<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-31T15:22:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி மகளிருக்கு மாதம் ரூ.2,500: 'டெல்லி லட்சுமி' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/urimai-thogai-delhi-lakshmi-scheme-2500-1785507743"></link>
            <id>https://ibctamilnadu.com/article/urimai-thogai-delhi-lakshmi-scheme-2500-1785507743</id>
            <summary type="text">இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>அதன்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'டெல்லி லட்சுமி' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c3cd56-de1c-4ea7-8ad1-e67d6283ba00/26-6a6cb21e8fecd.webp' /></p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p>

இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் பயன்பெற உள்ளனர்.

உதவித்தொகை வழங்கும் முறையில் இரண்டு விருப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முதல் முறையில் ரூ.1,000 டிஜிட்டல் ரூபாய் வாலெட்டில் செலுத்தப்பட்டு, மீதமுள்ள தொகை மாதந்தோறும் தொடர் வைப்புத்தொகை&nbsp; அல்லது நிலையான வைப்புத்தொகை&nbsp; கணக்கில் செலுத்தப்படும். </p><p>இரண்டாவது முறையில், முழு உதவித்தொகையும் தொடர் அல்லது நிலையான வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பயனாளர்கள் தங்களுக்கு ஏற்ற விருப்பத்தைத் தேர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா தவெக அரசு? கனிமொழி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-mp-kanimozhi-slams-tvk-govt-in-cauvery-issue-1785506337"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-mp-kanimozhi-slams-tvk-govt-in-cauvery-issue-1785506337</id>
            <summary type="text">மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா தவெக அரசு என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.



 காவிரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா தவெக அரசு என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><h3>


 காவிரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d70a2d22-a14b-44aa-9b1f-b3bef07fcd01/26-6a6caa231d7ce.webp' /></p><p>

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. </p><p>

காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போதைய சூழலில் விஜய் வர வேண்டாம் என டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa3b632-a1b1-4ef7-9130-5b4d2e0f96dd/26-6a6caa23d0519.webp' /></p><p>

மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து விவாதிக்க டி.கே.சிவகுமார் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார். </p><p>

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.</p><h3> 

விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா?
</h3><p>
விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80281384-6de3-42c5-b8e7-2db9cc033249/26-6a6caa226c3ba.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.&nbsp;</p><p>

மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.<br><br>மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2083174189956305208?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T13:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்ட அச்சம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடக பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902</id>
            <summary type="text">காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அந்தச் சந்திப்பைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்</h2><p>

காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a60c70a-268d-4722-a526-ff6b6308bd1f/26-6a6c74290c0b4.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வரும்போது போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், தற்போதைய சூழலில் பயணத்தைத் தவிர்த்து, உரிய சூழல் உருவான பிறகு வேறு ஒரு தேதியில் சந்தித்து பேசலாம் என தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், கர்நாடகத்தின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:09:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் தற்போது கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630</id>
            <summary type="text">முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவேரி விவகாரம் 

தமிழ்நாட்டிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h3>

காவேரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d9250e-04a9-457c-b694-9b036286d2ba/26-6a6c70b122eb9.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p> 


இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296febb4-6091-44cb-94b5-9ba6b6f6c019/26-6a6c70b073435.webp' /></p><p>

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

காவேரி விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b8fe78-71eb-493e-a34c-80abdb27892e/26-6a6c70afc273f.webp' /></p><p>தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். 

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T09:53:58+00:00</updated>
        </entry>
    </feed>
