<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-31T04:32:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்! கதறிய குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/young-woman-dies-chennai-dowry-harassment-1788148241"></link>
            <id>https://ibctamilnadu.com/article/young-woman-dies-chennai-dowry-harassment-1788148241</id>
            <summary type="text">தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தன்உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், இவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தன்உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.</p><p>சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், இவரது மகள் புவனேஸ்வரி(வயது 27), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
</p><p>
கடந்த 2024ம் ஆண்டு இவருக்கும் செங்கல்பட்டை சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 1 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது.
</p><p>
திருமணத்தின் போது பெண்ணுக்கு 50 பவுன், மாப்பிள்ளைக்கு 20 பவுன், 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4ff1d8-580f-444c-af48-3d288c47a3c7/26-6a94fa13616ac.webp' /><br></p><p>
</p><p>
ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது குழந்தைக்கு 1.25 பவுன் தங்கசங்கிலியை பரிசாக அளித்துள்ளனர், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 20ம் தேதி தந்தை வீட்டுக்கு வந்துள்ளார் புவனேஸ்வரி, அங்கேயே இரு வரவேண்டாம் என போனில் ஜானகிராமன் பேசியதாக தெரிகிறது.
</p><p>
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். </p><p>இதனைதொடர்ந்து போலிசில் புகார் அளித்த புவனேஸ்வரியின் தந்தை, ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.</p><p>

இதனைதொடர்ந்து வழக்கின் விசாரணை கிண்டி ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T03:50:51+00:00</updated>
        </entry>
    </feed>
