<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-18T13:39:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசு உயிர்களுக்கு விலை வைக்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/edappadi-palaniswami-condemns-about-lockup-deaths-1784376666"></link>
            <id>https://ibctamilnadu.com/article/edappadi-palaniswami-condemns-about-lockup-deaths-1784376666</id>
            <summary type="text">&#039;திராவிட மாடல்&#039; திமுக ஆட்சியைப் போலவே தவெக அரசும் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு விலை வைக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>'திராவிட மாடல்' திமுக ஆட்சியைப் போலவே தவெக அரசும் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு விலை வைக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் லாக்அப் மரணங்கள், சிறை மரணங்கள் மற்றும் என்கவுண்டர் சம்பவங்களைப் போலவே தற்போதைய தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d134a-9d4f-4034-aa93-2ca1d4336bbb/26-6a5b6e5f6483d.webp' /></p><h2>அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>
நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி மற்றும் சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவங்களில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்காமல், நிவாரணம் வழங்கி சமரசம் செய்ய அரசு முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
</p><p>விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு பணத்தின் மூலம் மதிப்பு நிர்ணயிக்க முடியாது என்றும், லாக்அப் மரணங்கள், சிறை மரணங்கள் மற்றும் தேவையற்ற என்கவுண்டர்களைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் தவெக அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T12:15:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு நாளை அரசு கொண்டாடும்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-wishes-for-tamil-nadu-day-1784354860"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-wishes-for-tamil-nadu-day-1784354860</id>
            <summary type="text">தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில், தமிழரின் தொன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது எக்ஸ் பதிவில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c46f41-d10a-4bea-a0db-eab02f4b78a9/26-6a5b19fee00d5.webp' /></p><h2>முதல்வரின் வாழ்த்து பதிவு&nbsp;</h2><p> </p><p>மேலும், மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" என்ற பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின் இனிமை, தமிழரின் உயரிய பண்பாடு மற்றும் மனிதநேய மரபு தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்க வாழ்த்தியுள்ள முதலமைச்சர், சமத்துவம், சமூகநீதி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்மிகு மனிதவளத்தில் முன்னேறும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என்றும், தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து 20 நாட்கள் உண்ணாவிரதம்.., சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sonam-wangchuk-admitted-to-hospital-1784362093"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sonam-wangchuk-admitted-to-hospital-1784362093</id>
            <summary type="text">டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><h2>
தொடர் உண்ணாவிரதம்
</h2><p>
நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட விவகாரங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>

இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab05301-3173-46a9-9858-4c3c40d0ed6c/26-6a5b346fb5a15.webp' /></p><p>இதில் பங்கேற்ற சோனம் வாங்சுக், கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
</p><p>
தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோ குறைந்ததையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
</p><h2>
மருத்துவமனையில் அனுமதி </h2><p>

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
</p><p>
இந்நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be597ed-9b6f-4bb6-9441-976199d0b6f7/26-6a5b34b9c9994.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் அவரை போராட்ட இடத்திலிருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>

அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்ட இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:16:37+00:00</updated>
        </entry>
    </feed>
