<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-07T11:06:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட ரத்தீஷ் என்பவர் யார்? காயத்ரி ரகுராம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326"></link>
            <id>https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326</id>
            <summary type="text">சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.</p><p>இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,&nbsp; அவரிடம் ஆதாரம் உள்ளதா? உங்கள் நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவரது மச்சான் சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கின்றனர்? அரசு கனிம வளங்களை கையாளும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது, அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் ரத்தீஷ் குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ரத்தீஷ் என்பவர் யார்? இவர் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்யின் நண்பர் என்று கூறப்படும் சுஜய் ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2620ec02-ab26-475b-9aab-eb6e921e24aa/26-6a9e804a8b184.webp' /><br></p><p> சுஜய் ரெட்டி, முன்னாள் துணை முதல்வர் உதயநிதியுடனும் முன்பு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறவு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>மேலும், ரத்தீஷுடன் இணைந்து முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதோடு, நிதி ரீதியாகவும் பலன் பெற்றதாகக் கூறப்படும் ஒரு அதிகார மையத்தின் ஒரு பகுதியாக சுஜய் ரெட்டி இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
</p><p>
ரத்தீஷ் மீது தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றால், சுஜய் ரெட்டியிடம் ஏன் கேள்வி கேட்கப்படவில்லை அல்லது அவர்மீதும் விசாரணை நடத்தப்படவில்லை? </p><p>ரத்தீஷ் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றால், அவருடைய நெருங்கிய தொடர்புகளான சுஜய் ரெட்டி, அண்ணாமலை (செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் நண்பர்), காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் அதே அதிகார வலையமைப்பின் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய மற்ற அனைவரும் ஏன் விசாரிக்கப்படக்கூடாது?
</p><p>
அன்புள்ள முதல்வரே, நீங்கள் உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருந்தால், உங்கள் நண்பர்களான சுஜய் ரெட்டி, அண்ணாமலை, காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் பிற நெருங்கிய தொடர்புகளுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். </p><p>இப்போது சுஜய் ரெட்டி தவெக-வின் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளார். அவர்களின் அரசியல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் ஒரே அளவிலான பொறுப்புக்கூறலும் நீதியும் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T09:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கு நடத்தி உடல் தகனம்: 27 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய சிவானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/women-returns-home-after-27-months-1788765172"></link>
            <id>https://ibctamilnadu.com/article/women-returns-home-after-27-months-1788765172</id>
            <summary type="text">இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்துள்ளது.
</p><p>

உத்தரபிரதேசத்தின் நவிகோட் நந்தனா கிராமத்தை சேர்ந்த பெண் சிவானி(வயது 28), கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் அவரை காணவில்லை.</p><p>

குடும்பத்தினர் தேடி அலைந்த நிலையில் ஜூலை மாதம் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
அப்பெண்ணின் அடையாளங்களின் அடிப்படையில் இறந்தது சிவானி என கருதிய குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து தகனம் செய்தனர்.</p><p>மேலும் வரதட்சணை கொடுமையே தன் மகள் இறப்புக்கு காரணம் என கருதிய சிவானியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்தனர்.<br></p><p>
</p><p>
இந்நிலையில் தற்போது 27 மாதங்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார் சிவானி, இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் யாருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர் என கேள்வி எழுந்துள்ளது.</p><p>

இதுகுறித்தான விசாரணையை போலிசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40249ebb-506a-4454-b254-59108257ed74/26-6a9e65be29044.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:20:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச் டயலாக், ரீல்ஸ்- உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

முதலமைச்சர் விஜய் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
</p><p>
தற்போது தவெக ஆட்சி தான் நடைபெறுகிறது, அதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.</p><p>

முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்தேன், ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை.

வியாழக்கிழமை ஓடிவிட்டு திங்கள்கிழமை பதில் சொல்வதாக கூறினார், மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியை போல் தவறான கருத்துகளை ஒப்புவித்துள்ளார் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
</p><p>
முதலில் பேச அனுமதிக்கிறேன் என கூறிய சபாநாயகர் யாருடைய அழுத்தத்தினாலோ அனுமதியை மறுத்துவிட்டார்.

இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iF4V7ofTpho" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:51:50+00:00</updated>
        </entry>
    </feed>
