<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-18T07:30:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு நாளை அரசு கொண்டாடும்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-wishes-for-tamil-nadu-day-1784354860"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-wishes-for-tamil-nadu-day-1784354860</id>
            <summary type="text">தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில், தமிழரின் தொன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது எக்ஸ் பதிவில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c46f41-d10a-4bea-a0db-eab02f4b78a9/26-6a5b19fee00d5.webp' /></p><h2>முதல்வரின் வாழ்த்து பதிவு&nbsp;</h2><p> </p><p>மேலும், மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" என்ற பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின் இனிமை, தமிழரின் உயரிய பண்பாடு மற்றும் மனிதநேய மரபு தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்க வாழ்த்தியுள்ள முதலமைச்சர், சமத்துவம், சமூகநீதி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்மிகு மனிதவளத்தில் முன்னேறும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என்றும், தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?- மத்திய அரசு ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/central-gov-in-discussion-to-bring-back-upi-charge-1784354122"></link>
            <id>https://ibctamilnadu.com/article/central-gov-in-discussion-to-bring-back-upi-charge-1784354122</id>
            <summary type="text">பெரிய வணிக நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 யுபிஐ பரிவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரிய வணிக நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

 யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் </h2><p>

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், பெரிய வணிக நிறுவனங்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed66c1c1-7c7f-415f-8f4e-25556e1ecf63/26-6a5b154db04e7.webp' /></p><p>

ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும், ரூ. 2000க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
சிறு கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணமும் விதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4926aeef-773b-4bd3-a96a-61c997630b27/26-6a5b154d0ce33.webp' /></p><p>2016- 17ஆம் நிதியாண்டில் 2 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், 2025- 26ஆம் நிதியாண்டில் சுமார் 24,200 கோடியாக அதிகரித்துள்ளன.
</p><p>
இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T06:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமானை காப்பாற்றி நல்ல பாம்புடன் சண்டை: உயிரை விட்ட நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dog-sacrifices-life-fighting-a-snake-1784345717"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dog-sacrifices-life-fighting-a-snake-1784345717</id>
            <summary type="text">தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்(வயது 35), திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இவரது மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் இருக்கின்றனர், இவர்களுடன் காயத்ரியின் தாயாரும் உடன் இருக்கிறார்.

இவர்கள் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.</p><p>

நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் தாயார் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார், அப்போது அந்த இடத்தில் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து நின்றது.
</p><p>
இதைப்பார்த்து அவர் கூச்சலிட வீட்டில் அனைவரும் வந்து விட்டனர், சிஞ்சான் ஓடி வந்து பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.
</p><p>
பாம்பு சிஞ்சானை கடிக்க சண்டையில் பாம்பை இரண்டு துண்டாக்கிவிட்டது, சிறிது நேரத்தில் சிஞ்சான் மயங்கி இறந்துவிட்டது.
</p><p>
எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக உயிரை விட்ட சிஞ்சானின் செயல் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-07-18T03:37:00+00:00</updated>
        </entry>
    </feed>
