<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-07T14:28:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/byelection-announced-for-maduranthakam-dharamapuri-1788784373"></link>
            <id>https://ibctamilnadu.com/article/byelection-announced-for-maduranthakam-dharamapuri-1788784373</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல்(மதுராந்தகம்), ஜெயக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல்(மதுராந்தகம்), ஜெயக்குமார்(பெருந்துறை), சத்யபாமா(தாராபுரம்), இசக்கிசுப்பையா(அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
</p><p>
இவர்களை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர்(விராலிமலை) மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(கரூர்) தொகுதி எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
</p><p>
இத்துடன் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து 7 தொகுதிகள் காலியானதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3835c55f-fe9f-41f3-a60a-a19ab2b0e151/26-6a9eaf39aa8b3.webp' /><br></p><p>

இந்நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அக்டோபர் 6ம் தேதி வாக்குபதிவு நடைபெற்று அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-07T12:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட ரத்தீஷ் என்பவர் யார்? காயத்ரி ரகுராம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326"></link>
            <id>https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326</id>
            <summary type="text">சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.</p><p>இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,&nbsp; அவரிடம் ஆதாரம் உள்ளதா? உங்கள் நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவரது மச்சான் சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கின்றனர்? அரசு கனிம வளங்களை கையாளும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது, அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் ரத்தீஷ் குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ரத்தீஷ் என்பவர் யார்? இவர் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்யின் நண்பர் என்று கூறப்படும் சுஜய் ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2620ec02-ab26-475b-9aab-eb6e921e24aa/26-6a9e804a8b184.webp' /><br></p><p> சுஜய் ரெட்டி, முன்னாள் துணை முதல்வர் உதயநிதியுடனும் முன்பு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறவு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>மேலும், ரத்தீஷுடன் இணைந்து முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதோடு, நிதி ரீதியாகவும் பலன் பெற்றதாகக் கூறப்படும் ஒரு அதிகார மையத்தின் ஒரு பகுதியாக சுஜய் ரெட்டி இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
</p><p>
ரத்தீஷ் மீது தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றால், சுஜய் ரெட்டியிடம் ஏன் கேள்வி கேட்கப்படவில்லை அல்லது அவர்மீதும் விசாரணை நடத்தப்படவில்லை? </p><p>ரத்தீஷ் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றால், அவருடைய நெருங்கிய தொடர்புகளான சுஜய் ரெட்டி, அண்ணாமலை (செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் நண்பர்), காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் அதே அதிகார வலையமைப்பின் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய மற்ற அனைவரும் ஏன் விசாரிக்கப்படக்கூடாது?
</p><p>
அன்புள்ள முதல்வரே, நீங்கள் உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருந்தால், உங்கள் நண்பர்களான சுஜய் ரெட்டி, அண்ணாமலை, காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் பிற நெருங்கிய தொடர்புகளுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். </p><p>இப்போது சுஜய் ரெட்டி தவெக-வின் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளார். அவர்களின் அரசியல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் ஒரே அளவிலான பொறுப்புக்கூறலும் நீதியும் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T09:13:51+00:00</updated>
        </entry>
    </feed>
