<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-17T14:45:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூகநீதி நாளில் அரங்கேறியுள்ள சமூக அநீதி - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-slam-for-stop-bharathidasan-fund-1789652012"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-slam-for-stop-bharathidasan-fund-1789652012</id>
            <summary type="text">udhayanidhi stalin condemns govt for stop student bharathidasan scholarship fund: சமூகநீதி நாளில் தவெக அரசு சமூக அநீதியை அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>udhayanidhi stalin condemns govt for stop student bharathidasan scholarship fund: சமூகநீதி நாளில் தவெக அரசு சமூக அநீதியை அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h3>

கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பாரதிதாசன் </h3><p>

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கதில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிதாசன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a88ae6c-cdf6-4403-a02a-2fb1a7a0c8e9/26-6aabec2ddf27e.webp' /></p><p>

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவரது படிப்புக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது. </p><p>

ஆனால், முதல் ஆண்டுக்கான நிதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் ஆண்டு தொடர்பான நிதியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார்.
</p><p>
இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அவரது முதலாமாண்டு Ph.D. படிப்புக்குக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால் உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை அவர் 10 மாதங்கள் கடந்த பின்னரும் சமர்ப்பிக்காமல், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக கோரி வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலை விவரித்தார்.</p><p> 

இந்நிலையில், இன்று கண்ணீர் மல்க மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள பாரதிதாசன், அமைச்சர் தரப்பிலிருந்து கேட்ட, தேவையான அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி விட்டேன். ஆனால் எனக்கு நிதி கிடைக்கவில்லை.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இப்ப சந்தோசம் தானே <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> 💐<br><br>ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு <a href="https://x.com/VanniTamizhVCK?ref_src=twsrc%5Etfw">@VanniTamizhVCK</a> <a href="https://x.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@thirumaofficial</a> 💔 <a href="https://t.co/kypFLnyczO">pic.twitter.com/kypFLnyczO</a></p>&mdash; Milton (@Milton_Off) <a href="https://x.com/Milton_Off/status/2100504247142060456?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>என்னால் எனது ஆராய்ச்சி படிப்பை தொடர மூடியதால் சூழல் உள்ளது. 

அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறது. என் கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு படிக்க சென்ற முதல் மாணவன் நான்தான் என பேசியுள்ளார்.</p><h3> 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h3><p> 

இதனையடுத்து, மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
</p><p>சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2100540424498856363?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
</p><p>
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
</p><p>
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும்&nbsp; அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T13:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசி டி20 தரவரிசை.., முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/icc-t20-rankings-indian-players-secure-the-top-two-1789642827"></link>
            <id>https://ibctamilnadu.com/article/icc-t20-rankings-indian-players-secure-the-top-two-1789642827</id>
            <summary type="text">ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்&amp;nbsp;இந்திய அணி ஆப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.</p><h2>முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்&nbsp;</h2><p>இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.</p><p> 

கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efc4a16-d5ad-4286-b8f3-7efb21668ba3/26-6aabc8b6ece6c.webp' /></p><p>இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். </p><p>

மேலும், இஷான் கிஷன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். தரவரிசையின் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>

ஜாஸ் பட்லர், திலக் வர்மாவை பின்னுக்குத் தள்ளி ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் சஞ்சு சாம்சன் நான்கு இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
</p><h2>
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை</h2><p><b>

1. இஷான் கிஷன் -</b> 913 புள்ளிகள்
</p><p><b>
2. அபிஷேக் சர்மா -</b> 862 புள்ளிகள்</p><p><b>3. சஹிஜதா ஃபர்ஹான் - </b>848 புள்ளிகள்</p><p><b>

4. பில் சால்ட் -</b> 799 புள்ளிகள்</p><p><b>

5. டெவால்ட் பிரெவிஸ் - </b>789 புள்ளிகள்</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T11:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384"></link>
            <id>https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384</id>
            <summary type="text">தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். 

இதனையடுத்து கொளத்தூர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். </p><p>

இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார்.
</p><p>
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென வி.எஸ்.பாபு உடல் நிலை பாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34aa5bd-9303-4258-af19-ae6d34c1ec91/26-6aabb7b432596.webp' /></p><p> </p><p>

மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 
செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p> 

கடந்த ஒரு வராத்திற்கும் மேலாக தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><h2>வெளியிட்டுள்ள அறிக்கை.., </h2><p>"தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742f6fac-8c4d-4b37-bc13-308f2f66834c/26-6aabb7b51b088.webp' /></p><p> 

அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையிலும் திருப்திகரமாகவும் உள்ளது. </p><p>

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது.</p><p>

மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றமடைவதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சிலையை கரைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்த 9 நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974"></link>
            <id>https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக்கூடிய சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் பொழுது ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைக்கும் நிகழ்வில் படி மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ce20d4-6d2a-43a6-b61d-67633aadffd8/26-6aabad8df34b4.webp' /></p><p></p><p> </p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர் கார், பத்ரக், கோர புட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>
 ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட இந்த தகவலின் படி ஜெகத்சிம்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் இருக்கக்கூடிய கோபால்பூர் பகுதியில் ஓடானலா இந்த இடத்தில் ஆற்றின் மூழ்கிய நான்கு நபர்கள் உடைய சடலங்களை மீட்டு எடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p> </p><p>மூன்று நபர் காணாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் உயிரிழந்த சோகமும் காணாமல் போன செய்தியும் கிடைத்திருக்கிறது. மொத்தம் ஒன்பது பேர் சடலங்கலாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு, மீட்பு பணிகள் இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவங்களுக்கு ஓடிஸா முதல்வர் மோகன் சரண் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்புகளை முன்னிட்டு நடந்த இந்த சோகமான செய்தி அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:14:22+00:00</updated>
        </entry>
    </feed>
