<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-30T16:36:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/orders-karnataka-to-open-cauvery-for-tamil-nadu-1785424187"></link>
            <id>https://ibctamilnadu.com/article/orders-karnataka-to-open-cauvery-for-tamil-nadu-1785424187</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இதற்கு முன்பு காவிரி ஒழுங்காற்றுக் குழு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்தது. மேலும், மேகதாது அணை விவகாரத்தையும் முன்வைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dfd220d-9d5b-49d2-985c-0eac4fb77f71/26-6a6b6c4489f46.webp' /></p><h2>காவிரி நீர் திறப்பில் புதிய உத்தரவு&nbsp;</h2><p> </p><p>இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டது.</p><p>

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். </p><p>கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி, விநாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
</p><p>
இதற்கிடையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் உள்ள நிலையில், ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கர்நாடக பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T15:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல் காந்தி இதை சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் - அன்புமணி சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/anbumani-says-if-rahul-gandhi-said-will-exit-nda-1785419601"></link>
            <id>https://ibctamilnadu.com/article/anbumani-says-if-rahul-gandhi-said-will-exit-nda-1785419601</id>
            <summary type="text">மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் 

தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
</p><h3>
காவிரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.</p><p> 

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p> 

முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு சென்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருன் நிலையில் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆளும் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. </p><h3> 

 அன்புமணி ராமதாஸ் சவால் </h3><p>

இதனிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad15f1b2-f936-409d-a592-68134af541ff/26-6a6b5752efbf0.webp' /></p><p>

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், "கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவகுமார், குழந்தையை கிள்ளி விடுவதும், இங்கிருக்கும் காங்கிரஸ் தொட்டிலை ஆட்டுவதுமாக நாடகம் நடத்திவருகிறார்கள்" என பேசியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adc285a-0601-412b-9c63-133babb887b8/26-6a6b57550973a.webp' /></p><p> 

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "நீங்கள் கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி பெற வேண்டாம்” என பதில் கொடுத்துள்ளார். 

இதனை எதிர்த்து, பாஜகவுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா, பதில் சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ebb8ba-6b1c-4ac2-955f-64848aabc801/26-6a6b575453bd1.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி ராமதாஸ், “ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என ஒரு வார்த்தை சொல்வாரா? அப்படி ராகுல் காந்தி சொன்னால், நாங்கள் NDAவில் இருந்து விலகுகிறோம்" என கூறினார். </p><p>

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டிற்கு மேகதாது மிகப்பெரிய ஆபத்து. எனவே அதனை கட்டக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சொல்வேன்.&nbsp; </p><p>காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. மோடிதான் ஆட்சியில் இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதற்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள். பிரதமராக உள்ள மோடிக்கு உங்களின் ஆதரவை திரும்ப பெற்றால், அவர் மேகதாது அணைக்கு அனுமதிக்க மாட்டார்.</p><p> 

இதனைச் சொல்ல சொன்னால், சின்ன பிள்ளைத்தனமாக ராகுல் காந்தியை சொல்ல சொல்கிறீர்கள்.இது எந்த விதத்தில் நியாயம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:55:21+00:00</updated>
        </entry>
    </feed>
