<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-14T09:07:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூர் அரசு பணி! மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/karur-government-job-cancellation-updates-1786692116"></link>
            <id>https://ibctamilnadu.com/article/karur-government-job-cancellation-updates-1786692116</id>
            <summary type="text">கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது.
</p><p>
இதனை எதிர்த்து உச்சநீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, இதனை விசாரித்த மதுரைக்கிளை வேலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்தது.
</p><p>
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இன்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
</p><p>
மேலும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db97857-83e1-468b-9d04-3f852a63a0d7/26-6a7ec282b76fe.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்புக்கு கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு! எழுந்தது சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/us-belgium-diamond-ring-to-trump-1786688937"></link>
            <id>https://ibctamilnadu.com/article/us-belgium-diamond-ring-to-trump-1786688937</id>
            <summary type="text">Belgium Diamond Ring to Trump: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த Antwerp World Diamond Centre - AWDC மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belgium Diamond Ring to Trump: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த Antwerp World Diamond Centre - AWDC மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த மோதிரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் 321 வைரங்கள், மரகதம், மாணிக்க கற்கள் மற்றும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட சுமார் 25,000 முதல் 35,000 டொலர் மதிப்பு கொண்ட மோதிரம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு பரிசாக வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d59ccd-6c88-4ea3-9f2f-eb25bb1eb31d/26-6a7eb664db6a7.webp' /><br></p><p>
</p><p>
இது கொடுக்கப்பட்ட சில வாரங்களில் ஐரோப்பிய இயற்கை வைரங்களை இறக்குமதி செய்வதற்கான முழு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. </p><p>வரிவிலக்கு பெறுவதற்கான லஞ்சமா என அமெரிக்கா ஜனநாயக கட்சி செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்துள்ள AWDC, சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்றும் வரி விலக்கு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் இதற்கு எந்தவித சம்மந்தமும் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-14T06:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உள்ள 49 மீனவர்களை: முதலமைச்சர் விஜய் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-urges-release-49-fishermen-held-in-srilanka-1786682438"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-urges-release-49-fishermen-held-in-srilanka-1786682438</id>
            <summary type="text">இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய் கடிதம்</h2><p>இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், “12.08.2026 அன்று இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
</p><p>
இந்த சம்பவம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>
 இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் ஏற்பட்டு மிருந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
</p><p>இந்த நாள் வரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
</p><p>
மேலும், இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இந்த விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிர்மதியையும் அளிக்கும்.</p><p> இந்த கடிதம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின், உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T04:43:34+00:00</updated>
        </entry>
    </feed>
