<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-18T08:35:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/bharathidasan-kanimozhi-tweet-viral-1789713911"></link>
            <id>https://ibctamilnadu.com/article/bharathidasan-kanimozhi-tweet-viral-1789713911</id>
            <summary type="text">கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே தவெக அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்காக அரசின் கல்வித்தொகை வரவில்லை என கண்ணீருடன் குற்றம்சாட்டியிருந்தார்.
</p><p>
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3201c62c-7f14-47c0-acfe-b27c9d2f5be2/26-6aacde70cd9db.webp' /><br></p><p>
</p><p>
"மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன? </p><p>கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.
</p><p>
அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.</p><p>

என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6809e9-2dc6-4aa2-9cec-b407859db342/26-6aacde7182661.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dengue-in-tamil-nadu-spread-1789708098"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dengue-in-tamil-nadu-spread-1789708098</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
</p><p>
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த 15ம் தேதி 133 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 17ம் தேதி நேற்று மட்டும் 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20a6ec47-bc30-43fd-93a3-3b4848d718ab/26-6aacc80ad8821.webp' /><br></p><p>
</p><p>
ஒரே நாளில் 1320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மாநில அளவில் சென்னை டெங்கு பாதிப்பில் முதலிடம் வகிப்பதாகவும், 87 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1787ec-faa9-458a-94dd-0612d8e8fc64/26-6aacc80b93e76.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-governor-has-granted-assent-to-the-12-bills-1789703324"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-governor-has-granted-assent-to-the-12-bills-1789703324</id>
            <summary type="text">தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>

தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைந்தது.
</p><p>
இந்த கூட்டத்தொடரில் 2026- 27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef9d3ca-2110-499d-bad3-48c6bcb068ed/26-6aacb52a8405c.webp' /><br></p><p>
</p><p>
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியார் பல்கலைகழக திருத்த மசோதா, விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ஆம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
</p><p>
இதில் தனியார் பல்கலைகழக திருத்த மசோதா தவிர்த்து மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>

கூட்டத்தொடர் நிறைவடைந்த 5 நாட்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இவை சட்டமான நிலையில் கடந்த 15ம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-18T03:51:26+00:00</updated>
        </entry>
    </feed>
