<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-07T08:34:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கு நடத்தி உடல் தகனம்: 27 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய சிவானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/women-returns-home-after-27-months-1788765172"></link>
            <id>https://ibctamilnadu.com/article/women-returns-home-after-27-months-1788765172</id>
            <summary type="text">இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்துள்ளது.
</p><p>

உத்தரபிரதேசத்தின் நவிகோட் நந்தனா கிராமத்தை சேர்ந்த பெண் சிவானி(வயது 28), கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் அவரை காணவில்லை.</p><p>

குடும்பத்தினர் தேடி அலைந்த நிலையில் ஜூலை மாதம் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
அப்பெண்ணின் அடையாளங்களின் அடிப்படையில் இறந்தது சிவானி என கருதிய குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து தகனம் செய்தனர்.</p><p>மேலும் வரதட்சணை கொடுமையே தன் மகள் இறப்புக்கு காரணம் என கருதிய சிவானியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்தனர்.<br></p><p>
</p><p>
இந்நிலையில் தற்போது 27 மாதங்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார் சிவானி, இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் யாருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர் என கேள்வி எழுந்துள்ளது.</p><p>

இதுகுறித்தான விசாரணையை போலிசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40249ebb-506a-4454-b254-59108257ed74/26-6a9e65be29044.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:20:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச் டயலாக், ரீல்ஸ்- உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-respond-to-cm-vijay-speech-1788763773</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

முதலமைச்சர் விஜய் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
</p><p>
தற்போது தவெக ஆட்சி தான் நடைபெறுகிறது, அதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.</p><p>

முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்தேன், ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை.

வியாழக்கிழமை ஓடிவிட்டு திங்கள்கிழமை பதில் சொல்வதாக கூறினார், மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியை போல் தவறான கருத்துகளை ஒப்புவித்துள்ளார் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
</p><p>
முதலில் பேச அனுமதிக்கிறேன் என கூறிய சபாநாயகர் யாருடைய அழுத்தத்தினாலோ அனுமதியை மறுத்துவிட்டார்.

இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iF4V7ofTpho" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-reply-to-udhayanidhi-stalin-assembly-1788754937"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-reply-to-udhayanidhi-stalin-assembly-1788754937</id>
            <summary type="text">மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரையை தொடங்கினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரையை தொடங்கினார்.</p><p>

அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில்முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்.</p><p>

சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BLDmm_1OiBo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
சட்டத்தை மதிப்பு நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்.

யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி.
</p><p>
எதிர்கட்சியினர் கூறியதாக கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரிசெய்வதில் பாகுபாடில்லை.</p><p>

ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.<br></p>]]></content>
            <updated>2026-09-07T04:27:38+00:00</updated>
        </entry>
    </feed>
