<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-10T14:42:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429</id>
            <summary type="text">தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

 முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். </p><h3>

 முதல்வர் விஜய் பேச்சு </h3><p>

இன்று கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். </p><p>

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c22017f-a89a-4b2f-975c-f31411bb27bc/26-6a51045f42889.webp' /></p><p>
குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா" என பேசினார். </p><p>

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.</p><h3>

தனி விமானம் பிடித்து ஓடியது யார்?</h3><p>

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde4d383-5849-4e14-8202-9f68dfa8dcd1/26-6a51045fe5015.webp' /></p><p>

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள். </p><p>அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
</p><p>
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T14:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/high-court-bans-by-election-to-5-constituencies-1783688392"></link>
            <id>https://ibctamilnadu.com/article/high-court-bans-by-election-to-5-constituencies-1783688392</id>
            <summary type="text">திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
</p><p>
இந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fdc3606-ef69-4b67-9836-bad856cc6cfd/26-6a50edf88782d.webp' /></p><h2>வழக்கு விசாரணை</h2><p>
</p><p>
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்குகள் முடிவடைவதற்கு முன் இடைத்தேர்தல் நடத்தினால் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசனச் சிக்கல் உருவாகும் என்றும், தேவையற்ற அரசு செலவும் ஏற்படும் என்றும் குறிப்பிட்டது.
</p><p>
இதையடுத்து, தேர்தல் வழக்குகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் வரை, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T13:05:16+00:00</updated>
        </entry>
    </feed>
