<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-15T15:32:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மூலமாகவும் புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde36b5e-e86d-476b-8934-10dad8460990/26-6a57a28e50b8b.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செயலாளர் சுற்றறிக்கை</span></p><p> </p><p>அதேபோல், சென்னை ஆலந்தூரில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு அறிவிப்புப் பலகையை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இதை அனைத்து துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T15:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணத்தால் சிக்கலில் தவெக அமைச்சர்கள் - மத்திய அரசு நோட்டீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ministers-raj-mohan-keerthana-foreign-trip-issue-1784123728"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ministers-raj-mohan-keerthana-foreign-trip-issue-1784123728</id>
            <summary type="text">அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்றது குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கலில் தவெக அமைச்சர்கள்தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்றது குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>சிக்கலில் தவெக அமைச்சர்கள்</h3><p>தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு பயணமாக வெளிநாடு சென்று திரும்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d388ec7f-5382-43e8-8866-280836661952/26-6a579153160ed.webp' /></p><p>
அமைச்சர் கீர்த்தனா தொழில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு சென்றதாக தகவல் வெளியானது.&nbsp;</p><p>

தற்போது இந்த விவகாரம் தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அரசுமுறை பயணமாக செல்லும் போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற்று, Diplomatic Passport மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34573a3e-27b4-4b59-ae09-e134553a7f7c/26-6a57915265a2e.webp' /></p><p>
சமீபத்தில் அமைச்சர்கள் Diplomatic Passport ல் செல்லாமல் தங்களது சொந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. </p><p>

உரிய அனுமதி பெறாமல் சென்றது குறித்தும், சொந்த பாஸ்போர்ட்டில் சென்றது குறித்தும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T13:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் தடுப்பில் இணையும் கேரளா - தமிழ்நாடு : முதல்வர் விஜய்க்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-joins-actor-mohanlal-for-drug-awareness-1784113100"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-joins-actor-mohanlal-for-drug-awareness-1784113100</id>
            <summary type="text">கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
</p><p>
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளம் மற்றும் தமிழ்நாடு இணைந்து போதைப்பொருள் தடுப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f377f3-3463-45ef-a996-17c8fb3d8528/26-6a576bc82f0f4.webp' /></p><p> எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு மாநிலங்களும் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>

மேலும், கேரள அரசின் பிராண்ட் தூதரான நடிகர் மோகன்லாலும், முதலமைச்சர் விஜயும் இணைந்து கேரளத்தில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d0c511b-f91d-46a6-8aac-4c0044c6c0d1/26-6a576bc8d4ee9.webp' /></p><p>

போதைப்பொருள் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சவாலாக இருப்பதால், கேரளம்–தமிழ்நாடு இணைந்து நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், தென்னிந்திய அளவில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரளத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தகவல் கேட்டறிந்ததாகவும் ரமேஷ் சென்னிதலா கூறினார்.</p>]]></content>
            <updated>2026-07-15T11:15:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பார்க்கிறார்கள்: செந்தில் பாலாஜி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-letter-to-police-station-1784098121</id>
            <summary type="text">திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தவெக ஆட்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என திருவல்லிக்கேணி போலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி</h2><p>தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்.</p><p>நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன் சென்னை திருவல்லிக்கேணி போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.</p><p>போலிஸ் நிலையத்தில் அவர் ஆஜராகாத நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc3be65-849b-4faf-b62d-b1e534eba3d0/26-6a572deb03004.webp' /><br></p><h2>செந்தில் பாலாஜி கடிதம்</h2><p>அந்த கடிதத்தில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் எங்கும் ஓடிஒளியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் வழக்கின் விசாரணைக்காக தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q1WgXyV-1gw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:10:16+00:00</updated>
        </entry>
    </feed>
