<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-12T13:29:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/property-tax-in-chennai-hiked-1786532159"></link>
            <id>https://ibctamilnadu.com/article/property-tax-in-chennai-hiked-1786532159</id>
            <summary type="text">Property Tax Chennai Hiked: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Property Tax Chennai Hiked: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக அமைந்துள்ள சொத்து வரி 4 மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்தாண்டு 5000 ரூபாய் என்ற அளவில் இருந்த சொத்து வரி தற்போது 28000 ரூபாயாக அதிகரித்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஆனால் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d54f81-6bff-486e-a8d6-ebfc3d44c0f4/26-6a7c52e2bde22.webp' /><br></p><h2>Property Tax அறிக்கை</h2><p>இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை, குறைவாகவோ அல்லது தவறாகவோ கணக்கிடப்பட்டு சொத்துவரி செலுத்தி வந்த சொத்தின் உரிமையாளர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

செயற்கைகோள் தரவுகள், பிற அரசுத்தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய அறிவிப்பு ஆகியவற்றின் மூலம் பரப்பளவு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
</p><p>
திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பை பெற்ற 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

எனவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T11:03:14+00:00</updated>
        </entry>
    </feed>
