<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-11T16:01:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826"></link>
            <id>https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826</id>
            <summary type="text">காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டையே பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

ரங்காரெட்டி மாவட்டம் ராய்வலகூடா பகுதியைச் சேர்ந்த 28 வயது ராஜ்குமார், சிறுமியை ஒருதலையாக காதலித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781f2e7d-4473-4bcf-9070-02ebeb6ca96c/26-6a52520a8504d.webp' /></p><h2>புகார் கொடுத்ததால் ஆத்திரம்</h2><p>போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறுமியின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், இரவில் கத்தியுடன் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கொலை செய்து, சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.</p><p>காரில் கடத்தப்பட்ட சிறுமியை, வழியிலிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவளால்தானே நாம் ஜெயிலுக்குப் போனோம் என்ற ஆத்திரத்தில், அங்கேயே கத்தியால் குத்தி கொன்று, அருகிலிருந்த ஏரிக்கரையில் சடலத்தை வீசி எறிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3841dd5b-77e8-4dc8-9871-acac0a2b2dca/26-6a52520b325e0.webp' /></p><p>அத்துடன் நிறுத்தாமல், அதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்ற அவர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><p>சம்பவத்துக்குப் பிறகு தனது தந்தைக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உயிரிழப்பு - முதல்வர் விஜய் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-condolences-for-vietnam-boat-accident-1783778060"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-condolences-for-vietnam-boat-accident-1783778060</id>
            <summary type="text">வியட்நாமில் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வியட்நாமில் படகு விபத்தில் 8 தமிழர்கள் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். </p><h3>

வியட்நாமில் படகு விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழப்பு
</h3><p>
வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் புறப்பட்ட வேகப்படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0fde1a-0e12-4dd6-8188-34040956fe3d/26-6a524b0e410bf.webp' /></p><p>

இதில் அருகே இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மீட்பு குழு மூலம் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இதில் உயிரிழந்த 15 பேரில்,10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It is with profound grief that we share the list of 15 Indian nationals who have lost their lives in the tragic boat accident near Phuc Quoc Island today. The list has been recieved from the Vietnamese authorities.<br><br>Our prayers are with the families of the deceased. <br><br>The Embassy… <a href="https://t.co/2fr2TjXuPp">pic.twitter.com/2fr2TjXuPp</a></p>&mdash; India in Vietnam (@AmbHanoi) <a href="https://x.com/AmbHanoi/status/2075936490266464731?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

லாவா மொபைல் நிறுவனம் சிறப்பாக பணியாற்றியதற்காக சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இதில் 

பழனியை சேர்ந்த முருகபிரபு, திருச்சியை சேர்ந்த இருவர் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>
தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h3> 

முதல்வர் விஜய் இரங்கல் </h3><p>

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய் "வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f26df0-aa68-49cb-a412-7d718acce18e/26-6a524b0ee1329.webp' /></p><p> 
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். </p><p>
 
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p> 
 
 மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி  அறிந்து மிகுந்த மனவேதனையும்,…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2075933107002511496?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.</p><p> 

மேலும், இந்திய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T13:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் கருத்தியல் தலைமைத்துவத்தை சிதைக்க முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/thirumavalavan-talk-about-him-leadership-1783768864"></link>
            <id>https://ibctamilnadu.com/article/thirumavalavan-talk-about-him-leadership-1783768864</id>
            <summary type="text">விசிக தலைவர் திருமாவளவன், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலுக்குச் சென்று வழிபடவில்லை என்றும், தனது கருத்தியல் அடிப்படையிலான தலைமைத்துவத்தை சித...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசிக தலைவர் திருமாவளவன், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலுக்குச் சென்று வழிபடவில்லை என்றும், தனது கருத்தியல் அடிப்படையிலான தலைமைத்துவத்தை சிதைக்கும் நோக்கில் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>
காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 17 நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டத்தில் பேசிய போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>தொடர்ந்தும் பேசிய அவர், திமுகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து மட்டுமே தேவையற்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8dc3ef8-9630-4af7-ba3e-92154f9595c3/26-6a522982cf55a.webp' /></p><h2>பாஜக மீது வெறுப்பு இல்லை</h2><p> </p><p>மேலும், திராவிடக் கட்சிகளை அரசியலில் இருந்து ஒதுக்க முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
</p><p>
பாஜக மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை, கருத்தியல் ரீதியிலான வேறுபாடே இருப்பதாக கூறிய அவர், தனது பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநில அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன; அதுபோல் தமிழ்நாட்டிலும் அரசியல் ஒத்துழைப்பு இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-11T11:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக - அதிமுக கூட்டணி நியாயமானவை- டிடிவி தினகரன் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/will-dmk-and-aiadmk-unite-ttv-dhinakaran-1783764485"></link>
            <id>https://ibctamilnadu.com/article/will-dmk-and-aiadmk-unite-ttv-dhinakaran-1783764485</id>
            <summary type="text">மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் பேசியதாவது..,

பாஜகவை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
</p><h2>
அவர் பேசியதாவது..,
</h2><p>
பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வர வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்தை அரசியல் கருத்தாகவே பார்க்கிறேன் என்றார்.</p><p>

திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றிணைக்கும் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab3311c-e309-4291-b89e-967e7c604536/26-6a521607967f8.webp' /></p><p>இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதாகவும், அண்ணாவும் ராஜாஜியும் இணைந்தது அதற்கு உதாரணம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயம் என்றால், மற்ற கூட்டணிகளும் நியாயமானவையே என்றார்.&nbsp;</p><p>மேலும், இந்தத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை வலுவான அரசியல் சக்தியாக கருதினால், அவரை எதிர்கொள்ள மற்ற கட்சிகள் வியூகம் வகுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:14:32+00:00</updated>
        </entry>
    </feed>
