<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-31T12:31:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023"></link>
            <id>https://ibctamilnadu.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023</id>
            <summary type="text">congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.
</p><h3> 
விஜய் பிரதமர் வேட்பாளர் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff17c40-3ab3-43a5-85e6-2ee2e0647c71/26-6a952c0218c78.webp' /></p><p> 

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர். </p><p>

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார்.&nbsp;</p><p></p><p>

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

காங்கிரஸ் எச்சரிக்கை</h3><p> 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa5189d-e4d0-4580-9a99-12c1db65f5ac/26-6a952c00a7e61.webp' /></p><p> 

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.</p><p>

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505eddd-0631-428f-9029-3522b7f81c50/26-6a952c0163fa2.webp' /></p><p>அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது.

இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். </p><p>

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பூத்த காதல்: ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297</id>
            <summary type="text">Chennai youth married russian woman in tiruchendur:&amp;nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சென்னை மயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chennai youth married russian woman in tiruchendur:&nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
</p><p>
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>சீனாவில் பூத்த காதல்</h2><p>
சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர்.

இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574d6352-fb7a-460d-b095-33fc77daa600/26-6a952d13ef90d.webp' />&nbsp;</p><p></p><p> நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.&nbsp;</p><h2>'கீர்த்தனா' என சூட்டிக்கொண்ட ரஷ்யப் பெண்</h2><p>

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p><p> 

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை 'கீர்த்தனா' என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p>

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-08-31T11:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஆண்டுகால சாதனையை 15 வயதில் முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். 

துலீப் கிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். </p><p>

துலீப் கிண்ணப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.&nbsp;</p><h2>வைபவ் சூர்யவன்ஷி&nbsp;</h2><p> 

கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கிண்ண அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi hitting it all around the park🤯🔥 <a href="https://t.co/lP9WGFwVDP">pic.twitter.com/lP9WGFwVDP</a></p>&mdash; Abhishek (@unfav_abhishek3) <a href="https://x.com/unfav_abhishek3/status/2094281091062628592?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ஓட்டங்கள் எடுத்தார். முகேஷ் குமார், அபிஜித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><h2>57 ஆண்டுகால சாதனை</h2><p>
அதிரடி அரைசதம் அடித்த அவர், லக்ஷ்மண் சிங்கின் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

அதாவது, 1969ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23-வது நாளில் துலீப் கிண்ணத்தில், தனது முதல் அரை சதத்தை அடித்தார். </p><p>

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 157 நாட்களிலேயே அரைசதம் கடந்து, துலீப் கிண்ண வரலாற்றிலேயே அரைசதம் அடித்த <b>மிக இளம் வயது துடுப்பாட்ட வீரர்</b> என்ற சாதனையைப் படைத்தார். </p><p>

தொடர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891078cc-1dea-4084-a26f-f87e1d6a5326/26-6a954485ac72c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: வைகோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vaiko-said-rahul-gandhi-as-pm-candidate-1788167395"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vaiko-said-rahul-gandhi-as-pm-candidate-1788167395</id>
            <summary type="text">இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முதலமைச்சர் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார், எந்த அலுவலகத்துக் சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை.</p><p>

100 நாட்களை கடந்த தவெக அரசுக்கு 100க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.தமிழக அரசுக்கு எனது நற்சான்றை வழங்குகிறேன்.
</p><p>
தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eed22ea-5c60-4ec8-9d6f-8de82b8b7657/26-6a9545585844e.webp' /><br></p><p>

மேலும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்பனையில் கூட பிரதமர் ஆவது நினைக்க மாட்டார், இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_meFQPUBBrk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[78 வயதிலும் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வளவு ஃபிட்டாக இருப்பதன் காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/diet-secret-of-tvk-minister-sengottaiyan-1787911016"></link>
            <id>https://ibctamilnadu.com/article/diet-secret-of-tvk-minister-sengottaiyan-1787911016</id>
            <summary type="text">ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், காலையில் நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவானது நமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், காலையில் நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவானது நமக்கு அந்த நாள் முழுவதும் நம் உடலை நல்ல ஆரோக்கியமாகவும் செரிமான பிரச்சனை இன்றியும் வைத்துக் கொள்கிறது. </p><p>


இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வயது 78 என்றாலும் அவர் இன்று வரை ஃபிட்டா இருப்பதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.</p><p>

 பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டையில் அவர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாக சொல்லி இருக்கிறார். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரிலும் திமுகவின் முன்னாள் அமைச்சரான கே.என் நேருவும் பேசி இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb5cce1d-6f91-425e-97b9-5c2559bfca98/26-6a915b698a0f1.webp' /></p><p></p><p> </p><p>இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்ற தேடல் பலருக்கும் தொடங்கியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.

 நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. </p><p>மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடென்ட் உடல் நலத்திற்கு நன்மை வழங்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்து இருக்கிறது.

 இருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்களுக்கு இதனை நாம் சிகிச்சையாக கருதக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a468df-3dbb-426b-82db-7f5e666e990d/26-6a915b6a41c18.webp' /></p><p> </p><h3>

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
</h3><p>நெல்லிக்காயில் அதிக அளவில் இருக்க கூடய வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்து நம்மை வெளிப்புற கிருமி தாக்குதல்களை எதிர்க்கவும் உதவுகிறது. ஒருவர் தொடர்ச்சியாக நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவது அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும் சளி காய்ச்சல் போன்ற பாதிப்புகளின் வீரிய தாக்குதலை குறைக்கிறது.
</p><h3>
 2. செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும்: </h3><p>

ஒருவர் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது என்பது அவர்களுக்கு வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சார்களின் சுரப்பை தூண்டி உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவியாக அமைகிறது. அஜீரணம் மற்றும் உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் குறையவும் அவை நமக்கு உதவியாக இருக்கிறது.
</p><h3>
3. சரும ஆரோக்கியத்தை காக்கும்:
</h3><p>
 நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. </p><p>சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அவை பாதுகாத்து நமக்கு சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தாமதப்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு, சருமத்திற்கு இயற்கையான பொழிவையும் ஆரோக்கியமான தோற்றத்தையும் அவை வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67768f54-d293-4af7-8e3b-21762762b582/26-6a915b6af06b7.webp' /></p><p></p><p>
</p><h3>
4. தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது:</h3><p>
நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்களில் மிகவும் ஆழமாக சென்று நம்முடைய முடியை வலுப்படுத்துகின்றன. </p><p>அவை நம்முடைய வேர்களில் ஆரோக்கியத்தை பாதுகாத்து முடி உதிர்வை தடுக்கிறது. அதைவிட, நம்முடைய தலைமுடி நரைப்பதை தாமதப்படுத்தி இயற்கையான கருமையாக இருக்க உதவுகிறது.</p><h3>

5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
</h3><p> நெல்லிக்காயில் உள்ள பயோ ஆக்டிவ் கலவைகள் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் உற்பத்தியும் அதனுடைய செயல்பாட்டையும் ஆதரிக்க உதவுகின்றன. </p><p>இதனால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் திடீர் என உயர்வை தவிர்க்கவும் உதவியாக அமைகிறது. நீரழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயம் நெல்லிக்காய் எடுப்பதற்கு முன்பாக மருத்துவரை ஆலோசிப்பது நன்மையை வழங்கும்.
</p><h3>
6. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்:</h3><p>
 நெல்லிக்காயில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படக்கூடிய ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது. இது நம்முடைய ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாத அபாயத்தை குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfd9f25-322c-4544-abdd-2ff3e101189e/26-6a915b6bafa1a.webp' /></p><p></p><p>
</p><h3>7. உடல் எடை மேலாண்மைக்கு உதவும்:
</h3><p> நெல்லிக்காய் ஜூஸில் கலோரிகள் மிகக் குறைவாகவும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் இவை நம்முடைய உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. </p><p>ஆதலால், உடல் எடை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவை ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் பானமாக விளங்கும்.
</p><h3>
 நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
</h3><p>
 நெல்லிக்காய் பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p> அதாவது, அதிக அமிலத்தன்மை அல்லது வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அளவுக்கு அதிகமாக குடிப்பது சிலருக்கு வயிற்று எரிச்சல் அல்லது செரிமான கோளாறுகள் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தப்படும். </p><p>மேலும், நெல்லிக்காய் ஜூஸில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பருகுவதை நமக்கு முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும். யாருக்காவது தீவிர உடல் நலப் பிரச்சினைகள் இருந்தால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் வழக்கமான உணவில் சேர்ப்பதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T06:37:35+00:00</updated>
        </entry>
    </feed>
