<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-19T10:29:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்றில் பறக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-slams-cm-vijay-for-law-and-order-1789811631"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-slams-cm-vijay-for-law-and-order-1789811631</id>
            <summary type="text">udhayanidhi stalin slams cm vijay for not maintaining law and order: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>udhayanidhi stalin slams cm vijay for not maintaining law and order: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். </p><h3>

காற்றில் பறக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு</h3><p>

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3b4c81-971c-4e2e-9ea6-7ae77ae3e2f7/26-6aae5bb1238bf.webp' /></p><p> 

இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15 ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><p>

காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?</p><p>

‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. <br><br>இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2101192907927822706?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது.</p><p> காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். 

இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். </p><p>

இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-to-visit-swiss-in-jan-2027-for-davos-meet-1789799944"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-to-visit-swiss-in-jan-2027-for-davos-meet-1789799944</id>
            <summary type="text">cm vijay to visit swiss in jan 2027 to attend davos meet: முதல்வர் விஜய் அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to visit swiss in jan 2027 to attend davos meet: முதல்வர் விஜய் அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த வாரம் தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்று வந்தார். </p><p>

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65fbf9a5-232e-48b7-a12b-6abdfefb6278/26-6aae2e0a20c98.webp' /></p><p>
</p><p>
மேலும், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது. </p><p>

தற்போது, முதல்வர் விஜய் அடுத்த வெளிநாட்டு பயணமாக சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

ஜனவரி 18 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52b09fa-fb78-4625-af6f-15ef7fb32820/26-6aae2e0acbd9f.webp' /></p><p>

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் அலோயிஸ் ஸ்விங்கி மற்றும் நிர்வாக இயக்குநர் மருன் கைரூஸ் ஆகியோர் முதல்வர் விஜய்க்கு விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. </p><p>

முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையிலான குழு , ஒன்றுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T06:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையம் - தனியார் மயமாக்க முதல்வர் விஜய் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179</id>
            <summary type="text">cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><h3>

 தனியார் மயமாகும் சென்னை விமான நிலையம்?</h3><p>
சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.&nbsp;</p><p>

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65292453-3dd4-47d2-ad6c-5f3f14a6004d/26-6aae1b6d5aa31.webp' /></p><p> 

இந்த கடிதத்தில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை.&nbsp;</p><p>

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.&nbsp;</p><p> 

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் நிர்வாகமான Airports Authority of India – AAIஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h3>

சிபிஎம் எதிர்ப்பு </h3><p>

தவெக அரசின் இந்த முடிவுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், "சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்? </p><p>

நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?
</p><p>
தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. </p><p>

சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தியைப் பார்த்ததும், “இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?” என்ற கேள்வி எழுகிறது.
</p><p>
விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:19:49+00:00</updated>
        </entry>
    </feed>
