<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-16T13:17:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு - முதல்வர் விஜய் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-warns-ministers-if-corruption-allegations-1784196606"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-warns-ministers-if-corruption-allegations-1784196606</id>
            <summary type="text">ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். 

தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். </p><h3>

தமிழக அமைச்சரவைக் கூட்டம்
</h3><p>
முதலமைச்சர் விஜய் தலைமையிலான 2வது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6eebb6e-cb3e-4f72-a0eb-9d38e91faddb/26-6a58ae004d8ac.webp' /></p><p>

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. </p><h3> 

முதல்வர் விஜய் எச்சரிக்கை</h3><p>

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அமைச்சர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b68224-675d-402a-9949-6e4e31c905a5/26-6a58adff9c924.webp' /></p><p>

தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து இடையூறு ஏற்படுத்தக்கூடாது. </p><p>

அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. கட்சியினருக்கும் இது குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
</p><p>
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கினால், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். </p><p>

நமது அரசு ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடாத வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாக செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T10:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-government-bans-color-papad-1784193888"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-government-bans-color-papad-1784193888</id>
            <summary type="text">அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

கலர் அப்பளங்களை குழந்தைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.</p><p>

கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbfbbc7-581d-4e36-ae5c-fa48cfb86048/26-6a58a508c5231.webp' /></p><h2>ஆரோக்கிய பிரச்சினை</h2><p> </p><p>இவற்றை அடிக்கடி உட்கொள்வதால் செரிமானக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1c6f00-1f16-4fe7-ba76-8c0b05880e53/26-6a58a509759ff.webp' /></p><p> </p><p>இதற்கு மாற்றாக, உளுந்து, அரிசி போன்ற பாரம்பரிய பொருட்களால் தயாரிக்கப்படும் அப்பளங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தைகள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக் கூடாது என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T09:32:56+00:00</updated>
        </entry>
    </feed>
