<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-10T04:54:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் மீண்டும் கொடூர கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/murder-has-taken-place-in-chennai-udhayanidhi-1789015712"></link>
            <id>https://ibctamilnadu.com/article/murder-has-taken-place-in-chennai-udhayanidhi-1789015712</id>
            <summary type="text">தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,<br></p><p>

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>

‘சி.எம்.-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையா கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298deeb9-b6bb-4ebd-8fa4-f6ee7629c753/26-6aa2370ae51e0.webp' /><br></p><p>

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சரை காவல்துறையினரே காவல்துறையினரே டம்மி சி.எம். ஆக நினைக்கிறார்களா?
</p><p>
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
</p><p>

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்தது தெரியுமா,, இ.டி. என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று டைவர்ட் செய்யும் முதல்-அமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.</p><p>

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
</p><p>
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T04:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-viral-video-to-cm-vijay-1789014931"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-viral-video-to-cm-vijay-1789014931</id>
            <summary type="text">திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள வீடியோவில்,

என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள வீடியோவில்,
</p><p>
என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!
</p><p>
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.
</p><p>
அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறும் இருப்பதால், நான் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p><h2>

மிசாவில் கைதானேன்</h2><p>

நீங்கள் சொன்னது உண்மைதான்... பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில், அதை எதிர்த்து தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அப்போதிருந்த மத்திய அரசு 30.1.1976 இல் திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
</p><p>
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி, மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காகக் கோபாலபுரம் வீட்டிற்குக் காவல் துறையினர் வந்தார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LuISczBiSoQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>அன்றைக்கு நான் வீட்டில் இல்லை.

"பையன் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே தொலைபேசியில் அழைக்கிறேன், வந்து கைது செய்து கொள்ளுங்கள்" என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார்.</p><p> அடுத்த நாள் நான் வந்ததும் அவரே காவல்துறையினரை வரச்சொல்லி, கைது செய்யச் சொல்லிவிட்டார்.</p><h2>

சிறையில் கொடுமைகள்
</h2><p>
சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களைக் கொண்டுபோய் அடைத்ததே தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். </p><p>அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும்.
</p><p>
இரவில் தூங்க விடாமல் காவல்துறையினர் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து வேறு எங்களைக் கொடூரமாக அடிப்பார்கள். </p><p>அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே இறந்துபோனார்.

அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்கள் கூட இப்படி கைவைத்துத் தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். </p><p>இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன, நான் இல்லை என்று சொல்லவில்லை.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாகத் தமிழர்களுக்காகவும் - தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிறவர்கள் நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. </p><p>போராளிகள் எல்லாம் இதைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை.

நீங்கள் கொள்கைத் தலைவராகச் சொல்லும் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயம்தான்.</p><h2>

வரலாற்றை மாற்ற முடியாது</h2><p>

யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டப்பேரவையில் ஒரு நூலகம் இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அங்கே அனைத்து ஆவணங்களும் இருக்கும். </p><p>அங்கே சென்று என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள்! உண்மை என்னவென்று புரியும்.
</p><h2>
சர்க்காரியா கமிஷன்
</h2><p>
இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும் - எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலைப் பேசியிருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
</p><p>
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, மத்தியிலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.</p><p> இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையே நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். </p><p>அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95 சதவீத வழக்குகளில், இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். </p><p>பெரும்பாலும் அரசியல் பழி வாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்கு இருக்கும் அனைவருக்குமே நன்றாகத் தெரியும்.

உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கூட அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது.</p><p> இதெல்லாம் மத்திய அரசைக் கொள்கை எதிரியாகச் சித்தரிக்கும் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?
</p><h2>
சட்டப்பேரவை மாண்பை காத்திடுக</h2><p>

முதல்வர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.</p><p> பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அது. அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது.</p><p>

சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதை எல்லாம் விவாதம் செய்யுங்கள்.</p><p> அதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. அதை விட்டுவிட்டுத் தேவையில்லாத சர்ச்சைகளைச் சட்டப்பேரவையில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.</p><h2>

நீங்கள் சொன்னதை மறந்துவிட்டீர்களா?</h2><p>

நீங்கள் முதல்வரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது நீங்கள் என்னிடம்:

"தேர்தல் பிரசாரத்தில் உங்களை மிகவும் விமர்சித்துப் பேசிவிட்டேன், I am sorry Sir" என்று சொன்னீர்கள்.</p><p>

அதற்கு நான்: "பரவாயில்லை Brother,அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர், இனி யாரைப் பற்றிப் பேசும்போதும் அந்தக் கண்ணியத்தோடு பேசுங்கள்" என்று சொன்னேன். </p><p>அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல!

திரும்பவும் சொல்கிறேன்... ஒரு முதல்வருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்.</p><p> நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.
</p><p>
சட்டப்பேரவையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேல் நின்று போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
</p><p>
ஆனால் ரியாலிட்டி என்ன? உண்மை ஊரைத் தாண்டுவதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா... அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
</p><h2>
படுகுழியில் சட்டம்- ஒழுங்கு
</h2><p>
உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டம்-ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.
</p><p>
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னாடி கொண்டுபோய் இருக்கிறீர்கள்.
</p><p>
விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை.
</p><p>
அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் என்று சொன்னீர்கள், இப்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டும் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறீர்கள்.
</p><h2>
இது சரியான மாற்றமா?
</h2><p>
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 என்று சொன்னீர்கள், இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1,000 -ஐ கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
</p><p>
இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறீர்கள். அப்போது சொன்னதெல்லாம் ஒன்று, இப்போது செய்வதெல்லாம் ஒன்று.

மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், உண்மையிலேயே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது, இது சரியான மாற்றமா என்பதை கவனியுங்கள். </p><p>எது நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு, எது திறமையில்லாத அரசு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
</p><p>
குறிப்பாக, திமுக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால்... மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை, நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதனால் இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது நமக்கென்னவென்று இருக்கக் கூடாது. </p><p>அப்படி ஒரு எண்ணம் நம் சித்தாந்தத்திலேயே கிடையாது.

ஆட்சியை இழப்பதைத் திமுக என்றைக்குமே தோல்வியாக நினைத்தது இல்லை. </p><p>ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போன்று, இதை மக்கள் பணியின் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன்.</p><p>

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் - வளர்ச்சிக்காகவும் - மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
</p><p>
அவர்கள் தாத்தாவிற்காகச் சண்டை செய்தோம்...</p><p>

அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம்...</p><p>

இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம்...
</p><p>
இதுதான் நம் திமுகவின் வரலாறு. அந்த வரலாறு எப்போதும் மாறாது, மாறவும் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-10T04:41:34+00:00</updated>
        </entry>
    </feed>
