<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-30T16:39:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் நீக்கம்: இயக்குனர் அமீர் கண்டன பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882</id>
            <summary type="text">தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>இயக்குனர் அமீர்</p><p>"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்” என பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99c8415-029b-4fb6-b2cf-df2d93519ae7/26-6a942224b762b.webp' /><br></p><h2>அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</h2><p>செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.</p><p> அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.
</p><p>
ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை கொன்றுவிடுவார்கள்: மருத்துவமனையில் கதறிய கர்ப்பிணி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953</id>
            <summary type="text">என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.</p><p>

குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0765a2f-071d-40c4-a0b0-48de3ff0663b/26-6a93f79ab2d63.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:20:33+00:00</updated>
        </entry>
    </feed>
