<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-10T16:39:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549</id>
            <summary type="text">திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார். 

குலுங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.</p><h3> 

குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்</h3><p> 

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாளான இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் மீதான விவாதம் நடைபெற்றது.
</p><p>
இதில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "நீங்கள் எல்லாம் பேப்பரை படிக்கவில்லையா? என்று அன்றைக்கு முதல்வர் சொன்னது எங்களுக்கு வருத்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318ad98-914b-4160-a387-d6fd1ba88338/26-6a79d60e81917.webp' /></p><p>

நாங்கள் திராவிட இயக்கம், பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம். கலைஞர் காலத்திலும் சரி, மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பதபதப்பு இருக்கும். 

ஏனென்றால் காலையிலேயே பேப்பரை படித்து எங்களுடைய தலைவர்கள் அந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கு நேரடியாக பேசுவார்கள். </p><p>அந்த துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய சொல்வார்கள். 

எனவே ஒரு டென்ஷனிலேயே 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்‌ஷாக இருக்கிறீர்கள், அது தான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். </p><p>

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், "எங்களுடைய முதல்வர் சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போன் அடித்து அதை உடனே சரி செய்துவீட்டீர்களா என்று கேட்கிறார். நீங்களாவது 5 வருடம் தான் டென்ஷனாக இருக்கிறீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று கூறினார்.</p><p>
இதன் பின்னர் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எங்கள் ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதில்லை என பேசினார். </p><p>

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏன் அமைக்கவில்லையென்று தொடர்ந்து விவசாயிகள் கேட்டு போராடிக்கொண்டிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f8a86f-8c6c-437f-839a-467c0eb6d205/26-6a79d60f33e84.webp' /></p><p>

குறிப்பாக, விவசாயிகளை பட்டியலைப் போட்டவர். ஒரு முக்கியமான விவசாயியை மறந்துவிட்டார். கரும்புத் தோட்டத்தில் கான்கீரிட் போட்டு நடந்த விவசாயி பற்றி அவர் சொல்ல மறந்துவிட்டார் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.</p><p> 

இதற்கு பதிலளித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "இப்பதான் தெரியுது. நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு, மாண்புமிகு சாமி அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்" என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65767026-a77a-4c9c-87f6-fa25ebb02790/26-6a79d60fd8763.webp' /></p><p>

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக்கூறுவதற்கு பதிலாக சாமி அமைச்சர் எனகுறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் விஜய்யும் அதனை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:46:24+00:00</updated>
        </entry>
    </feed>
