<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-01T20:29:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் போராட்ட சர்ச்சை: மாணவர்களை மன்னித்த பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478"></link>
            <id>https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478</id>
            <summary type="text">நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><h2>மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி</h2><p>
நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543fecdc-bf80-4312-8128-e3f468fcdf19/26-6a6e0c4bb9338.webp' /></p><p>

மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்தி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p> இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றமே தனது கனவு என்றும் பிரதமர் கூறினார்.
</p><p>
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சில இளைஞர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றவை அல்ல என குறிப்பிட்ட பிரதமர், இளமைப் பருவத்தில் தவறுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வாகாது என்றும், இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்வதே முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:10:36+00:00</updated>
        </entry>
    </feed>
