகுமார்
</h3><p>
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்யாததை எல்லாம் செய்ததாக கூறி இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு, பிற மொழிகளில் போலி செய்திகள் மூலம் மாயபிம்பம் உருவாக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d520d469-13d7-47c9-91e6-e39d183d4d61/26-6a7c30c187cd0.webp' /></p><p>
இந்த மாயபிம்பத்தை வைத்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது" என பேசியிருந்தார்.</p><p>&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wN25U-NxuJM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/maria-wilson-must-apologize-in-the-assembly-1786541937"></link>
            <id>https://ibctamilnadu.com/article/maria-wilson-must-apologize-in-the-assembly-1786541937</id>
            <summary type="text">Seeman Statement to Minister Maria Wilson உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. &#039;அன்பிற்கும் உண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seeman Statement to Minister Maria Wilson உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க் குறள்களை அமைச்சர் படித்ததில்லையா? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;<br></p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக் கொள்ளக் கோரிய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரனுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம்.</p><p>தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரிய வில்சன் அதிகாரத் திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
</p><p>
தமிழ்ச் சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YD6EHHj-urE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும். நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
</p><p>
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறிஸ்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?.
</p><p>
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக் கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே.
</p><p>
உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க் குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
</p><p>
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா? "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?

&nbsp;&nbsp;</p><p>"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும், பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும், புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும், "உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c1530b-42fc-493c-89d9-7709c7cefae3/26-6a7c78a88130a.webp' /><br></p><p>காக்கைக் குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம் என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?. தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன். எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.&nbsp;&nbsp;</p><p>இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார். தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது. பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.&nbsp;&nbsp;</p><p>'வாடியப் பயிரை கண்டு வாடிய' வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?. உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ். "தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.&nbsp;&nbsp;</p><p>அதே அவையில் தமிழக முதல்வர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.&nbsp;&nbsp;</p><p>கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரிய வில்சனுக்கு?.&nbsp;&nbsp;</p><p>இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.&nbsp;&nbsp;</p><p>நீங்கள் பிறந்த மதம் கிஸ்த்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறிஸ்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறிஸ்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.&nbsp;&nbsp;</p><p>ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி. அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி. தாய்மொழிதான் அடையாளம். அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.&nbsp;&nbsp;</p><p>எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறிஸ்தவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;&nbsp;</p><p>தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை. எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரிய வில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T13:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/property-tax-in-chennai-hiked-1786532159"></link>
            <id>https://ibctamilnadu.com/article/property-tax-in-chennai-hiked-1786532159</id>
            <summary type="text">Property Tax Chennai Hiked: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Property Tax Chennai Hiked: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக அமைந்துள்ள சொத்து வரி 4 மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்தாண்டு 5000 ரூபாய் என்ற அளவில் இருந்த சொத்து வரி தற்போது 28000 ரூபாயாக அதிகரித்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஆனால் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d54f81-6bff-486e-a8d6-ebfc3d44c0f4/26-6a7c52e2bde22.webp' /><br></p><h2>Property Tax அறிக்கை</h2><p>இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை, குறைவாகவோ அல்லது தவறாகவோ கணக்கிடப்பட்டு சொத்துவரி செலுத்தி வந்த சொத்தின் உரிமையாளர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

செயற்கைகோள் தரவுகள், பிற அரசுத்தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய அறிவிப்பு ஆகியவற்றின் மூலம் பரப்பளவு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
</p><p>
திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பை பெற்ற 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

எனவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T11:03:14+00:00</updated>
        </entry>
    </feed>
