<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-15T15:31:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வரின் துறையில் டெண்டர் முறைகேடு - மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tambaram-corp-commissioner-wait-list-tender-scam-1789480784"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tambaram-corp-commissioner-wait-list-tender-scam-1789480784</id>
            <summary type="text">tambaram corporation commissioner to waiting list for tender scam: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>tambaram corporation commissioner to waiting list for tender scam: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><h3>

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு புகாரில் நடவடிக்கை</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.&nbsp;</p><p>

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6063eed-e4f8-4bcb-9994-f4682d655272/26-6aa94f525bbce.webp' /></p><p>

மேலும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை, ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது. </p><p>

இன்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e124159-1c0b-4598-b323-e38bc1342649/26-6aa94f5310707.webp' /></p><p>

மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா ஐஏஎஸ், கூடுதலாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் என அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T13:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/us-confirms-it-deployed-weapons-in-space-orbit-1789465637"></link>
            <id>https://ibctamilnadu.com/article/us-confirms-it-deployed-weapons-in-space-orbit-1789465637</id>
            <summary type="text">விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

விண்வெளியில் ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா 

தகவல் தொடர்பு, அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><h3>

விண்வெளியில் ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா</h3><p> 

தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.&nbsp;</p><p>
இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><p>

விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய அமெரிக்க விமானப்படைச் செயலர் ட்ராய் மெய்ங்க், “விரோதமான எதிரிகளின் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுப் படையைப் பாதுகாக்கக்கூடிய, சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை அமெரிக்கா கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b71f2e8b-55d4-4590-98b3-674fd893a39e/26-6aa9142725f66.webp' /></p><p>

மேலும், விண்வெளிக் கட்டுப்பாட்டுத் திறன்கள் ஒரு எதிரியைப் பாதிக்க இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தக்கூடும், அவை தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார். </p><p>

எதிர்காலத்தில் சாத்தியமுள்ள மோதலில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்வதற்கான வழிகளை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டி, விண்வெளியில் இராணுவத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மூத்த இராணுவத் தலைவர்கள் கூறியிருந்தனர். </p><p>

ஆனால், எந்த வகையான ஆயுதங்கள், ஆயுதங்களின் எண்ணிக்கை, அதன் இருப்பிடம், எப்போது நிலைநிறுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. </p><p>

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், "அமெரிக்கத் தரப்பு தனது இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதையும், விண்வெளியில் போருக்குத் தயாராவதையும் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:49:55+00:00</updated>
        </entry>
    </feed>
