<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-22T15:40:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்: தமிழ்நாடு அரசு அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். </p><p>பின்னர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446a0439-a31a-40a3-9074-ec327a89e62b/26-6a60da116ec8d.webp' /></p><h2>அரசாணை&nbsp; வெளியீடு&nbsp;</h2><p>

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 'முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை' அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315c357e-3fad-44d9-85c2-a21c592c667e/26-6a60da1220716.webp' /></p><p> மேலும், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இத்திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.</p><p>
இந்நிலையில், 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T14:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வெளியாகும் ஜன நாயகன் திரைப்படம்... அதிரடியாக விடுமுறை அறிவித்த நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-movie-jana-nayagan-release-half-day-leave-1784725499"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-movie-jana-nayagan-release-half-day-leave-1784725499</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் நிறுவனம் ஒன்று விடுமுறை அளித்துள்ளது.ஜனநாயகன்தமிழக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் நிறுவனம் ஒன்று விடுமுறை அளித்துள்ளது.</p><h2>ஜனநாயகன்</h2><p>தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பல போராட்டங்களுக்கு பின்பு இப்படம் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் உட்பட பல பிரச்சனைகளால் 6 மாதங்களுக்கு பின்பு வெளியாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93d3a5a-a3e3-4d3d-9cb1-98f804f81fd9/26-6a60cb85cffea.webp' /></p><p>விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே 4 நாட்களுக்கான டிக்கெட் விற்கு தீர்ந்துள்ளது.</p><p>எப்பொழும் இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என்று வரும் பெயர் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்ட் திரையில் தோன்றவிருக்கின்றது.&nbsp;</p><p></p><p>ரசிர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ-க்கள்,அமைச்சர்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.</p><p>இந்நிலையில் திருப்பூரில் உள்ள டிகே உணவு நிறுவனம் ஒன்று தான் நடத்தி வரும் மூன்று கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஜனநாயகன் படத்தினை பார்ப்பதற்கு அரைநாள் விடுமுறை கொடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T14:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி - மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050"></link>
            <id>https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050</id>
            <summary type="text">போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3>

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p>

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a15968d-1ffa-4f29-bb32-56563a3a91dd/26-6a60c60c00a8a.webp' /></p><p>

போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>
 நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். </p><h3>

அண்ணாமலை</h3><p> 

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தாமதப்படுத்துவது ஏன் எனவும், இதனால் போரட்டம் ஹைஜாக் செய்ய வாய்ப்புள்ளது எனவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4498140-b066-487d-ba08-6e0d17505950/26-6a60c60ca5fa4.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த பல ஆண்டுகளாக, நான் நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். </p><p>

அது நாடு முழுவதும் மாணவர் தேர்வில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவந்தது என்றும், நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் தங்கள் கனவைத் தொடர ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது என்றும் நான் வாதிட்டு வருகிறேன்.</p><p> 

கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. 

சீரான தன்மையைக் கொண்டுவர வேண்டிய அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, ​​மீண்டும் ஒருமுறை தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மாணவர்கள் மீது அது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.</p><p> 

ஆனாலும், எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை. அந்தத் தருணம்தான், மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை கதறி அழுவதற்காக வீதிகளில் இறங்குவதற்கு அவர்களின் மனங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். </p><p>

ஒரு ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இருப்பினும், பொருத்தமான கேள்வி இதுதான்: 

பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? 

போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடையும் வரை அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஏன் தாமதப்படுத்தப்பட்டது? உங்களைக் காத்திருக்க வைத்தது எது?</p><p> 

மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் மக்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. 

ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநலவாதிகள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்துக்களைப் பரப்புவதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தை முழுமையாகத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பானதுதான். </p><p>

நீங்கள் மௌனமாக இருந்து, இந்த சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் அடிப்படைக் குறிக்கோள்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தயவுசெய்து அதை நடக்க விடாதீர்கள்! </p><p>

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், தற்போதைய கவலைகளை நிவர்த்தி செய்ய விரைவான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும்கேட்டுக்கொள்கிறேன்.&nbsp;</p><p>['</p><p>

எந்தவொரு தேசத்தின் வலிமையும், அதன் இளைஞர்கள் அதன் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்தால், நாம் நமது தேசத்தின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தர தீர்வு- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/scrapping-neet-will-provide-a-solution-mk-stalin-1784720177"></link>
            <id>https://ibctamilnadu.com/article/scrapping-neet-will-provide-a-solution-mk-stalin-1784720177</id>
            <summary type="text">நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி போராட்டம் 

மரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
</p><h2>
டெல்லி போராட்டம் </h2><p>

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d998cd-e747-4fe6-92a3-7c9b3ee2e0bb/26-6a60ac6228909.webp' /></p><p>இதனால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
</p><p>
இந்நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>

வெளியிட்ட பதிவு..,
</h2><p>
புது தில்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.
</p><p>
நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் கட்சி திமுக.</p><p> அதனால்தான், இந்த தேர்வால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The students&#39; protest in New Delhi has now captured the attention of the entire country.<br><br>We were the first to warn that <a href="https://x.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the… <a href="https://t.co/HIoXWLIvwR">pic.twitter.com/HIoXWLIvwR</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079777346052317204?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட்தேர்வு ஒழிப்பு ஆகும்.</p><p>

மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.</p><p>

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். நீட் தேர்வை தடைசெய்வோம். மாணவர்களைகாப்போம் என அவர் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T12:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[“ஜனநாயகன்” படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-arun-raj-talk-about-jananayagan-acting-1784714694"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-arun-raj-talk-about-jananayagan-acting-1784714694</id>
            <summary type="text">“ஜனநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்&amp;nbsp; என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>“ஜனநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்&nbsp; என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p>
</p><p>இது குறித்து அவர் பேசுகையில்,&nbsp;</p><p>“முதலமைச்சர் விஜய், ‘ஜனநாயகன்’ தான் தனது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.அந்த வகையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2fd19f-5715-4bd8-bb78-d6bd02673b64/26-6a6098a480646.webp' /></p><p> </p><p>மக்களைப் போலவே நாங்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

முதல்வரின் கடைசி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அதனால் நானே தயாரிப்பு தரப்பை தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்டேன். </p><p>சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு என்னுடைய புகைப்படங்கள் மற்றும் விவரங்களைப் பெற்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினர்.
</p><h2>முதல்வர் விஜயின் தனிச்சிறப்பு</h2><p>
முதல்வர் விஜய் கேமரா முன் நிற்கும் தருணத்தில், அவர் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார்.அதுதான் ஒரு சிறந்த நடிகரின் தனிச்சிறப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726b722e-3b26-4bd4-a354-0608296a0812/26-6a6098a52ed7f.webp' /></p><p>இந்தப் படத்தை மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

படத்தின் வெளியீடு அரசியல் காரணங்களால் தாமதமானது. மேலும், சிலர் சட்டவிரோதமாக திரைப்படத்தின் காட்சிகளை இணையத்தில் கசிந்துவிட்டாலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p>மேலும் “அமைச்சர்கள் விடுப்பு எடுத்து படம் பார்க்கச் செல்வார்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை விடுப்பு எடுத்து படம் பார்க்கச் செல்வார்கள் என்று கூற முடியாது. </p><p>ஒவ்வொருவருக்கும் பணிச்சுமைக்கு இடையே ஓய்வெடுக்கும் ஒரு நேரம் தேவைப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட மக்கள் பணிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எனவே, இதை விடுப்பு எடுத்து படம் பார்ப்பதாகக் கருத வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-22T10:17:54+00:00</updated>
        </entry>
    </feed>
