<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-08T11:59:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று: உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/newborn-baby-infected-with-coronavirus-1788849948"></link>
            <id>https://ibctamilnadu.com/article/newborn-baby-infected-with-coronavirus-1788849948</id>
            <summary type="text">இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் கர்ப்பிணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
</p><p>
மேற்குவங்கத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கும் தொற்று உறுதியானது.
</p><p>
அத்துடன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய செப்சிஸ் நோயாலும் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>

இதனால் குழந்தையின் உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருந்தது, குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் அனுமதித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffa7cc0-e5f3-45fa-acd3-482619a195e4/26-6a9fafdb17225.webp' /><br></p><p>

தனியார் மருத்துவமனையின் குழந்தை நல தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் சாந்தனு ரே மற்றும் அவரது குழுவினர் குழந்தையின் நோய் பாதிப்பை கண்டறிந்து அதற்கேற்ற மருத்துவ சிகிச்சையை தொடங்கினர்.
</p><p>
குழந்தைக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.
</p><p>
தொடர் கண்காணிப்பால் குழந்தையின் உடலிலிருந்து தொற்றுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, குழந்தையும் பூரண குணமடைந்து பெற்றொருடன் வீடு திரும்பியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-08T06:49:11+00:00</updated>
        </entry>
    </feed>
