<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-12T12:58:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2050ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகும்- WHO எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123</id>
            <summary type="text">2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புஆண்டுதோறும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
</p><h2>
புற்றுநோய் பாதிப்பு</h2><p>ஆண்டுதோறும் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று&nbsp; தெரிவித்துள்ளது.
</p><p>
புகையிலை பயன்பாடு, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1829086f-382d-4513-a06c-212a06ab20d8/26-6a5370456c7a0.webp' /></p><p>தற்போது, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.</p><p>

இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகவும் புற்றுநோய் உள்ளது.</p><p>

இதுகுறித்து அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மையத்தின் மார்பக புற்றுநோய் பிரிவு தலைவர் டாக்டர் புவன் சுக் பகிர்ந்துள்ளார்.</p><h2>அவர் கூறியதாவது.., </h2><p>

பல நோயாளிகளுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.
</p><p>
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும்.
</p><p>
மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.&nbsp;</p><p>புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை விட, அதைத் தடுப்பதே சிறந்த வழியாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a521df00-4b01-4f0d-b1c6-3cdf8dc54007/26-6a5370461f6c8.webp' /></p><p>HPVக்கு எதிரான தடுப்பூசி கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
அதேபோல்
ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.</p><p>

நோய் கண்டறிந்தவுடன் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.</p><p>காப்பீட்டு வசதிகள், அரசின் ஆதரவு மற்றும் குறைந்த விலை மருந்துகள் நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகி எஸ். ஜானகி மறைவு.. முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/s-janaki-death-cm-vijay-pay-heartfelt-tribute-1783836893"></link>
            <id>https://ibctamilnadu.com/article/s-janaki-death-cm-vijay-pay-heartfelt-tribute-1783836893</id>
            <summary type="text">பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>அரசியல், திரையுலகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf85b374-773a-45cb-9552-6b6fb0407729/26-6a5332cc499e5.webp' /></p><h2>முதல்வர் விஜய் இரங்கல்</h2><p>
</p><p>
இந்த நிலையில், முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதில் அவர் கூறியிருப்பதாவது,</p><p>
"இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba565a62-5058-4216-b443-8900780fd682/26-6a5332cce7a7a.webp' /></p><p>
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.
</p><p>
தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்திய அபாரத் திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.</p><p> எஸ். ஜானகி அவர்களின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2075974677194064297?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைசூரில் பாடகி எஸ். ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/public-pays-tribute-to-s-janaki-s-mortal-remains-1783835402"></link>
            <id>https://ibctamilnadu.com/article/public-pays-tribute-to-s-janaki-s-mortal-remains-1783835402</id>
            <summary type="text">புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.</p><p>

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31e0664a-55a7-4a29-82dd-d5d8a88652f1/26-6a532b0c37d92.webp' /></p><p>

தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
</p><p>
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T07:01:02+00:00</updated>
        </entry>
    </feed>
