<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-23T11:40:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம்: மோடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pm-modi-announces-fast-track-courts-for-neet-1784803989"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pm-modi-announces-fast-track-courts-for-neet-1784803989</id>
            <summary type="text">நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.பிரதமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி பதிவு</h2><p>
</p><p>
இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே அரசின் முதன்மை என்பதைக் குறிப்பிட்ட அவர், தேர்வுத் தாள் கசிவில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0634046c-84a6-4c90-be89-b1015dd9b20a/26-6a61f3e395c06.webp' /></p><p>மேலும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த அறிவிப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விரைவு நீதிமன்றங்கள் மூலம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more important than the welfare and future of our youth!<br><br>We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-23T10:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை வாகனத்தை தனியாக தடுத்து நிறுத்திய பெண்- வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/woman-stops-police-vehicle-single-handedly-video-1784802288"></link>
            <id>https://ibctamilnadu.com/article/woman-stops-police-vehicle-single-handedly-video-1784802288</id>
            <summary type="text">கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>

டெல்லியில் தொடங்கிய நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி வருகின்றது.
</p><p>
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

இந்நிலையில், மும்பையில் இன்று காலை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mumbai today <br><br>Girl stood in front of Mumbai police truck which detained students <a href="https://t.co/nJv3FLl3qw">pic.twitter.com/nJv3FLl3qw</a></p>&mdash; 🪳Against Corruption (@akashuchani08) <a href="https://x.com/akashuchani08/status/2080002001606455375?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அப்போது, ஒரு பெண் தனியாக நின்று அந்த காவல்துறை வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார்.
</p><p>
இதனால், வாகனம் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தில் இருந்த மாணவர்கள் கீழே இறங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
காவல்துறை வாகனத்தை தனி ஒருவராகத் தடுத்து நிறுத்திய அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T10:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்.., முதல்வர் நடித்த படம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/50-years-after-mgr-a-chief-minister-vijay-appears-1784797322"></link>
            <id>https://ibctamilnadu.com/article/50-years-after-mgr-a-chief-minister-vijay-appears-1784797322</id>
            <summary type="text">முதல்வராக பதவி வகிக்கும் போது ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொண்டாட்டமான தருணமாகும். 

அதன்படி, சுமார் 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வராக பதவி வகிக்கும் போது ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொண்டாட்டமான தருணமாகும்.</p><p> 

அதன்படி, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஒருவரின் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.</p><p>

இதற்கு முன்பு, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவர் நடித்த "மீனவ நண்பன்" திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285134a6-b3df-4d3c-adf2-b513aa50bf42/26-6a61d88c208b4.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து தற்போது, தமிழக முதல்வராக இருக்கும் விஜய் நடித்த "ஜனநாயகன்" திரைப்படமும் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>விஜய்யின் தவெக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் நடித்த "ஜனநாயகன்'' திரைப்படம் வெளியாகியுள்ளது.
</p><p>
இதேபோல், எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு "மீனவ நண்பன்" திரைப்படம் வெளியானது. </p><p>

மேலும், அவர் முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைப்படமும் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a890b37-685e-495b-bfb1-1660d1405a2a/26-6a61d88cc67f0.webp' /></p><p>இந்தப் படத்தின் சில பணிகளை முடிக்க எம்ஜிஆர் ஆளுநரிடம் 10 நாட்கள் அனுமதி கோரியதாகவும் கூறப்படுகிறது.</p><p>

எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது திரைப்படங்கள் மூலம் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்.</p><p> 

அதேபோல், விஜய்யும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தனது படங்கள் மூலம் அரசியல் பேசியுள்ளார்.</p><p>இருவரின் அரசியல் சார்ந்த படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்த தங்க விலை.. இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/july-23rd-gold-and-silver-price-in-chennai-1784785135"></link>
            <id>https://ibctamilnadu.com/article/july-23rd-gold-and-silver-price-in-chennai-1784785135</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது மீண்டும் சரிவைச் சந்திக்குமா என்ற எதிர்பார...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது மீண்டும் சரிவைச் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.</p><p>ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, அதன்பிறகு சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e634c08d-6b71-4af5-8e8a-cf3e65e83efd/26-6a61ac08b2115.webp' /></p><p>தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வுப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களும், நகை பிரியர்களும் கவலையடைந்துள்ளனர்.
</p><p>
நேற்றைய (ஜூலை 22) நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,430க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440 ஆக இருந்தது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், இன்று (ஜூலை 23) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bd96c4-9839-400b-b631-1f4c65c3b941/26-6a61ac0962ffe.webp' /></p><p>
</p><p>
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.11,315க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349d4945-3dc7-4808-94db-28cb2efbfc69/26-6a61ac0a16e59.webp' /></p><p>
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:52:28+00:00</updated>
        </entry>
    </feed>
