<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-17T04:23:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிருக்கு போராடிய மகன்: ஜாலியாக செல்போன் பார்த்த அம்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/female-looks-cell-phone-while-lying-next-to-son-1784261051"></link>
            <id>https://ibctamilnadu.com/article/female-looks-cell-phone-while-lying-next-to-son-1784261051</id>
            <summary type="text">கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கர்நாடகாவின் தார்வார் டவுன் பல்கலைகழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரண்- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இருவருமே மருத்துவர்கள். </p><p>இவர்களுக்கு நிகித் (வயது 10) என்ற மகன் இருக்கிறார்.

சம்பவ தினத்தன்று மாலை உறவினர்கள் பிரியாவை தொடர்பு கொண்ட போது கிரண் உறங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfaa58ba-f155-4a87-8844-7b06ca3028a9/26-6a59aa56a2cb7.webp' /><br></p><p> </p><p>அடுத்தடுத்த முறை அவர்கள் தொடர்பு கொண்ட போது இருவருமே அழைப்பு எடுக்கவில்லை, இதனால் பதறிப்போன உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது கிரண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.</p><p>

பக்கத்துஅறையில் நிகித் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க பிரியா செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.
</p><p>
உடனடியாக நிகித்தை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர், தகவல்அறிந்து விரைந்து வந்த போலிசார் பிரியாவிடம் விசாரணை நடத்தியதில் தெளிவான பதில்கள் எதையும் கூறவில்லை.</p><p>

எதற்காக கணவரை கொன்றார்? மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது செல்போனில் மூழ்கியது ஏன்? மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4a67be-9799-40bb-aec7-40f8b9a2b8ae/26-6a59aa5750d56.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு தொடங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808"></link>
            <id>https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808</id>
            <summary type="text">இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.</p><p>

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குனர் சுந்தரேஷ் பாபு கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.</p><p>

இன்று சுயகணக்கெடுப்பு தொடங்குகிறது, https://se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம், இம்மாத இறுதி வரை 31ம் தேதி வரை நடைபெறும்.
</p><p>
சுயகணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பின்னர் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும், அதனை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-07-17T03:12:29+00:00</updated>
        </entry>
    </feed>
