<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-19T05:50:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையம் - தனியார் மயமாக்க முதல்வர் விஜய் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179</id>
            <summary type="text">cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><h3>

 தனியார் மயமாகும் சென்னை விமான நிலையம்?</h3><p>
சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.&nbsp;</p><p>

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65292453-3dd4-47d2-ad6c-5f3f14a6004d/26-6aae1b6d5aa31.webp' /></p><p> 

இந்த கடிதத்தில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை.&nbsp;</p><p>

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.&nbsp;</p><p> 

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் நிர்வாகமான Airports Authority of India – AAIஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h3>

சிபிஎம் எதிர்ப்பு </h3><p>

தவெக அரசின் இந்த முடிவுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், "சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்? </p><p>

நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?
</p><p>
தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. </p><p>

சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தியைப் பார்த்ததும், “இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?” என்ற கேள்வி எழுகிறது.
</p><p>
விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:19:49+00:00</updated>
        </entry>
    </feed>
