<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-10T19:35:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211"></link>
            <id>https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211</id>
            <summary type="text">கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், பள்ளித் தலைமையாசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><p> விசாரணையில், தலைமையாசிரியை தன்னிச்சையாக துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி செயல்பட்டது உறுதியானதால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a13641-196b-4fa0-ad8a-e5b5c8a8cc35/26-6a51313f30373.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்கக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.</p><p>
"பள்ளிக்கூடம் கல்விக்காகவே; அரசியலுக்காக அல்ல" என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செய்தி அறிக்கை: <br><br>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!<br><br>அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… <a href="https://t.co/f7bWenCFu0">pic.twitter.com/f7bWenCFu0</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2075588357690990726?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-10T17:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்&quot;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403</id>
            <summary type="text">கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். </p><p>மேலும், 32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த துயரச் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்றும் குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b883a3ac-22a7-48e7-bc0b-8a76ada70ecc/26-6a510ed5ca2dc.webp' /></p><p> </p><p>மேலும், கரூர் சம்பவத்தில் தாம் குடும்ப உறவுகளை இழந்ததாகவும், அதற்குப் பிறகும் தன் மீதே பழி சுமத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது கருத்தில், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று கைதட்டி மகிழ்ந்தார்களா? உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளிகளை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3399dbda-7b2c-4070-bdde-c35cfd8445fa/26-6a510ed67951a.webp' />&nbsp; &nbsp;</p><p>மக்களை ஏமாற்றும் கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T15:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429</id>
            <summary type="text">தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

 முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். </p><h3>

 முதல்வர் விஜய் பேச்சு </h3><p>

இன்று கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். </p><p>

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c22017f-a89a-4b2f-975c-f31411bb27bc/26-6a51045f42889.webp' /></p><p>
குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா" என பேசினார். </p><p>

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.</p><h3>

தனி விமானம் பிடித்து ஓடியது யார்?</h3><p>

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde4d383-5849-4e14-8202-9f68dfa8dcd1/26-6a51045fe5015.webp' /></p><p>

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள். </p><p>அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
</p><p>
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T14:40:52+00:00</updated>
        </entry>
    </feed>
