<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-16T11:23:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736</id>
            <summary type="text">Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. </p><p>

இதற்காக ஜனநாயக அறை திறக்கப்பட்டு போட்டியாளர்கள் ஆளும் அணி, எதிர் அணி என இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர்.</p><p> 

ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும்.
</p><p>
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடி, நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை அவர் சுட்டிக்காட்டுவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6767ef0-a27d-4ff4-b243-06de08f42cd9/26-6aaa50f23b07d.webp' /></p><p>இந்நிலையில், தலைமைப் பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சனைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.
</p><p>
விஜய் சேதுபதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் முதலமைச்சர் விஜய்யை தாக்கிப் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p> 

இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
</p><h2>
வெளியிட்டு பதிவு&nbsp; &nbsp;&nbsp;</h2><p>பிக்பாஸ் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?</p><p>மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/BiggBoss10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss10</a> தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர்… <a href="https://t.co/35RzihSat7">pic.twitter.com/35RzihSat7</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099833952609644967?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
</p><p>
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
</p><p>இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
</p><p>இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
</p><p>இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?&nbsp;</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.</p><p>அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
</p><p>ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். </p><p>
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!</p><p>
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
</p><p>வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!&nbsp; என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மும்பை: ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449"></link>
            <id>https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449</id>
            <summary type="text">மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
</p><p>
 மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. </p><p>இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன் பிச்சைக்காரராக மாறினார் என்கின்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த இவர் தங்களுடைய புனித கால வழிபாட்டின் பொழுது தன்னுடைய ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8b3aac-3624-4159-b618-7a7e80bdb7f6/26-6aaa480342971.webp' /></p><p> அப்போது அவரது குரு வாழ்க்கையில் எதார்த்தமான நிலையையும், ஏழை மக்களுடைய கஷ்டங்களையும், மனிதர்களுடைய உண்மையான முகங்களையும் நேரில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்.</p><p>

 அவ்வாறு குருவினுடைய கட்டளையின் படி தன் வசம் இருந்த சொகுசு கார்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் விலை உயர்ந்த ஆடைகள் என எல்லாவற்றையும் ஒரு நாள் முழுவதும் துறந்து வாழ எண்ணினார்.</p><p></p><p>இதை அடுத்து மக்கள் யாரும் அவரை அறிந்து கொள்ள முடியாத அளவு முகத்தில் அழுக்குகளை பூசிக்கொண்டு கிழிந்த ஆடைகளை அணிந்தபடி பராக் ஷா மும்பை காட் கோபர் வீதிகளில் பிச்சைக்காரராக வலம் வருகிறார். வீதியோரம் அமர்ந்து கையேந்தி யாசகம் பெறுகிறார். சொந்த செக்யூரிட்டியே விரட்டி இருக்கிறார். </p><p>இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கையில் அவருக்கு பல வகையான அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் கூறுவது, தான் ஒரு பிச்சைக்காரர் வேடம் அணிந்து தன்னுடைய சொந்த அலுவலக குடியிருப்பு வளாகத்திற்குள் செல்கின்ற பொழுது அங்கு வேலை பார்க்கக் கூடிய அவரது சொந்த செக்யூரிட்டியே என்னை அடையாளம் தெரியாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் என்கிறார்.</p><p>ஆனால், எப்போதும் உதவி செய்யக்கூடிய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையேந்தி நின்று இருக்கிறார். ஆனால், அவரும் அடையாளம் தெரியாமல் விரட்டி இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் மும்பை வீதியில் சில இளைஞர்கள் அவருடைய நிலையை கண்டு பரிதாபம் அடைந்து உணவும், இருபது ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca96eb2-ed44-484b-ad5c-ff452daba9c9/26-6aaa4803f1f86.webp' /></p><p> அங்கு இருக்க கூடிய சமோசா வியாபாரி எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அவருக்கு இலவசமாக சமோசா கொடுத்து உபசரித்து இருக்கிறார். பணம் பதவி புகழ் எல்லாம் மனிதர் வாழ்க்கையில் அகங்காரத்தை உண்டாக்கி விடுகிறது.</p><p> இந்த பிச்சைக்காரர் அனுபவம் அவருக்கு அகங்காரத்தை அழித்து விட்டதாகவும் இவர் பதவியில் இருக்கின்ற பொழுது பல மணி நேரம் காத்திருந்தவர்கள் இவருடைய தகுதியை இழந்து ஏழையாக நின்றபொழுது அவர்களை விட உயர்ந்தவர்களாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.</p><p></p><p> </p><p>அவர் இறுதியாக கூறுவது, இந்த சமோசா வியாபாரி போன்ற எளிய மனிதர்களிடம் தான் உண்மையான அன்பு இருக்கிறது என்றும், இந்த சமூகம் மனிதர்களை மதிப்பதே இல்லை என்றும், ஒருவரிடம் இருக்கக்கூடிய பணம் மற்றும் பதிவியை மட்டும் தான் வைத்து அவர்களை மதிக்கிறார் என்றும், அவருடைய அந்த பிச்சைக்காரர் வாழ்க்கை அவருக்கு புரிய வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். </p><p>கோடீஸ்வரர் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பிச்சைக்காரராக மாறி வலம் வந்த இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674</id>
            <summary type="text">cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h3>லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f71e3c1-6c07-47b1-82b7-ee9113190bac/26-6aaa3d2b70e5b.webp' /></p><p>
இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p> 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116b7073-a8cc-445c-b2cb-d246d0d211e0/26-6aaa3d2c2974e.webp' /></p><p>

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். </p><p>

அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார். </p><p>

இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 <a href="https://t.co/KNblC89hAQ">pic.twitter.com/KNblC89hAQ</a></p>&mdash; priya (@PriyankaSmile01) <a href="https://x.com/PriyankaSmile01/status/2099908631135404048?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0daea9-5b43-4d6c-b6cb-bec198a77197/26-6aaa3d2cd62d2.webp' /></p><p>

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14714b1-8281-4531-95e7-fce3d732d79b/26-6aaa3d2d8bba8.webp' /></p><p> 

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கழன்ற சக்கரம்.., அவசர தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045"></link>
            <id>https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045</id>
            <summary type="text">Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p><h2>விமானம் அவசர தரையிறக்கம் </h2><p>

ஈரானைச் சேர்ந்த செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டது.
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afa30dc-b753-4724-bb03-0123865534c3/26-6aaa3e9f24a6e.webp' /></p><p>இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.
</p><p>
இதையடுத்து விமானம் மஷ்ஹத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.&nbsp;</p><p>என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட அதிர்வில் விமானத்தின் உட்புற மேற்கூரை, விளக்குகள் மற்றும் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.</p><p>
</p><h2>
பயணிகள் பத்திரமாக மீட்பு</h2><p>இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. </p><p>

அதில், விமானம் விபத்துக்குள்ளாகும் என அச்சமடைந்த பயணிகள் அலறும் காட்சிகளும், பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">An aviation incident occurred in Iran involving a Sepehran Airlines Boeing 737-300. <br><br>After a landing gear tire burst post-<br>takeoff causing engine damage and severe vibrations the plane safely made an emergency landing<br><br>No injuries were reported among the 127 passengers. <a href="https://t.co/DCYgZykQM5">pic.twitter.com/DCYgZykQM5</a></p>&mdash; Ramesh Speaks (@rameshofficial0) <a href="https://x.com/rameshofficial0/status/2100080762062278716?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
