<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-24T15:47:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரைப்படம் பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடிப்பது வெட்கக்கேடானது - சீமான் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-slams-tvk-ministers-cried-for-jananayagan-1784904432"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-slams-tvk-ministers-cried-for-jananayagan-1784904432</id>
            <summary type="text">காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சீமான் விமர்சனம் 

காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
</p><h3>
சீமான் விமர்சனம் </h3><p>

காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bca634-1e52-4732-9bde-25f1b9ff8a09/26-6a637af1a961e.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.
</p><p>
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். </p><p>

குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரசு அரசு கை விரித்துவிட்டது.
</p><p>
 காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. </p><p>

கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா? </p><p>

அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p> 

ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப்பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும்.</p><p> 

அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப்பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.</p><p>

ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. </p><p>

இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். </p><p>

அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.
</p><p>
ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T14:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரைசிங் பாரத் மேடையில் சுகாதாரம் முதல் நீட் வரை... அமைச்சர் அருண்ராஜ் கருத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-arunraj-speech-in-rising-bharath-event-1784886977"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-arunraj-speech-in-rising-bharath-event-1784886977</id>
            <summary type="text">சிஎன்பிசி மற்றும் நெட்வொர்க் 18 சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ரைசிங் பாரத் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிஎன்பிசி மற்றும் நெட்வொர்க் 18 சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ரைசிங் பாரத் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். </p><p>இதில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவம், நிர்வாகம், அரசியல், சுகாதாரம், நீட் மற்றும் போதைப் பழக்க ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac9aae0-87c7-42f0-a55d-524ced0b3c93/26-6a63395f3aa1e.webp' /></p><h2>அமைச்சர் அருண்ராஜ் பதில்</h2><p>

நிகழ்ச்சியில் நியூஸ் 18 நிர்வாக ஆசிரியர் விவேக் நாராயணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவராக இருந்தபோது ஏழை மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டதாகவும், சிவில் சர்வீஸில் இருந்தபோது நிர்வாக அனுபவத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.</p><p>அந்த இரு அனுபவங்களும் தற்போது அமைச்சராக பணியாற்றுவதற்கு பெரிதும் உதவுவதாக கூறிய அவர், இந்த மூன்று பொறுப்புகளில் அரசியலே மிகவும் சவாலானது என குறிப்பிட்டார். </p><p>மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான கவனத்தில் இருப்பதால் மிகுந்த பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நிலை அரசியலில் இருப்பதாக அவர் விளக்கினார்.</p><p>
தமிழ்நாடு ஏற்கனவே மருத்துவத் துறையில் முன்னணி மாநிலமாக இருந்தாலும், தரமான மருத்துவ சேவையை மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே அரசின் முக்கிய இலக்கு என அமைச்சர் தெரிவித்தார்.</p><p> குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்காக தனித்துவமான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் புற்றுநோய் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். </p><p>மேலும், மனநலப் பிரச்சினைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மருத்துவத் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அரசு செயல்படும் என உறுதியளித்தார்.

நீட் தேர்வு குறித்து பேசிய அமைச்சர், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார நிர்வாகம் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில் அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது நடைமுறையில் சவாலானது என்றும், மையப்படுத்தப்பட்ட சேர்க்கை முறைக்கு மாற்றாக மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

போதைப் பழக்க ஒழிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு போதைப் பழக்கம் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக கூறினார்.</p><p> கடந்த சில ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதை கட்டுப்படுத்த பள்ளி நிலையிலிருந்தே விழிப்புணர்வு மற்றும் மதிப்புக் கல்வியை வழங்க வேண்டும் என்றார். </p><p>சிறுவயதிலேயே சரியான சமூகப் பொறுப்புணர்வை உருவாக்கினால், எதிர்காலத்தில் குற்றங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:07:57+00:00</updated>
        </entry>
    </feed>
