<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-17T08:21:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமுதனை கொன்றுள்ளனர்.. கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-speaks-about-amudhan-case-1786941919"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-speaks-about-amudhan-case-1786941919</id>
            <summary type="text">4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் விவாதம் ஏற்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
</p><p>
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கோவை கல்லூரி மாணவன் கொலையை அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதல் என கூறினார்.
</p><p>
இரண்டு தரப்புகள் அடித்துக்கொண்டால் தான் அது கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் சேர்ந்து அடித்துள்ளனர், போதைப்பொருள் பழக்கம் குறித்து தகவல் அளித்ததால் தான் அமுதனை கொன்றுவிட்டதாக அவரது பெற்றோர் கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68402d7f-0ee3-47e4-be30-ff2337d243e2/26-6a829252bb65d.webp' /><br></p><p>
</p><p>
திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளான், போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு நபருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.</p><p>

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல கொலைகள் நடந்துள்ளன, 100 நாள் சாதனை என பேசும் தவெக 100 நாட்கள் சட்டம் ஒழுங்கு குறித்தும் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SyHvfWMox18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் நீட்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/deadline-extended-for-lpg-cylinder-ekyc-aug-23-1786937272"></link>
            <id>https://ibctamilnadu.com/article/deadline-extended-for-lpg-cylinder-ekyc-aug-23-1786937272</id>
            <summary type="text">சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தம் நுகர்வோர் eKyc மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.<br></p><p>வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தம் நுகர்வோர் eKyc மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.
</p><p>
இதற்காக நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்ஸிக்கு நேரில் சென்றோ இதனை செய்ய முடியும்.
</p><p>
போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியான நபர்களுக்கு மானியம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் இதனை செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம் என்பது கூடுதல் தகவல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f2efe86-ceca-4dc1-9d68-54997aa9c8ae/26-6a8280cd79391.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:32:35+00:00</updated>
        </entry>
    </feed>
