<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-20T14:22:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-lathi-charge-on-cjp-protest-1784555303"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-condemns-lathi-charge-on-cjp-protest-1784555303</id>
            <summary type="text">டெல்லி CJP போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி CJP போராட்டத்தில் தடியடி 

நீட் தேர்வு முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லி CJP போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><h3>
டெல்லி CJP போராட்டத்தில் தடியடி </h3><p>

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5faf9653-3882-45fb-a2c3-c28d8bbe3a3a/26-6a5e2728cdd73.webp' /></p><p>

இந்நிலையில், இன்று கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயற்சித்த போது, காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
</p><p>
நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டு, அந்த பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. </p><p>

இதனையடுத்து, காக்ரோச் ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb91b9b-5f8b-47b1-bcc8-bdc8d950344a/26-6a5e27297c289.webp' /></p><p> 

இதில் மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை விடுதலை செய்ய வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு தொடர்பாக உயிரை மாய்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என 3 முக்கிய கோரிக்கைகள் இருந்தது.</p><h3> 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
</h3><p>
இந்நிலையில், டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fae6e736-700d-4915-80d8-e15fcdba47b5/26-6a5e272a2a3ed.webp' /></p><p>

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்ற சிஜேபி இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அத்துமீறலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். </p><p>

டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. </p><p>

அவர்களின் கவலைகளைக் களைவதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலடி கொடுக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
</p><p>
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, திமுக நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 

இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல், தேசிய தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies. <br><br>The visuals from Delhi are shocking.<br><br>Instead of addressing their concerns, the government is responding with its police force. This…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079175772988944765?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தேசத்தின் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அவர்களுக்குச் செவிசாயுங்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T13:49:24+00:00</updated>
        </entry>
    </feed>
