<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-31T13:26:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்ட அச்சம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடக பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902</id>
            <summary type="text">காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அந்தச் சந்திப்பைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்</h2><p>

காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a60c70a-268d-4722-a526-ff6b6308bd1f/26-6a6c74290c0b4.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வரும்போது போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், தற்போதைய சூழலில் பயணத்தைத் தவிர்த்து, உரிய சூழல் உருவான பிறகு வேறு ஒரு தேதியில் சந்தித்து பேசலாம் என தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், கர்நாடகத்தின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:09:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் தற்போது கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630</id>
            <summary type="text">முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவேரி விவகாரம் 

தமிழ்நாட்டிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h3>

காவேரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d9250e-04a9-457c-b694-9b036286d2ba/26-6a6c70b122eb9.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p> 


இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296febb4-6091-44cb-94b5-9ba6b6f6c019/26-6a6c70b073435.webp' /></p><p>

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

காவேரி விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b8fe78-71eb-493e-a34c-80abdb27892e/26-6a6c70afc273f.webp' /></p><p>தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். 

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T09:53:58+00:00</updated>
        </entry>
    </feed>
