<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-07T18:29:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு - வெளியான அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462</id>
            <summary type="text">தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சியின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96cb310-1959-4370-a1d0-1fe4c7ddccda/26-6a75f544be0b8.webp' /></p><h2>ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில், வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>
</p><p>
இதன் ஒரு பகுதியாக, தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீர் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகள் மூலம் வறட்சியின் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதியை ஏற்படுத்துவதுடன், சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T15:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.900 கோடி லாட்டரி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கியது ஏன்? உதயநிதி - ஆதவ் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-udhayanidhi-debat-900cr-lottery-fund-1786111964"></link>
            <id>https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-udhayanidhi-debat-900cr-lottery-fund-1786111964</id>
            <summary type="text">லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி நன்கொடை வாங்கியது குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் விவாதம் செய்தனர். 

திமுகவினர் நடத்தும் சார...</summary>
            <content type="html"><![CDATA[<p>லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி நன்கொடை வாங்கியது குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் விவாதம் செய்தனர். </p><h3>

திமுகவினர் நடத்தும் சாராய ஆலை</h3><p> 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 
நடைபெற்றது.</p><p> 

இதில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேசும் போது, "நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்" என்று கூறினார்.&nbsp;</p><p></p><p> 
இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, "போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று கூறினார்.&nbsp;</p><p></p><p> 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஜெகத்ரட்சகனை சாராய ஆலையை நடத்தி டாஸ்மாக் மூலம் ஆர்டர் பெறுகின்றனர். திமுகவில் இருக்கும் பார்லிமென்ட் எம்பிக்கள் பலரும் சாராய ஆலை நடத்துகின்றனர்" என பேசினார். </p><h3> 

ரூ.900 கோடி நன்கொடை </h3><p>

அவர் பேசும் போது திமுக எம்எல்ஏ க்கள் லாட்டரி , லாட்டரி என குரல் எழுப்ப, லாட்டரி நிறுவனத்திடம் உங்கள் கட்சி ரூ.900 கோடி நன்கொடை பெற்றது ஏன்? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லைஎன கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f59f5d-49f4-48f7-85dc-8eb959cd8fac/26-6a75e7deecefa.webp' /></p><p>

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்" என கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e2ac1b-68ba-4b66-8559-31d3f0d11dea/26-6a75e7df9d4d5.webp' /></p><p>

அதற்கு, "அது அவர் மற்றும் அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும்; வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T14:13:05+00:00</updated>
        </entry>
    </feed>
