<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-29T18:44:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திராவிலும் பாமக, ஐயா வாழும் காலத்திலே ஆட்சி - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-says-pmk-to-expand-to-andhra-1785333558"></link>
            <id>https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-says-pmk-to-expand-to-andhra-1785333558</id>
            <summary type="text">ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.பாமக பொதுக்குழு கூட்டம் 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் பாமக தலைவர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.</p><h3>பாமக பொதுக்குழு கூட்டம்</h3><p> 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டாக நிலவி வந்த கருத்து வேறுபாடு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5034d1a3-78a8-4629-b038-4ed018f262a4/26-6a6a07380ea68.webp' /></p><p>
தனது 88வது பிறந்த நாள் நிகழ்வில் பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி அரசியலை அன்புமணி கவனித்துக்கொள்வார் எனவும் அறிவித்தார். </p><p>

இந்நிலையில், இன்று மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், பொருளாளராக திலகபாமாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><h3>ஆந்திராவில் பாமக</h3><p>
இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் ராமதாஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd235b74-02e8-4a8a-ae03-8587653bf6e9/26-6a6a0738b6a15.webp' /></p><p>பாமகவில் நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. நம்முடைய கட்சி ஜனநாயகக் கட்சி. இனி பேசும்போது என்னை நிரந்தர தலைவர் என யாரும் குறிப்பிட வேண்டாம். </p><p>

மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031-ல் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.</p><p> 

இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். 3 மாதங்களாக இதற்கான வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை பனையூரில் ஆந்திராவிலிருந்து முக்கிய நபர்கள் வந்து சந்திக்க இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T14:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மு.க. ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: மனு வாபஸ், வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/withdraws-election-case-against-mk-stalin-1785327772"></link>
            <id>https://ibctamilnadu.com/article/withdraws-election-case-against-mk-stalin-1785327772</id>
            <summary type="text">கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு சென்னை உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
</p><p>
தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில், மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்காக ரூ.2.27 கோடிக்கு நிலம் வாங்கிய விவரத்தையும் குறிப்பிடவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433b86f-6e51-4e30-8b64-a40ceb52f3e3/26-6a69f30e3e917.webp' /></p><h2>வழக்கு விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்; அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாகக் கருத முடியாது. </p><p>மேலும், அந்த சொத்துகளுடன் தனிப்பட்ட தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
</p><p>
இதையடுத்து, மனுதாரர் சிவஞானசம்பந்தம் தனது மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content>
            <updated>2026-07-29T12:53:26+00:00</updated>
        </entry>
    </feed>
