<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-08T19:16:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசை யார் இயக்குகிறார்கள்? திமுக எம்.பி கனிமொழி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-questions-who-control-tvk-govt-1786200853"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-questions-who-control-tvk-govt-1786200853</id>
            <summary type="text">தவெக அரசை யார் இயக்குகிறார்கள் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம்

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக அரசை யார் இயக்குகிறார்கள் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><h3>
தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம்
</h3><p>
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799f4cf9-1f53-4359-a212-46d8a4a9dc6c/26-6a77431722196.webp' /></p><p>

இதில், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்த 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 19 எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><p>

இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.</p><h3> 

கனிமொழி கேள்வி</h3><p> 

இந்நிலையில் செய்தியாளர்களை பேசிய திமுக எம்பி கனிமொழி, "39 எம்பிக்கள் புறக்கணித்துள்ள சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது தொகுதி மறுவரையறைக்கு எதிராக மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய அடிப்படைத் தேவை என்ன இருக்கிறது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90805514-7289-44ad-83a3-faf1b4ab3527/26-6a774317cb4e2.webp' /></p><p>

கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், த.வெ.க சார்பில் அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டு, தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். அந்த தீர்மானம் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

அப்படி இருக்கும்போது, பெரும்பான்மை எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இந்தக் கூட்டத்தை தவெக அரசு ஏன் கூட்டுகிறது என்பதை விளக்க வேண்டும்.</p><p>

இதற்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டபோது 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம்</p><p>. தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தோம். 

இதன் மூலம், பாஜக ஆட்சியில் முதன்முறையாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு திமுகவினரின் தொடர் முன்னெடுப்புகளே காரணமாக அமைந்தன.
</p><p>
ஒன்றிய அரசு இதுவரை தொகுதி மறுவரையறையை இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப் போவதாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் இடம்பெறும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. 

அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படையில் இந்த மசோதா குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது? </p><p>இந்தக் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? 

கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க கட்சியின் தலைமைக்கு தான் கடிதம் எழுதுவார்கள். ஆனால், தலைமை செயலாளர் எம்பிக்களுக்கு தனியாக கடிதம் எழுதியுள்ளார். </p><p>தலைமை செயலாளர் யாருக்கு பணியாற்றுகிறார்? அரசாங்கத்திற்காக இல்லை கழகத்திற்காக? 

மேகதாது, விவசாயி பிரச்சினைகள் உச்சத்தில் உள்ளபோது அதனை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
எங்களின் நோக்கம் தொகுதி மறுவரையறையை முற்றிலும் எதிர்ப்பது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கீடு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

அப்படி செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையும். தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறைக்கப்படாமல் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T14:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030</id>
            <summary type="text">கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளது. </p><p>கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது மற்றும் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ec5fed-c954-4959-8073-d813e28d52d4/26-6a77327c482ba.webp' /></p><h2>ரீல்ஸ் மோகத்திற்கு முற்றுப்புள்ளி</h2><p>குறிப்பாக, கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகள் மற்றும் கருவறைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோயிலுக்கு வருகை தரும் விவரங்களை ஒரு நாள் முன்பாக ஆணையருக்கு கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இவர்களின் வருகையின்போது கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான மொபைல் பாதுகாப்பு வசதிகளை அடுத்த 20 நாட்களுக்குள் முதுநிலை கோயில்களில் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அனுமதியின்றி புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T13:45:05+00:00</updated>
        </entry>
    </feed>
