<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-05T05:28:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டப்பகலில் அத்துமீறல்: பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443"></link>
            <id>https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443</id>
            <summary type="text">கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.</p><p>

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமைந்துள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த விவகாரத்தில் போலிசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.
</p><p>
இதன்போது அதிர்ச்சிகர சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்தது, அதாவது அசோகபுரம் ரயில்வே மேம்பால சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் தூங்கி கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0984c57d-a28f-4eae-85cb-37cca7d7f6e0/26-6a9b9e52bca5b.webp' /><br></p><p>
</p><p>
அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தெருநாய்கள் துரத்தி வந்துள்ளன, சத்தம் கேட்டு விழித்த பெண் கல்லால் அடித்தால் நாய்கள் போய்விடும் என கூறியுள்ளார்.
</p><p>
தொடர்ந்து குறித்த நபர் நாய்களை அடித்து துரத்தினார், அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.</p><p>

பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பி வந்த நாய்கள், குறித்த நபரிடம் இருந்து பெண்ணை காப்பாற்றினர், அவரது கால்களை கடித்து இழுத்தன.
</p><p>
இக்காட்சிகளை பார்த்த போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் 16 வயதான சிறுவன் என தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த போலிசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-05T04:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து: சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556"></link>
            <id>https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556</id>
            <summary type="text">8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பனம்பிக்குன்னு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b90e10-1029-4f3b-8d50-2b94a2f10674/26-6a9b9b30c4818.webp' /><br></p><p>
</p><p>
மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது, பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
</p><p>
கார் முழுவதுமாக சிதைந்து நொறுங்கியதால் காரின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன, 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
</p><p>
மாணவர்களின் முகங்களை கூட காணமுடியாத அளவு சிதைந்து போயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc4edd1-9cf4-43a0-ad67-e20988a81f8b/26-6a9b9b318bf5e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
