<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-17T13:29:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/india-joins-operating-hydrogen-powered-trains-1784283497"></link>
            <id>https://ibctamilnadu.com/article/india-joins-operating-hydrogen-powered-trains-1784283497</id>
            <summary type="text">இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் ஹரியானா முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.</p><p> தொடக்க விழாவில் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a478c1b7-a7b9-4015-a44b-427d890b5e6e/26-6a5a035f3fd73.webp' /></p><p>
</p><p>
ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) ரயில் நிலையத்திலிருந்து சோனிபட் (Sonipat) வரை இயக்கப்படும் இந்த பசுமை ரயில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து இயங்குகிறது. இதன் இயக்கத்தின் போது நீரும் நீராவியும் மட்டுமே வெளியேறுவதால், காற்று மாசு ஏற்படாது.
</p><h2>
ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்</h2><p>

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜிய மாசு: இந்த ரயில் இயங்கும்போது நச்சுப் புகை அல்லது கார்பன் உமிழ்வு எதுவும் ஏற்படாது. </p><p>வெளியேறும் ஒரே கழிவு நீரும் நீராவியும் மட்டுமே.
நவீன தொழில்நுட்பம்: ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் ரயிலுக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன்மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.
</p><p>வேகம் மற்றும் வசதிகள்: 10 பெட்டிகளைக் கொண்ட இந்த நவீன ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ளது.
</p><p>
இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயணம் செய்தனர். இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது முக்கியமான அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Prime Minister <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> flags off India&#39;s first Hydrogen train between Jind and Sonipat at Jind railway station<a href="https://x.com/hashtag/HydrogenTrain?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HydrogenTrain</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%A4_%E0%A4%95%E0%A5%80_%E0%A4%AA%E0%A4%B9%E0%A4%B2%E0%A5%80_%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%87%E0%A4%A1%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%8B%E0%A4%9C%E0%A4%A8_%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%87%E0%A4%A8?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#भारत_की_पहली_हाइड्रोजन_ट्रेन</a> <a href="https://x.com/RailMinIndia?ref_src=twsrc%5Etfw">@RailMinIndia</a> <br><br>Watch: ⬇️ <a href="https://t.co/j1lJCliqRs">pic.twitter.com/j1lJCliqRs</a></p>&mdash; PIB India (@PIB_India) <a href="https://x.com/PIB_India/status/2077999438166147580?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபரி வர்மன் மரணம்.., நிவாரண உதவிகளை ஏற்க மறுத்த குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sabari-varman-family-denied-the-helps-1784282939"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sabari-varman-family-denied-the-helps-1784282939</id>
            <summary type="text">கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சபரி வர்மன் என்பவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சபரி வர்மன் என்பவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

சபரி வர்மன் மரணம்
</h2><p>
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்தவர் சபரி வர்மன் (35).&nbsp;&nbsp;</p><p>மாற்றுத்திறனாளியான இவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c220b139-b4ab-4cb0-aae3-6bd671b6d5f9/26-6a59ff3d6463c.webp' /></p><p>சபரி வர்மனின் மரணத்துக்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினர் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விக்கு உதவி, வீட்டுமனை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் நேற்று சபரிவர்மனின் வீட்டிற்கு சென்றனர்.
</p><p>
அப்போது, அமைச்சர்கள் வழங்க முன்வந்த நிவாரண உதவிகளை அவர்கள் ஏற்க மறுத்தனர்.&nbsp;</p><h2>குடும்பத்தினர் கூறுகையில்.,</h2><p>

சபரி வர்மன் உயிரிழந்தது குறித்து முதல்வர் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. </p><p>

சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தன. ஆனால், அந்த காயங்களால் உயிரிழப்பு ஏற்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.&nbsp;&nbsp;</p><p>பிரேத பரிசோதனை வீடியோவை எங்களது தரப்பு மருத்துவக் குழுவிடம் வழங்கி ஆய்வு செய்ய உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a895fa63-9c0b-457b-9765-ba951776bb09/26-6a59ff3e157b0.webp' /></p><p> 

சபரி வர்மன் உயிரிழந்த நேரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அறிக்கையில் தவறு இல்லை என்பது உறுதியானால் உடலை வாங்கத் தயாராக உள்ளோம்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக சிறை வார்டன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறையில் இருந்த 8 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களில் சிலர் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை திசைதிருப்பும் முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T10:25:47+00:00</updated>
        </entry>
    </feed>
