<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-06T19:23:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறுகள் இணைப்புத் திட்டம்: விரைவான செயல்பாட்டுக்கு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-letter-to-pm-modi-about-godavari-cauvery-link-1786030252"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-letter-to-pm-modi-about-godavari-cauvery-link-1786030252</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் நீண்டகால குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் நீண்டகால குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>
அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருப்பதுடன், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ace3c13a-d6be-476f-939f-edea3fb07ff7/26-6a74aed652e95.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மோடிக்கு கடிதம்&nbsp;</span></h2><p> நிலத்தடி நீர் வளங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் மிக முக்கியமான நீண்டகாலத் தீர்வாக அமையும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வெள்ள உபரிநீரை நீர் தட்டுப்பாடு பகுதிகளுக்குத் திருப்பிவிடவும் இத்திட்டம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய நீர் மேம்பாட்டு முகமை தற்போது தயாரித்துள்ள திட்ட அறிக்கையை மாற்றி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். என்றும், இதற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்து வழங்கி, விரைவுப் பாதை (Fast Track) முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும், தொடர்புடைய மாநிலங்களுடன் விரைவாக ஆலோசனைகளை முடித்து, விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவும், திட்டத்தை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த ஒன்றிய அரசு மற்றும்</p><p> பயன்பெறும் மாநிலங்கள் இணைந்து செயல்படும் சிறப்பு நோக்கு அமைப்பு (SPV) ஒன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.</p><p>

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், தென்னிந்தியாவின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து தேசிய நீர் வளங்களை சமநிலையுடன் பயன்படுத்தும் இலக்கை அடைய பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T15:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-to-consult-tamil-nadu-mps-on-delimitation-1786026863"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-to-consult-tamil-nadu-mps-on-delimitation-1786026863</id>
            <summary type="text">மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற உள்ளது.
</p><p>
சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96039160-c98b-4464-adb2-89121a96c8ad/26-6a749cf34757d.webp' /></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.</p><p>

மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுகுறித்த அரசியல் மற்றும் மாநில நலன் சார்ந்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. </p><p>கடந்த முறை போதிய ஆதரவு இல்லாததால் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T14:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை - தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-calls-tamilnadu-mp-s-discuss-delimitation-1786026648"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-calls-tamilnadu-mp-s-discuss-delimitation-1786026648</id>
            <summary type="text">தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை
</h3><p>
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6551653b-0438-49be-91ca-fb7b07f99886/26-6a749a99b1aef.webp' /></p><p>
இந்த மறுவரையின் மூலம், தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
</p><p>
தொகுதி மறு​வரையறை உள்​ளிட்ட திருத்த மசோ​தாக்​களை நிறை​வேற்​றும் போது, இந்​திய அரசி​யலமைப்​பின் 369வது பிரி​வின் கீழ் ஒட்​டுமொத்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களில் 3 இல் 2 பங்கு உறுப்​பினர்​களின் ஆதரவு அவசி​யம்.</p><p>

கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற இந்த மசோதா மீதான வாக்​கெடுப்​பின் போது 528 எம்​.பி.க்​கள் மக்​களவை​யில் இருந்​தனர். அதன்​படி, 352 பேரின் வாக்​கு​கள் இருந்​தால் மட்​டுமே மசோதா நிறை​வேறும் நிலை இருந்​தது. </p><p>

ஆனால், மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 வாக்​கு​களும், எதி​ராக 230 வாக்​கு​களும் விழுந்​தன. இதனால் மசோதா தோல்வி அடைந்​தது. </p><p>

தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்.பி க்கள் பலர், பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.</p><p> 

ஆகஸ்ட் 3வது வாரத்தில் சிறப்பு கூட்​டத்​தொடரில் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.</p><h3> 

எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு </h3><p>

இந்நிலையில், இந்த தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc268bbb-f925-4e28-a804-e334842d0da4/26-6a749a9a61cde.webp' /></p><p>

வரும் 8.8.2026 அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

2024 மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. </p><p>

இதில், 22 திமுக எம்பிக்கள் தவிர்த்து, 9 காங்கிரஸ் எம்பிக்கள், 2 விசிக எம்பிக்கள், 1 மதிமுக, 1 முஸ்லீம் லீக் எம்.பி தவெக கூட்டணியில் உள்ளனர். </p><p>

தலா 2 எம்.பிக்களை உடைய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், தவெக கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்குகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T14:31:19+00:00</updated>
        </entry>
    </feed>
