<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-14T18:23:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? - முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-cm-vijay-for-letter-to-moe-1786713122"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-cm-vijay-for-letter-to-moe-1786713122</id>
            <summary type="text">மீனவர் பிரச்சினையில், கடிதம் எழுதினால் மட்டும் போதுமா உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீனவர் பிரச்சினையில், கடிதம் எழுதினால் மட்டும் போதுமா உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3> 

கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
</h3><p>
இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களை மீட்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நேற்று கடிதம் எழுதினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20300b6d-fdfa-4e40-be2c-0d08361f412d/26-6a7f142438a00.webp' /></p><p>
முதல்வர் விஜய் கடிதம் எழுதியது குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.</p><p> 

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.</p><p>

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? </p><p>

ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. <br><br>இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.<br><br>மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2088218151993659502?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T13:12:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வயது குழந்தைக்கு வன்கொடுமை: வாலிபரை ஓட ஓட வெட்டிய பாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sad-incident-for-4-year-old-granddaughter-1786711988"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sad-incident-for-4-year-old-granddaughter-1786711988</id>
            <summary type="text">கரூரின் குண்டாங்கல்பாரை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், கூலித்தொழிலாளி ஒருவர் தன்னுடைய 4 வயது மகளை அவரது பாட்டி வீட்டில் விடுமாறு அனுப்பி வைத்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரின் குண்டாங்கல்பாரை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், கூலித்தொழிலாளி ஒருவர் தன்னுடைய 4 வயது மகளை அவரது பாட்டி வீட்டில் விடுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>
மாணிக்கமோ, குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளார், பின்னர் குழந்தையை வீட்டில் விட்டுள்ளார். </p><p>குழந்தை 4 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட மருத்துவமனையில் பரிசோதித்த போது தான் குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்து தெரியவந்துள்ளது.
</p><p>
இதனால் கடும்கோபமடைந்த பாட்டி, மாணிக்கத்தை தேடி வந்துள்ளார், குளித்தலை சுங்கச்சாவடி அருகே கண்டுபிடித்ததும் அவரை இழுத்து சென்று போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க சென்றுள்ளார்.
</p><p>
ஆனால் ஆத்திரம் தாங்காமல் அவரை சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார், இதனை பார்த்த உறவினர்களும் மாணிக்கத்துக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.
</p><p>
தகவலறிந்து விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் மாணிக்கத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T12:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூர் அரசு பணி! மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/karur-government-job-cancellation-updates-1786692116"></link>
            <id>https://ibctamilnadu.com/article/karur-government-job-cancellation-updates-1786692116</id>
            <summary type="text">கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது.
</p><p>
இதனை எதிர்த்து உச்சநீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, இதனை விசாரித்த மதுரைக்கிளை வேலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்தது.
</p><p>
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இன்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
</p><p>
மேலும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db97857-83e1-468b-9d04-3f852a63a0d7/26-6a7ec282b76fe.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:45:19+00:00</updated>
        </entry>
    </feed>
