<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-28T06:52:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/fever-rising-children-elderly-vaccination-advised-1787823604"></link>
            <id>https://ibctamilnadu.com/article/fever-rising-children-elderly-vaccination-advised-1787823604</id>
            <summary type="text">தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று நோய்க்கு உள்ளாக கூடிய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று நோய்க்கு உள்ளாக கூடிய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் இணை நோயாளிகள் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதனை தடுப்பதற்கு முக கவசம், தடுப்பூசி அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.</p><p>

 
இந்தத் தொற்று தொடர்பாக டாக்டா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: </p><p>ஆா்எஸ்வி எனப்படும் சுவாச பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சாா்ந்த பிரச்சினைகளில் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது. இதனுடைய அறிகுறியாக மூச்சு திணறல் காய்ச்சல் இருமல் தொண்டை வலி, சோர்வு உடல் வலி சளி வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவையாக உள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcb7b49-c2fc-4a79-a6a2-dcd32e28b9c9/26-6a90085d25294.webp' /></p><p> 

தேவைப்படுபவர்கள் எக்ஸ்ரே, சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு எதுவும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.</p><p> மேலும், சுவாச பாதையை விரிவு செய்யும் மருந்துகள் இருமலை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையால் எடுத்துக் கொள்வது அவசியம், முதியவர்கள் இணை நோயாளிகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது நிச்சயம் முக கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். </p><h3>


குழந்தைகள் பாதிப்பு:
</h3><p>பொதுவாகவே, பருவநிலை மாற்றம் அடையும் பொழுது நமக்கு காய்ச்சல், சளி தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு போன்ற தொற்றுகள் உருவாகும். அந்த வகையில், 

நிகழாண்டிலும் கடந்த சில நாள்களாக ஆா்எஸ்வி, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருகிறது.அதேசமயம், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான குழந்தைகளும் மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள். </p><p>

ஒரு சில இடங்களில் சால்மோனெல்லா டை‘ஃ‘பி பாக்டீரியா மூலம் உருவாகும் டைபாய்டு காய்ச்சலும் பரவி வருகிறது.
இவ்வாறான பாதிப்புகளை குறைப்பதற்கு காய்ச்சிய நீரையே குழந்தைகளுக்கும் கொடுப்பது நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும், முடிந்தவரை வீடுகளில் கொசுக்கள் சூழாதவாறு முழுமையான ஆடைகள் அணிவது அவசியம். </p><p>இந்த காலகட்டங்களில் தரமற்ற உணவுகள் கடைகளில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசி தவணைகளை நாம் எப்பொழுதும் தவற விடக்கூடாது. கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7f7ae6e-9dda-4b40-bd83-5be08a387fbb/26-6a90085e04fa6.webp' /></p><p> </p><h3>எந்தத் தடுப்பூசி அவசியம்?
</h3><p>பருவ காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மிக மிக அவசியம். நிமோனியா காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஊக்கத்தவனையாக நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்த வேண்டும். </p><p>


குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் மருத்துவரின் பரிந்துரைப்படி செலுத்திக் கொள்ளலாம்.


1,558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 1558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் தெரிவித்திருக்கிறார். </p><h3>


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:</h3><p> சென்னையில் ஹெச்1என்1 பாதிப்பு அச்சுறுத்தும் அளவு இல்லை. 
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 1288 பேர் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதிய ஆண்டில் எண்ணிக்கை 1558 ஆக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் இது குறித்து பயப்பட தேவையில்லை. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார். </p><h3>


வழிகாட்டு நெறிமுறைகள்:
</h3><p>
இன்ஃப்ளூயன்ஸா தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட வழிகாட்டுதலில், ஒருவருக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்துகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். </p><p>

மேலும், எந்த காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6deba93e-d0d7-4067-b4e1-d88708a1c418/26-6a90085f0558e.webp' /></p><h3>&nbsp;1. நோய் -டெங்கு அறிகுறிகள்:
</h3><p>டெங்கு இருப்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடலில் சிவப்பு தடிப்புகள் வரலாம். மருத்துவ சிகிச்சை இரண்டாம் நாளுக்கு பிறகு ரத்த பரிசோதனை, நீர் பலச்சாறு, இளநீர், உப்பு, சர்க்கரை கரைசல் அதிகமாக பருக வேண்டும். மேலும், ரத்த ரத்த தட்டணு அளவை கண்காணிப்பது அவசியம். ஓய்வு எடுத்துக் கொள்வது பரிந்துரை இல்லாமல் தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். </p><h3>
2. நோய் - இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்:
</h3><p>இந்த நோய் இருப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, வீக்கம், தலைவலி ஆகிய அறிகுறிகள் இருக்கும். சுயமாக எந்த மருத்துவமும் செய்ய வேண்டாம். காய்ச்சிய நீரையே பருக வேண்டும். மருத்துவ பரிந்துரைத்த காலம் வரை அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். நல்ல ஓய்வு, உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க வேண்டும். இருமல் தும்மலின் போது கைகுட்டையால் மூடிக்கொள்வது அவசியம்.</p><h3>
3. நோய் - ஆா்எஸ்வி (சுவாசத் தொற்று) அறிகுறிகள்:</h3><p>
இந்த தொற்று இருப்பவர்களுக்கு காய்ச்சல் இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளி இருமல் பசியின்மை ஆகிய அறிகுறிகள் காணப்படும். முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல் சுவாச சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுதல் ஆரோக்கியமான உணவு நல்ல தூக்கம் புகைப்பழக்கத்தை கைவிடுதல் அதிகமான நீர் எடுத்துக் கொள்வது அவசியம். </p><h3>


