<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-15T11:32:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் தடுப்பில் இணையும் கேரளா - தமிழ்நாடு : முதல்வர் விஜய்க்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-joins-actor-mohanlal-for-drug-awareness-1784113100"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-joins-actor-mohanlal-for-drug-awareness-1784113100</id>
            <summary type="text">கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
</p><p>
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளம் மற்றும் தமிழ்நாடு இணைந்து போதைப்பொருள் தடுப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f377f3-3463-45ef-a996-17c8fb3d8528/26-6a576bc82f0f4.webp' /></p><p> எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு மாநிலங்களும் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>

மேலும், கேரள அரசின் பிராண்ட் தூதரான நடிகர் மோகன்லாலும், முதலமைச்சர் விஜயும் இணைந்து கேரளத்தில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d0c511b-f91d-46a6-8aac-4c0044c6c0d1/26-6a576bc8d4ee9.webp' /></p><p>

போதைப்பொருள் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சவாலாக இருப்பதால், கேரளம்–தமிழ்நாடு இணைந்து நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், தென்னிந்திய அளவில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரளத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தகவல் கேட்டறிந்ததாகவும் ரமேஷ் சென்னிதலா கூறினார்.</p>]]></content>
            <updated>2026-07-15T11:15:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பார்க்கிறார்கள்: செந்தில் பாலாஜி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121</id>
            <summary type="text">திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தவெக ஆட்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி</h2><p>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்.</p><p>நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன் சென்னை திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.</p><p>போலிஸ் நிலையத்தில் அவர் ஆஜராகாத நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc3be65-849b-4faf-b62d-b1e534eba3d0/26-6a572deb03004.webp' /><br></p><h2>செந்தில் பாலாஜி கடிதம்</h2><p>அந்த கடிதத்தில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் எங்கும் ஓடிஒளியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் வழக்கின் விசாரணைக்காக தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q1WgXyV-1gw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:10:16+00:00</updated>
        </entry>
    </feed>
