<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-22T18:49:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்: தமிழ்நாடு அரசு அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். </p><p>பின்னர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446a0439-a31a-40a3-9074-ec327a89e62b/26-6a60da116ec8d.webp' /></p><h2>அரசாணை&nbsp; வெளியீடு&nbsp;</h2><p>

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 'முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை' அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315c357e-3fad-44d9-85c2-a21c592c667e/26-6a60da1220716.webp' /></p><p> மேலும், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இத்திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.</p><p>
இந்நிலையில், 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T14:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வெளியாகும் ஜன நாயகன் திரைப்படம்... அதிரடியாக விடுமுறை அறிவித்த நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-movie-jana-nayagan-release-half-day-leave-1784725499"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-movie-jana-nayagan-release-half-day-leave-1784725499</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் நிறுவனம் ஒன்று விடுமுறை அளித்துள்ளது.ஜனநாயகன்தமிழக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் நிறுவனம் ஒன்று விடுமுறை அளித்துள்ளது.</p><h2>ஜனநாயகன்</h2><p>தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பல போராட்டங்களுக்கு பின்பு இப்படம் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் உட்பட பல பிரச்சனைகளால் 6 மாதங்களுக்கு பின்பு வெளியாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93d3a5a-a3e3-4d3d-9cb1-98f804f81fd9/26-6a60cb85cffea.webp' /></p><p>விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே 4 நாட்களுக்கான டிக்கெட் விற்கு தீர்ந்துள்ளது.</p><p>எப்பொழும் இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என்று வரும் பெயர் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்ட் திரையில் தோன்றவிருக்கின்றது.&nbsp;</p><p></p><p>ரசிர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ-க்கள்,அமைச்சர்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.</p><p>இந்நிலையில் திருப்பூரில் உள்ள டிகே உணவு நிறுவனம் ஒன்று தான் நடத்தி வரும் மூன்று கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஜனநாயகன் படத்தினை பார்ப்பதற்கு அரைநாள் விடுமுறை கொடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T14:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி - மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050"></link>
            <id>https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050</id>
            <summary type="text">போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3>

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p>

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a15968d-1ffa-4f29-bb32-56563a3a91dd/26-6a60c60c00a8a.webp' /></p><p>

போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>
 நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். </p><h3>

அண்ணாமலை</h3><p> 

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தாமதப்படுத்துவது ஏன் எனவும், இதனால் போரட்டம் ஹைஜாக் செய்ய வாய்ப்புள்ளது எனவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4498140-b066-487d-ba08-6e0d17505950/26-6a60c60ca5fa4.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த பல ஆண்டுகளாக, நான் நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். </p><p>

அது நாடு முழுவதும் மாணவர் தேர்வில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவந்தது என்றும், நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் தங்கள் கனவைத் தொடர ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது என்றும் நான் வாதிட்டு வருகிறேன்.</p><p> 

கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. 

சீரான தன்மையைக் கொண்டுவர வேண்டிய அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, ​​மீண்டும் ஒருமுறை தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மாணவர்கள் மீது அது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.</p><p> 

ஆனாலும், எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை. அந்தத் தருணம்தான், மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை கதறி அழுவதற்காக வீதிகளில் இறங்குவதற்கு அவர்களின் மனங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். </p><p>

ஒரு ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இருப்பினும், பொருத்தமான கேள்வி இதுதான்: 

பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? 

போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடையும் வரை அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஏன் தாமதப்படுத்தப்பட்டது? உங்களைக் காத்திருக்க வைத்தது எது?</p><p> 

மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் மக்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. 

ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநலவாதிகள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்துக்களைப் பரப்புவதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தை முழுமையாகத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பானதுதான். </p><p>

நீங்கள் மௌனமாக இருந்து, இந்த சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் அடிப்படைக் குறிக்கோள்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தயவுசெய்து அதை நடக்க விடாதீர்கள்! </p><p>

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், தற்போதைய கவலைகளை நிவர்த்தி செய்ய விரைவான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும்கேட்டுக்கொள்கிறேன்.&nbsp;</p><p>['</p><p>

எந்தவொரு தேசத்தின் வலிமையும், அதன் இளைஞர்கள் அதன் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்தால், நாம் நமது தேசத்தின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:30:59+00:00</updated>
        </entry>
    </feed>
