<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-25T14:02:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-keerthana-about-parandur-acquisition-land-1787664849"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-keerthana-about-parandur-acquisition-land-1787664849</id>
            <summary type="text">minister keerthana about acquisition land for parandur airport: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister keerthana about acquisition land for parandur airport: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.</p><h3>

பரந்தூரில் மாற்று திட்டம்
</h3><p>
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1179d39f-ab58-4f41-9a1c-208152d42a79/26-6a8d99d36bf9e.webp' /></p><p> 

இதனால் சென்னையின் தொழில் வாய்ப்புகள் பறிபோகும், ஏற்கனவே 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என அரசின் இந்த முடிவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.</p><p> 

இன்றைய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இது குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் காரசாரமாக விதித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41851c95-bd61-4da7-a882-1ea3071a2066/26-6a8d99d4202be.webp' /></p><p> 

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என அதிமுக எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலமும் கையகப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55da936-badc-4ddf-ba41-c8bd249b289b/26-6a8d99d2bc391.webp' /></p><p>

பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>

இதனையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9886ff6-0b7c-4a5b-b598-464fb373edc0/26-6a8d99d4c6c5e.webp' /></p><p>
இதனிடையே பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், ஒரு திட்டதிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. அல்லது நிலத்தை மக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இதில் அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0fbcc3d-09f4-4d3c-9a1f-4f4b191f2cf3/26-6a8d99d57668f.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, "ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம், அந்த திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T13:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: விஜய்க்கு வைரமுத்து நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870</id>
            <summary type="text">Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, கடந்த யூன் மாதம் 10ம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b69413-944d-4e95-b06b-63c4d92c0a29/26-6a8d605670397.webp' /><br></p><p>
</p><p>
இதனை பாராட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இயக்குநர் இமயம்
பாரதிராஜாவுக்கு
மணிமண்டபம் கட்டும் 
அறிவிப்பை வெளியிட்ட
தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர் 
ஜோசப் விஜய் அவர்களுக்கும்
கோரிக்கையை 
முதலில் முன்வைத்தவன்
என்ற முறையில்
என் முதல் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அல்லி நகரத்தின் கலாசாரத்துக்கு
டெல்லி நகரத்து
அங்கீகாரம் பெற்றுத்தந்த
பெருங்கலைஞர் பாரதிராஜா

அடித்தட்டு மக்களின்
கனவுகளை நம்பிக்கைகளை
வாழ்வியலை விழுமியங்களைக் 
காட்சிப் படுத்திய
கலைப் பெருமகன்

அவருக்கான மணிமண்டபத்தை
அவர் பிறந்த 
தேனி மாவட்டத்திலேயே
அமைப்பது என்பது
அவருக்கு அரசு வழங்கும்
கடைசி மரியாதையாகும்
</p><p>
தமிழ்நாட்டு அரசுக்கு
என் முதல் மரியாதை

மீண்டும் நன்றி.<br></p>]]></content>
            <updated>2026-08-25T09:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[3400 முத்தங்களுடன் வலம் வந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058"></link>
            <id>https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058</id>
            <summary type="text">Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் முத்தங்கள் பதித்த கார் ஒன்று வலம் வருவதாக சமூகஊடகங்களில் வீடியோ வைரலானது.
</p><p>
குறித்த காரில் சுமார் 3400 முத்தங்கள் இருந்துள்ளன, இதுகுறித்து விசாரணை நடத்த காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாரை போலிசார் அழைத்து சென்றனர்.</p><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852490ae-be5e-4db8-90bb-08d8d429edae/26-6a8d4ce3e1066.webp' /><br></p><p>தன்னுடைய காதலி சுமார் 3.5 மணிநேரம் செலவழித்து காரில் 3400 முத்தங்களை இட்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும் சட்டப்படி குற்றம் என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதனைதொடர்ந்து அவருக்கு 5500 ரூபாய் அபராதம் விதித்த போலிசார், முத்தங்களை அழிக்க உத்தரவிட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974ba034-26d3-4bb6-81c9-b2ce2bab700e/26-6a8d4ce49267d.webp' />&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
    </feed>
