<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-01T12:24:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kabini-dam-release-10000-cusecs-water-1785584428"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kabini-dam-release-10000-cusecs-water-1785584428</id>
            <summary type="text">கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வரத்து உள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வரத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>திறக்கப்பட்ட நீர் தமிழ்நாடு எல்லையை திங்கள்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9011612-7159-4ae8-a252-0bca728f23c1/26-6a6ddd6017812.webp' /></p><h2>உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்&nbsp;</h2><p>

இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.</p><p>

மேலும், காவிரி நீர் விவகாரத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p> மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், நீரை தொடர்ந்து தேக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-leader-scathing-criticism-on-cm-vijay-1785570287"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-leader-scathing-criticism-on-cm-vijay-1785570287</id>
            <summary type="text">காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>

இதையடுத்து, தமிழக முதல்வர் ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae744c3f-ae53-4f2e-af1e-9c0056ffc536/26-6a6da745c7ad5.webp' /></p><p>

இந்நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழக முதல்வர் தனது கர்நாடகப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.</p><p>தமிழக முதல்வர் வருகையின்போது கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், சூழல் சரியாக இல்லாத நிலையில் வேறு ஒரு நாளில் சந்திப்பது சிறந்தது என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b8047f-dc1a-4ccf-b05a-7ffd8ef8bffa/26-6a6da74678b49.webp' /></p><p>
</p><h2>ஸ்டாலின் அறிக்கை</h2><p>
இதற்கிடையே, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வரின் முடிவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் பயன் இல்லை என்றும், சட்டரீதியான நடவடிக்கைகளே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி கர்நாடகா செல்ல முயன்றதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், கர்நாடக அரசு தற்போது சந்திப்பை தவிர்க்கும் நிலைக்கு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.</p><p>
கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மாநிலத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T09:25:16+00:00</updated>
        </entry>
    </feed>
