<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-26T13:09:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கியுள்ள 57 தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-flood-20-tamilnadu-tourists-rescued-37-miss-1787748983"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-flood-20-tamilnadu-tourists-rescued-37-miss-1787748983</id>
            <summary type="text">57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><h3>

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு</h3><p>

நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து லெண்டே ஆற்றில் விழுந்ததில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>

வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7015a91-dd25-4ea3-bd1c-fc4da5c6539a/26-6a8ee278d5d4e.webp' /></p><p>
நேபாளத்திற்கு சென்றுள்ள100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. </p><h3>சிக்கிய 57 தமிழர்கள்</h3><p> 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு பேருந்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். </p><p>

மீதமுள்ள 2 பேருந்துகளில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. </p><p>

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. </p><p>

மேலும், 80690 09901, 080690 09900, 1800 309 3793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
</p><p>
மேலும் மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்களுடன் 2 இந்திய ராணுவத்தின் விமானங்கள் நேபாளத்திற்கு செல்ல உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரந்தூரில் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - CPIM சண்முகம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-request-govt-return-parandur-land-1787734278"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-request-govt-return-parandur-land-1787734278</id>
            <summary type="text">cpim shanmugam request govt to return land in parandur: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என CPIM தலைவர் பெ.சண்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpim shanmugam request govt to return land in parandur: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என CPIM தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
</p><h3>
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம்</h3><p> 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். </p><p>

இந்த திட்டத்திற்காக குறிப்பிட்டளவிலான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc08156-20f6-4b2f-89bd-7bbf1e8c803d/26-6a8ea9074a134.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும். </p><p>

திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் அந்த நிலத்தை மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்தார்.</p><h3> 

விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்</h3><p>

அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefd6ded-7bc7-4253-9592-7dab792203aa/26-6a8ea9080195b.webp' /></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
</p><p>
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.<br><br>நிலம்… <a href="https://t.co/qVX7Psqg9l">pic.twitter.com/qVX7Psqg9l</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2092462041038721199?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.

விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், "பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.</p><p> 

அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். ஆலோசனைக்குப் பிறகு, விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும். என கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-26T08:51:26+00:00</updated>
        </entry>
    </feed>
