<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-02T16:21:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும்; சூரியன்தான் நிரந்தரம் - மு.க.ஸ்டாலின் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-says-sun-only-is-permanent-1788358690"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-says-sun-only-is-permanent-1788358690</id>
            <summary type="text">mk stalin says sun only is permanent: கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும், சூரியன்தான் நிரந்தரம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் திமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>mk stalin says sun only is permanent: கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும், சூரியன்தான் நிரந்தரம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். </p><h3>

மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு</h3><p> 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.</p><p> 

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், " நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b72d160-bb47-4382-bfec-ba62ecfcf231/26-6a9830241065e.webp' /></p><p>

அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேடு ஆகிறது தான்.
</p><p>
மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.</p><p>

நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். </p><p>

முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். </p><p>அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.

அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். </p><p>

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். </p><p>இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.</p><p>

கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும். </p><p>

முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும்.
</p><p>
அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும். </p><p>அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.
</p><p>
“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.
</p><p>
வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
</p><p>
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்" என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பேசுவது போன்ற AI வீடியோ: சைபர் க்ரைம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cyber-crime-case-registered-mimicking-cm-vijay-1788353473"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cyber-crime-case-registered-mimicking-cm-vijay-1788353473</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்ற AI வீடியோ தொடர்பில் சைபர் கிரைம் போலிசார் எச்சரிக்கை செய்திஇதுகுறித்து தமிழக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்ற AI வீடியோ தொடர்பில் சைபர் கிரைம் போலிசார் எச்சரிக்கை செய்தி</p><p>இதுகுறித்து தமிழக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கை,</p><p>சி.பி.சி.ஐ.டி சைபர் க்ரைம் செல் ஆய்வாளர் சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்து கொண்டிருந்தபோது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத்தளங்களில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசுவதுபோல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது.
</p><p>
அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fdda77-59ef-47b2-ad94-d36da4c856ce/26-6a981c8ae6799.webp' /><br></p><p> </p><p>மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><p>பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ஐடி மற்றும் அது தொடர்பான பதிவுகள் குறித்த தகவல்களைப் பெற மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ காணொளிகள் பேஸ்புக் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. </p><p>மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ஐடிகளிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். </p><p>மேலும், அவற்றில் பகிரப்படும் வாட்ஸ் அப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.
</p><p>
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டிப்பேக் காணொளிகளில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. </p><p>மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாதுகொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.</p><p> இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T12:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்தாகுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/will-cases-filed-against-farmers-be-withdrawn-1788352669"></link>
            <id>https://ibctamilnadu.com/article/will-cases-filed-against-farmers-be-withdrawn-1788352669</id>
            <summary type="text">தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுமா என திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுமா என திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
</p><p>
முந்தைய ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
</p><p>
முந்தைய ஆட்சி, 110 விதியின் கீழ் என கூறியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவே விதிக்கு புறம்பாக எதுவும் இல்லை என பேரவை தலைவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13de018e-2ef2-4258-812f-c9f3fa181291/26-6a9818e73bcb2.webp' /><br></p><p>
</p><p>
இந்நிலையில் திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம், போராட்டம் செய்த விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>

தவெக-வின் 100 நாள் ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா?
</p><p>
அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள், அந்த வழக்கையும் தள்ளுபடி செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட அதிகாரம் இருக்கிறது, அதனை மாற்றி வேறு வழியில் திருப்புவது சரியாக இருக்காது என பதிலளித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G_D_dTthsQo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:39:21+00:00</updated>
        </entry>
    </feed>
