<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-01T15:34:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் போராட்ட சர்ச்சை: மாணவர்களை மன்னித்த பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478"></link>
            <id>https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478</id>
            <summary type="text">நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><h2>மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி</h2><p>
நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543fecdc-bf80-4312-8128-e3f468fcdf19/26-6a6e0c4bb9338.webp' /></p><p>

மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்தி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p> இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றமே தனது கனவு என்றும் பிரதமர் கூறினார்.
</p><p>
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சில இளைஞர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றவை அல்ல என குறிப்பிட்ட பிரதமர், இளமைப் பருவத்தில் தவறுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வாகாது என்றும், இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்வதே முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-tirupati-visit-with-tn-agriculture-budget-1785592799"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-tirupati-visit-with-tn-agriculture-budget-1785592799</id>
            <summary type="text">தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் வழிபாட்டிற்காக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

திருப்பதிக்கு கொண்டு செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் வழிபாட்டிற்காக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
</p><h3>
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்</h3><p>

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
</p><p>
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7347d8-dbb8-4714-be27-878a30abe173/26-6a6dfbe1a6eaa.webp' /></p><p>

இந்நிலையில், வேளாண்மை துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.</p><p>

இதுவரை, தமிழ்நாட்டில் பட்ஜெட் ஆவணங்கள் தாக்கல் செய்யபப்டும் முன் இவ்வாறு கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டதில்லை என்பதால் இது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. </p><p>

இது அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கை என ஒரு சிலர் கூறி வந்தாலும், அரசின் பட்ஜெட் ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது, மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
</p><h3> 
CPI, CPIM கண்டனம்</h3><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் 
அரசியல் சாசன ஆவணம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் <br>அரசியல் சாசன ஆவணம்.<br><br>தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்.<a href="https://x.com/vinothravi11?ref_src=twsrc%5Etfw">@vinothravi11</a> <a href="https://t.co/iTVZsuFT7J">pic.twitter.com/iTVZsuFT7J</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2083453547325308966?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள ,வேளாண் பட்ஜெட் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
</p><p>
ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ,பல்வேறு மதங்கள், வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் நாத்திகர்களும் உள்ள ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம்,ஆன்மீகம்,கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும். அரசோடு, அரசியலோடு அவற்றை கலகக் கூடாது.
</p><p>
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும்.
அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின்,ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் வழிபாட்டுத் தளத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தது நமது அரசியல் சட்டத்திற்கும்,மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் ,பன்மைத்துவத்
திற்கும் எதிரானதாகும்.
</p><p>
மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக அமைச்சர் வினோத் அவர்கள் செயல்பட்டது கண்டனத்திற்குரியது.
தவெக அரசும்,அமைச்சர்களும் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.
</p><p>
சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு அரசு ஆவணத்தை,அதற்கு முன்பாகவே பொதுவெளியில் வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான,ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கையாகும்.</p><p>

விவசாயிகளின் ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி ஒத்தக்கருத்தை உருவாக்க முயலாத தவெக அரசு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசு, வேளாண்மையை ,விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மை பட்ஜெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளதாக தவெக அரசின் அமைச்சர் கூறுவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid02Jic1Mn9MXzpMAs5aLej8TsosWUZQUVzwVqw6qJ2J6iLsNj4K6go9JYa2BEMxYphql%26id%3D61565389072881&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

எனவே, இத்தகையப் போக்குகளை தவெக அமைச்சர்களும்,அரசும் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kabini-dam-release-10000-cusecs-water-1785584428"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kabini-dam-release-10000-cusecs-water-1785584428</id>
            <summary type="text">கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வரத்து உள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வரத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>திறக்கப்பட்ட நீர் தமிழ்நாடு எல்லையை திங்கள்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9011612-7159-4ae8-a252-0bca728f23c1/26-6a6ddd6017812.webp' /></p><h2>உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்&nbsp;</h2><p>

இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.</p><p>

மேலும், காவிரி நீர் விவகாரத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p> மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், நீரை தொடர்ந்து தேக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T11:50:00+00:00</updated>
        </entry>
    </feed>
