<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-13T16:05:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் இதை செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - ஆர்.பி உதயகுமார் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/rb-udhayakumar-challenge-vijay-say-107-mla-names-1783955823"></link>
            <id>https://ibctamilnadu.com/article/rb-udhayakumar-challenge-vijay-say-107-mla-names-1783955823</id>
            <summary type="text">விஜய் இதை செய்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என ஆர்.பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். 

ஆர்.பி உதயகுமார் சவால்

மதுரையில் நடைபெற்ற அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் இதை செய்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என ஆர்.பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். </p><h3>

ஆர்.பி உதயகுமார் சவால்
</h3><p>
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/498c9e74-9c1b-4cd3-a8df-c7249cb7f021/26-6a550171577de.webp' /></p><p>

இந்த நிகழ்வில் பேசிய அவர், "தற்போது உள்ள முதலமைச்சர் விஜய் நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க ஸ்டாலினை கொத்து புரோட்டா ஆக்கிவிட்டார்கள் என்கிறார்.

எவ்வளவு அநாகரிகமான பேச்சு? </p><p>ஓடு, ஓடு, ஓடு என விமர்சிக்கிறார். யார் கரூரிலிருந்து முதலில் தப்பித்து ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும். கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது தெரியும்.
</p><p>
எடப்பாடி பழனிசாமி ஒரு கருணையின் வடிவம். விஜயை சட்டசபையில் வைத்தே உரித்திருக்கலாம். ஆனால் இவர் அவருக்கு வக்காலத்து வாங்கி அவருக்காக பேசினார். </p><p>

இப்போது அவர் நம்மை பார்த்து தூர்ந்துபோன சக்தி என கூறுகிறார். அதிமுகவின் பெயரைச் சொல்லி தூர்ந்துபோன சக்தி எனக்கூற முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? 

சொல்லமாட்டார். </p><p>ஏனெனில் அதிமுக எம்.எல்.ஏக்களைத்தானே குதிரைப் பேரம் நடத்தி வளைத்து கொண்டு இருக்கின்றார். இந்தக் களவாணி, திமுகவும் - அதிமுகவும் கூட்டு எனக் கூறுகிறது.
</p><p>
நான் இந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் சவால் விடுத்துக் கூறுகிறேன். விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து நீங்கள் அவர்களின் பெயரை சரியாக கூறிவிட்டால் நான் இந்த பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுகிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T15:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பெரம்பூரில் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-visits-perambur-mla-office-inauguration-1783938110"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-visits-perambur-mla-office-inauguration-1783938110</id>
            <summary type="text">தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், முதல்வராக பதவியேற்ற பிறகு இன்று முதல் முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருக்கிறார்.பெரம்பூரில் முதல்வர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், முதல்வராக பதவியேற்ற பிறகு இன்று முதல் முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருக்கிறார்.</p><h2>பெரம்பூரில் முதல்வர் </h2><p>முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், இதுவரை தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு செல்லவில்லை.
</p><p>இன்று தான் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்வர் விஜய் சென்றிருக்கிறார்.
</p><p>பெரம்பூர் மக்களின் குறைகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியையும் முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9f5477-fbd1-41db-9676-12d4cbda9092/26-6a54c3ef34369.webp' /></p><p>

புதிய குடும்ப அட்டை விண்ணப்பதாரர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
</p><p>
பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அருகிலுள்ள நியாய விலைக் கடைகளையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.</p><h2>எம்எல்ஏ அலுவலக திறப்பு விழா</h2><p>இதனைதொடர்ந்து பெரம்பூரில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் .&nbsp; &nbsp;</p><p>சென்னை வியாசர்பாடி சரமா நகர் முதல் தெருவில் அமைந்துள்ள பெரம்பூர்&nbsp; எம்எல்ஏ அலுவலகத்தில் புதுப்பிப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0d9973-237f-49fd-b90c-6c49cdc4aace/26-6a54bc4078ca2.webp' />&nbsp; &nbsp; &nbsp;</p><p>பழைய கட்டடம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் சுற்றுச்சுவர், சிசிடிவி கேமராக்கள், முதல்வருக்கான தனி அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற அலுவலகத்தில் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T10:36:15+00:00</updated>
        </entry>
    </feed>
