<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-24T15:35:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வரின் அறிவிப்பு போட்டி மாநிலங்களுக்கு ஜாக்பாட் - முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-slams-cm-vijay-for-drop-parandur-airport-1787578770"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-slams-cm-vijay-for-drop-parandur-airport-1787578770</id>
            <summary type="text">mk stalin slams cm vijay for drop parandur airport project: பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>mk stalin slams cm vijay for drop parandur airport project: பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.</p><h3> 

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்ட தமிழக அரசு</h3><p> 

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5424602a-b1d0-4731-baf1-bdec8f70a8c5/26-6a8c499371ff7.webp' /></p><p> 

இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
</p><p>
முதல்வரின் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், "பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3fda66-259b-486d-be35-772eca350ba8/26-6a8c49942354d.webp' /></p><p>
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
</p><p>
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
</p><p>
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. </p><p>

பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.</p><p> 

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dropping Parandur is not Change. It&#39;s an irreversible setback for Tamil Nadu&#39;s growth<br><br>The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s… <a href="https://t.co/QHZdVdK21L">pic.twitter.com/QHZdVdK21L</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2091799886542815579?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை.
</p><p>
எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795"></link>
            <id>https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795</id>
            <summary type="text">4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வங்​கதேசத்​தின் ரங்க்​ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்​தம்​ப​தி​யின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரி​யம் (12).</p><p>கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது.</p><p>இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர், இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு போலிசார் வந்து சோதனை செய்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணபதி இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e6080d-0123-44b0-bfd6-9502e24103cf/26-6a8c1c7db09b7.webp' /><br></p><p>மற்ற மூவரும் சடலமாக கிடந்துள்ளனர், இதனைதொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து ரங்க்​பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்​துல் மபூத், கடந்த வியாழன்று இரவு முக்தோ மற்​றும் சித்​தார்த்தா ஆகிய இருவர் வீட்டின் மாடிக்கு சென்று போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற கணபதி அவர்களை கண்டித்துள்ளார், போதையில் அவரை கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.</p><p>அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, அவரது மனைவி மகளையும் அதே பாணியில் கொன்றுள்ளனர், பின் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர், தற்போது அவர்களை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T10:27:19+00:00</updated>
        </entry>
    </feed>
