<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-12T17:11:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் இலவச பேருந்து சேவையில் குறைப்பு இல்லை: சமூக வலைத்தள வதந்திக்கு MTC விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mtc-clarifies-no-reduction-in-chennais-free-bus-1783874911"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mtc-clarifies-no-reduction-in-chennais-free-bus-1783874911</id>
            <summary type="text">சென்னையில் மகளிர் இலவச பேருந்து சேவையில் 100 சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC)...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் மகளிர் இலவச பேருந்து சேவையில் 100 சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மறுத்துள்ளது.</p><h2>&nbsp;MTC விளக்கம்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த மார்ச் மாதம் முதல் மகளிர் இலவச பயணத் திட்டத்தின் கீழ் 1,724 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போதும் அதே எண்ணிக்கையிலான பேருந்துகளே சேவையில் உள்ளதாகவும் MTC தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed505ae6-440a-4cce-98dc-e810f804f839/26-6a53c6558b8a6.webp' /></p><p> பேருந்து சேவையில் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
</p><p>
மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் MTC வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T16:53:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2050ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகும்- WHO எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123</id>
            <summary type="text">2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புஆண்டுதோறும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
</p><h2>
புற்றுநோய் பாதிப்பு</h2><p>ஆண்டுதோறும் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று&nbsp; தெரிவித்துள்ளது.
</p><p>
புகையிலை பயன்பாடு, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1829086f-382d-4513-a06c-212a06ab20d8/26-6a5370456c7a0.webp' /></p><p>தற்போது, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.</p><p>

இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகவும் புற்றுநோய் உள்ளது.</p><p>

இதுகுறித்து அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மையத்தின் மார்பக புற்றுநோய் பிரிவு தலைவர் டாக்டர் புவன் சுக் பகிர்ந்துள்ளார்.</p><h2>அவர் கூறியதாவது.., </h2><p>

பல நோயாளிகளுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.
</p><p>
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும்.
</p><p>
மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.&nbsp;</p><p>புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை விட, அதைத் தடுப்பதே சிறந்த வழியாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a521df00-4b01-4f0d-b1c6-3cdf8dc54007/26-6a5370461f6c8.webp' /></p><p>HPVக்கு எதிரான தடுப்பூசி கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
அதேபோல்
ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.</p><p>

நோய் கண்டறிந்தவுடன் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.</p><p>காப்பீட்டு வசதிகள், அரசின் ஆதரவு மற்றும் குறைந்த விலை மருந்துகள் நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:13:28+00:00</updated>
        </entry>
    </feed>
