<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-17T14:08:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் - திருமாவளவன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/thirumavalavan-says-vck-to-come-as-ruling-party-1786974043"></link>
            <id>https://ibctamilnadu.com/article/thirumavalavan-says-vck-to-come-as-ruling-party-1786974043</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் என விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும் என விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
</p><h3>
விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும்</h3><p>

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளான இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், மாநாடு வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்தார். </p><p>

ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் திருமாவளவன் மாநாடு மேடைக்கு வருகை தந்தார். </p><p>

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103f0150-83e8-4254-b3cc-075c70a5c520/26-6a830f5cb2354.webp' /></p><p>

நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வளர வேண்டும். </p><p>இத்தனை காலம் ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்தோம். 

இன்றைக்கு ஆளும் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். விடுதலை சிறுத்தைகளும், தமிழக வெற்றிக்கழகமும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என பேசியுள்ளார்.</p><p> 

திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தொண்டர்கள் ஏறியதால் விரைந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Sorry: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678</id>
            <summary type="text">Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2s93gFXebJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தவெக அமைச்சர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு</h2><p>
</p><p>
நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப விவாதம் சூடுபிடித்தது.
</p><p>
இதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,</p><h2>மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அமைச்சர் ரஞ்சித் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக மன்னிப்பு கோரினார்.

அவர் பேசுகையில், திமுக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான், அவர் சார்பான நான் சாரி கேட்டுக்கிறேன் என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa14d51-5107-4662-8834-2c63b4656cd3/26-6a82cc0c3d0d1.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:56:15+00:00</updated>
        </entry>
    </feed>
