<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-08T14:36:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030</id>
            <summary type="text">கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளது. </p><p>கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது மற்றும் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ec5fed-c954-4959-8073-d813e28d52d4/26-6a77327c482ba.webp' /></p><h2>ரீல்ஸ் மோகத்திற்கு முற்றுப்புள்ளி</h2><p>குறிப்பாக, கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகள் மற்றும் கருவறைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோயிலுக்கு வருகை தரும் விவரங்களை ஒரு நாள் முன்பாக ஆணையருக்கு கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இவர்களின் வருகையின்போது கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான மொபைல் பாதுகாப்பு வசதிகளை அடுத்த 20 நாட்களுக்குள் முதுநிலை கோயில்களில் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அனுமதியின்றி புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T13:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்கனவே நிலைப்பாடு தெளிவாகிவிட்டது... கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-asks-what-is-the-need-for-meeting-by-cm-1786181266"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-asks-what-is-the-need-for-meeting-by-cm-1786181266</id>
            <summary type="text">மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்துள்ளன.
</p><p>
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a0d64-3209-4f72-9e06-ec1c9d28c860/26-6a76fa7e0ff01.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக நிபந்தனை விதித்தது. </p><p>மேகதாது விவகாரத்தில் மவுனம் காத்துவிட்டு தொகுதி மறுவரையறை குறித்து மட்டும் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்திருந்தார்.

இதனிடையே, திமுகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.தவெக நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கனிமொழி எம்.பி பதிவு&nbsp;</h2><p><b>
கனிமொழி தனது எக்ஸ் பதிவில், </b></p><p>தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக ஏற்கெனவே எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும், திருத்தப்பட்ட சட்டமுன்வடிவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒரு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், காவிரி பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் இன்றைய கூட்டம் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வழங்குவதற்கு மாநில அரசு தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அக்கட்சியின் எம்.பி.க்கள் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தை புறக்கணிப்பது உறுதியாகியுள்ளது.</p><p>

இதனிடையே, திமுக மற்றும் அதிமுக கூட்டத்தை புறக்கணித்திருப்பது புதிய அரசியல் கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். </p><p>மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் தற்போது தேவையில்லை என்றால், கடந்த ஆண்டு இதே விவகாரத்தில் கூட்டம் நடத்தியது ஏன் என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியதுடன், திமுக பாஜக பக்கம் செல்லக் காத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:00:11+00:00</updated>
        </entry>
    </feed>