4. நோய் - டைபாய்டு அறிகுறிகள்:
</h3><p>கடுமையான காய்ச்சல் இருக்கும். பசியின்மை தலைவலி மற்றும் வயிற்று வலி உடலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் காணப்படும். சுகாதாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சிய குடிநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கைகள் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T06:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Nepal Flood: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-flood-latest-updates-1787893633"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-flood-latest-updates-1787893633</id>
            <summary type="text">நேபாள பெருவெள்ளம் தொடர்பில் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 469 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள பெருவெள்ளம் தொடர்பில் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 469 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
</p><p>
ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன, சாலைகள் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.</p><p>

பனிப்பாறை உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டதே வெள்ளத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hz5Kk2zgpWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

குறித்த இயற்கை பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், இவர்களில் இதுவரை 469 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது, மேலும் 977 பேரை காணவில்லை, இவர்களில் 577 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.</p><p>

7250 நேபாள போலிசார், 4200 நேபாள ராணுவத்தினர் 1845 ஆயுத படை போலிசார் என மொத்தம் 13295 பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/juvnMxEHxvU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீமானுக்கு ஆதரவாக.. நடிகை விஜயலட்சுமியின் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijayalakshmi-supports-seeman-1787892943"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijayalakshmi-supports-seeman-1787892943</id>
            <summary type="text">நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக இருப்பேன் என புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக இருப்பேன் என புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
</p><p>
சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக அடுக்கடுக்கான புகார்களை கூறிவந்த நடிகை விஜயலட்சுமி போலிசில் புகார் அளித்திருந்தார், ஆனால் இறுதியில் வழக்கு சமரசம் ஆனது.
</p><p>
இந்நிலையில் தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a08e9ef-7490-4f8f-b291-4aac696eaa83/26-6a91153f71271.webp' /><br></p><p>
</p><p>
அதில், சீமானின் வாயை அடைக்க வேண்டுமென்றால் உடனே என் பெயரை கூறுகிறார்கள், கடந்த சில நாட்களாக என்னையும், சீமானையும் இணைத்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.</p><p>

தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது அவர்களை வாழவிட வேண்டும், அது தான் மனிதநேயம்.
</p><p>
ஆனால் தொடர்ந்து என்னையும், அவரையும் பற்றி கொச்சைப்படுத்திக்கொண்டே இருந்தீர்கள் என்றால் நான் அவருக்கு ஆதரவாக நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இப்படி பேசுவதால் ”பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல” என பேச வேண்டாம், என்னை பணம் கொடுத்து யாராலும் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-28T04:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/grand-chess-tour-champion-praggnanandhaa-1787891844"></link>
            <id>https://ibctamilnadu.com/article/grand-chess-tour-champion-praggnanandhaa-1787891844</id>
            <summary type="text">Grand Chess Tour Champion Praggnanandhaa: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Grand Chess Tour Champion Praggnanandhaa: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.</p><p>

உலகின் சிறந்த டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்கும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது.
</p><p>
இந்த போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் கரானாவுடன் மோதினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/627283e0-39bc-4151-bf02-4450b56f4f08/26-6a91119979fcb.webp' /><br></p><p>
</p><p>
முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் 9-3 என்ற கணக்கில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்த ராபிட் சுற்று ஆட்டங்களில் முன்னிலை பெற்றார்.
</p><p>
கடைசியில் பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில் இறுதியாக 15- 13 என்ற கணக்கில் பட்டம் வென்றார்.
</p><p>
இதன் மூலம் கிராண்ட் செஸ் தொடரின் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1284aa4-30d7-4505-8dff-eb6dfc1c9255/26-6a91119a2ff43.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:42:25+00:00</updated>
        </entry>
    </feed>
