<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-10T20:45:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211"></link>
            <id>https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211</id>
            <summary type="text">கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், பள்ளித் தலைமையாசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><p> விசாரணையில், தலைமையாசிரியை தன்னிச்சையாக துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி செயல்பட்டது உறுதியானதால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a13641-196b-4fa0-ad8a-e5b5c8a8cc35/26-6a51313f30373.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்கக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.</p><p>
"பள்ளிக்கூடம் கல்விக்காகவே; அரசியலுக்காக அல்ல" என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செய்தி அறிக்கை: <br><br>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!<br><br>அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… <a href="https://t.co/f7bWenCFu0">pic.twitter.com/f7bWenCFu0</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2075588357690990726?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-10T17:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்&quot;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403</id>
            <summary type="text">கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். </p><p>மேலும், 32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த துயரச் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்றும் குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b883a3ac-22a7-48e7-bc0b-8a76ada70ecc/26-6a510ed5ca2dc.webp' /></p><p> </p><p>மேலும், கரூர் சம்பவத்தில் தாம் குடும்ப உறவுகளை இழந்ததாகவும், அதற்குப் பிறகும் தன் மீதே பழி சுமத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது கருத்தில், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று கைதட்டி மகிழ்ந்தார்களா? உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளிகளை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3399dbda-7b2c-4070-bdde-c35cfd8445fa/26-6a510ed67951a.webp' />&nbsp; &nbsp;</p><p>மக்களை ஏமாற்றும் கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T15:38:50+00:00</updated>
        </entry>
    </feed>
