<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-22T08:52:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி CJP போராட்டம்: முதலமைச்சர் விஜய்யின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-about-neet-issue-1784709502"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-about-neet-issue-1784709502</id>
            <summary type="text">நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.&nbsp;<br></p><p>இதுதொடர்பாக எக்ஸ் தள பதிவில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298c5425-5173-4ee8-9434-5df49be22fd6/26-6a6081f87d970.webp' /><br></p><p> </p><p>ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.</p><p>

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. </p><p> மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542925d3-6335-4dea-8e38-9c6164406f75/26-6a6081f7cd7cd.webp' /><br></p><p>
</p><p>
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். </p><p>ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. </p><p>இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
</p><p>
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hsRl8J2Shgc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/july-22nd-2026-gold-and-silver-price-in-chennai-1784701354"></link>
            <id>https://ibctamilnadu.com/article/july-22nd-2026-gold-and-silver-price-in-chennai-1784701354</id>
            <summary type="text">தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்., இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்., இன்றைய (ஜூலை 22) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.</p><p>

ஜூலை மாத தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக சரிவைச் சந்தித்தது.அதன் பின்னர் சில நாட்கள் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமான தங்கம், கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8c7f55-0684-40bb-8282-814333f21621/26-6a60647b180f1.webp' /></p><p> ஆனால் அந்த நிலை நீடிக்காமல், தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்வுப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
</p><p>
நேற்றைய (ஜூலை 21) நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa1478c-5d2e-4544-a107-ea014f33a2c8/26-6a60647bbb50d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இன்று (ஜூலை 22) தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.11,245-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.89,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f245948-10ab-4f84-8619-ce580fa38e7f/26-6a60647c69da9.webp' /></p><p>
</p><p>
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T06:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tension-in-delhi-due-to-cjp-protest-1784697931"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tension-in-delhi-due-to-cjp-protest-1784697931</id>
            <summary type="text">டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீட்தேர்வு குளறுபடிகளுக்கு பொறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நீட்தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
</p><p>
அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போலிசார் விரட்டியடித்து வருகின்றனர், இவர்களின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.</p><p>

இந்நிலையில் விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
</p><p>
நிலையை கட்டுக்குள் கொண்டு வர மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fV_Y3l8BJk8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசின் இரட்டை வேடம்: உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-tvk-neet-issue-1784690264"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-tvk-neet-issue-1784690264</id>
            <summary type="text">நீட் விஷயத்தில் ஆளும்கட்சியான தவெக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

நீட் முறைகேடுகளை கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் விஷயத்தில் ஆளும்கட்சியான தவெக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
</p><p>
நீட் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இந்தியா முழுவதும் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.</p><p>

இந்நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடத்திய அமைப்பினரை போலிசார் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400a66c5-a877-485a-857e-e31f70be7944/26-6a6036feb3ed7.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
</p><p>
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது நீட் விஷயத்தில் ஆளும்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
</p><p>
மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோபா மாடல் அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். </p><p>கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e83449e-c598-495d-bda8-98bd4a55685c/26-6a6036ff65be7.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-22T03:20:53+00:00</updated>
        </entry>
    </feed>
