<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-04T17:29:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/police-enquiry-udhayanidhi-at-sengipatti-station-1785852098"></link>
            <id>https://ibctamilnadu.com/article/police-enquiry-udhayanidhi-at-sengipatti-station-1785852098</id>
            <summary type="text">செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.</p><h3>

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af02c82-fb74-403f-b2b2-e7d6df6de910/26-6a71f0c4d08e6.webp' /></p><p> 

முன்ஜாமீன் வழக்கில், உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்றனர். இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.</p><p>
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266fd2e-c875-49b5-81de-fab3c7679bc7/26-6a71f0c377fa4.webp' /></p><p> 

ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்தார் உதயநிதி ஸ்டாலின்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலின் காவல்நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். </p><p>

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:04:49+00:00</updated>
        </entry>
    </feed>
