<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-18T08:19:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/2009-karunanidhi-hunger-strike-1787036482"></link>
            <id>https://ibctamilnadu.com/article/2009-karunanidhi-hunger-strike-1787036482</id>
            <summary type="text">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.<br></p><p>
இந்த தீர்மானம் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p>இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.<br></p><p>

கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என பேசினார்.</p><p>

இதனையடுத்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், "தங்கள் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைப்பெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.&nbsp;</p><p>இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும் தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.<br></p><h3> 

3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம்</h3><p>

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. 

உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>

இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.&nbsp;</p><p>கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.<br></p><p>
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழக முதல்வர் மட்டுமே. இன்று தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் முதல்வரின் குரலாக இருக்கும்.&nbsp;</p><p>

ஒரு சிலருக்கு திடீர் தமிழ் தமிழர் பாசம் இருக்கும் இதெல்லாம் நாம் வரலாற்றில் பார்த்தது தான்.&nbsp;</p><p>2009 ஆம் ஆண்டில் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்விகளில், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என பேசினார்.<br></p><p>

இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சரை உட்கார சொன்ன சபாநாயகர் தீர்மானம் தவிர்த்து மற்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tLFYF3UKXVw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வயதுக்கு மேல் கட்டணமின்றி உடல்நல பரிசோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/arunraj-speaks-master-health-checkup-1787024536"></link>
            <id>https://ibctamilnadu.com/article/arunraj-speaks-master-health-checkup-1787024536</id>
            <summary type="text">Master Health Checkup in TN Government Hospital: 30 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த உடல்நலப் பரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Master Health Checkup in TN Government Hospital: 30 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த உடல்நலப் பரிசோதனைகள் கட்டணமின்றி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
</p><p>
தமிழகசட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், தமிழகத்தில் அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்களில் ’நலம் ஒருங்கிணைந்த இலவச உடல்நலப் பரிசோதனை” திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p>
இதன்மூலம் 30 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு 14 வகையான உடல்நலப் பரிசோதனைகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ki8j9ZSHSNE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-18T03:46:31+00:00</updated>
        </entry>
    </feed>
