<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-11T20:06:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்.... துயரத்தில் சினிமா பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/famous-singer-s-janaki-passes-away-1783786626"></link>
            <id>https://ibctamilnadu.com/article/famous-singer-s-janaki-passes-away-1783786626</id>
            <summary type="text">பிரபல பாடகி எஸ்.ஜானகி தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக மைசூரில் காலமாகியுள்ளது பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.எஸ்.ஜானகிஇந்திய சினிமாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகி எஸ்.ஜானகி தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக மைசூரில் காலமாகியுள்ளது பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>எஸ்.ஜானகி</h2><p>இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தினை பிடித்தவர் தான் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.</p><p>பல்லாயிரக்கணக்கான பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி தற்போது 88 வயதாகியுள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66aa1bde-e63e-433b-b05a-9e600068dc51/26-6a526ffc4ba02.webp' /></p><p>தனது ஒன்பதாவது வயதிலேயே மேடை நிகழ்ச்சியில் பாடி அசத்தியவர், 1957ம் ஆண்டு சினிமாவில் பாடகியானார். பல மொழிகளில் பல இசையமைப்பாளர்களுடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.</p><p></p><p>பல விருதுகளை வாங்கிய இவர் மத்திய அரசின் பத்மபூசன் விருதை வாங்க மறுத்துள்ளார். எப்பொழுதும் மக்களின் மனதில் இருக்கும் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி அம்மா இன்று காலாமாகியுள்ளது ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T16:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826"></link>
            <id>https://ibctamilnadu.com/article/shocking-crime-in-telangana-six-killed-1783777826</id>
            <summary type="text">காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டையே பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

ரங்காரெட்டி மாவட்டம் ராய்வலகூடா பகுதியைச் சேர்ந்த 28 வயது ராஜ்குமார், சிறுமியை ஒருதலையாக காதலித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781f2e7d-4473-4bcf-9070-02ebeb6ca96c/26-6a52520a8504d.webp' /></p><h2>புகார் கொடுத்ததால் ஆத்திரம்</h2><p>போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறுமியின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், இரவில் கத்தியுடன் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கொலை செய்து, சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.</p><p>காரில் கடத்தப்பட்ட சிறுமியை, வழியிலிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவளால்தானே நாம் ஜெயிலுக்குப் போனோம் என்ற ஆத்திரத்தில், அங்கேயே கத்தியால் குத்தி கொன்று, அருகிலிருந்த ஏரிக்கரையில் சடலத்தை வீசி எறிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3841dd5b-77e8-4dc8-9871-acac0a2b2dca/26-6a52520b325e0.webp' /></p><p>அத்துடன் நிறுத்தாமல், அதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்ற அவர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><p>சம்பவத்துக்குப் பிறகு தனது தந்தைக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:24:38+00:00</updated>
        </entry>
    </feed>
