<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-05T06:27:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கே.என்.நேரு வீட்டில் சோதனை- மு.க.ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-condemns-kn-nehru-raid-1788585943"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-condemns-kn-nehru-raid-1788585943</id>
            <summary type="text">திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் லஞ்சி ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீட்டில் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் லஞ்சி ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

நகராட்சி நிர்வாக துறையில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
</p><p>
சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் கே.என்.நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55aef195-2de7-438b-b3bd-41995ab881f7/26-6a9ba86203dc6.webp' /><br></p><h2>முக ஸ்டாலின் கண்டனம்</h2><p>உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
</p><p>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.</p><p> 
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
</p><p>திரு. K.N.NEHRU அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e086da0-f510-47f3-a5f3-79b6b2942c79/26-6a9ba86146131.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டப்பகலில் அத்துமீறல்: பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443"></link>
            <id>https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443</id>
            <summary type="text">கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.</p><p>

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமைந்துள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த விவகாரத்தில் போலிசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.
</p><p>
இதன்போது அதிர்ச்சிகர சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்தது, அதாவது அசோகபுரம் ரயில்வே மேம்பால சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் தூங்கி கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0984c57d-a28f-4eae-85cb-37cca7d7f6e0/26-6a9b9e52bca5b.webp' /><br></p><p>
</p><p>
அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தெருநாய்கள் துரத்தி வந்துள்ளன, சத்தம் கேட்டு விழித்த பெண் கல்லால் அடித்தால் நாய்கள் போய்விடும் என கூறியுள்ளார்.
</p><p>
தொடர்ந்து குறித்த நபர் நாய்களை அடித்து துரத்தினார், அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.</p><p>

பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பி வந்த நாய்கள், குறித்த நபரிடம் இருந்து பெண்ணை காப்பாற்றினர், அவரது கால்களை கடித்து இழுத்தன.
</p><p>
இக்காட்சிகளை பார்த்த போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் 16 வயதான சிறுவன் என தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த போலிசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-05T04:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து: சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556"></link>
            <id>https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556</id>
            <summary type="text">8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பனம்பிக்குன்னு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b90e10-1029-4f3b-8d50-2b94a2f10674/26-6a9b9b30c4818.webp' /><br></p><p>
</p><p>
மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது, பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
</p><p>
கார் முழுவதுமாக சிதைந்து நொறுங்கியதால் காரின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன, 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
</p><p>
மாணவர்களின் முகங்களை கூட காணமுடியாத அளவு சிதைந்து போயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc4edd1-9cf4-43a0-ad67-e20988a81f8b/26-6a9b9b318bf5e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
