<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-16T14:22:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-census-what-are-the-33-question-to-asked-1784211375"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-census-what-are-the-33-question-to-asked-1784211375</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.&amp;nbsp;தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.&nbsp;</p><h3>தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு</h3><p> 

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2fcfb0-7d5e-4b8e-b6b3-2ec7c915c607/26-6a58e7b16836d.webp' /></p><p>

மக்கள் தொகையின் அடிப்படையிலே, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி உதவி, நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுவதால் இது முக்கியமான ஒன்றாகும்.</p><p> 

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53809e7b-2eee-4c3c-b4ea-9eaa5819f02c/26-6a58e7b21d8e1.webp' /></p><p>

மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதில், குடும்ப தலைவர் எந்த ஜாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளது? வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர்? ஸ்மார்ட் போன், மடிக்கணினி உள்ளதா?, கார், பைக் உள்ளதா? இணைய இணைப்பு உள்ளதா? கழிவறை எந்த வகை?குடிநீர் ஆதாரம், உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f87658-4a04-4796-b83f-c47cc2723af3/26-6a58e7b2c3477.webp' /></p><h3> 

சுய கணக்கெடுப்பு </h3><p>

சுயகணக்கெடுப்பு ஜூலை 17 ஆம் திகதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது.</p><p>இந்த முறை, விருப்பமுள்ளவர்கள் இணைய வழியில் <a href="https://se.census.gov.in/" target="_blank">se.census.gov.in</a> என்ற இணையதளத்தில் சுய கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.</p><p>இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற்று வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு ஒரு சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) திரையில் தோன்றும். அதனை சேமித்து வைத்து, வீட்டிற்கு வரும் கனெக்கெடுப்பாளர்களிடம் காண்பித்தால் மீண்டும் அவர்களிடம் 33 கேள்விகளுக்கும் பதிலளிக்க தேவையில்லை.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T14:16:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு - முதல்வர் விஜய் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-warns-ministers-if-corruption-allegations-1784196606"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-warns-ministers-if-corruption-allegations-1784196606</id>
            <summary type="text">ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். 

தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். </p><h3>

தமிழக அமைச்சரவைக் கூட்டம்
</h3><p>
முதலமைச்சர் விஜய் தலைமையிலான 2வது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6eebb6e-cb3e-4f72-a0eb-9d38e91faddb/26-6a58ae004d8ac.webp' /></p><p>

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. </p><h3> 

முதல்வர் விஜய் எச்சரிக்கை</h3><p>

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அமைச்சர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b68224-675d-402a-9949-6e4e31c905a5/26-6a58adff9c924.webp' /></p><p>

தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து இடையூறு ஏற்படுத்தக்கூடாது. </p><p>

அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. கட்சியினருக்கும் இது குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
</p><p>
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கினால், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். </p><p>

நமது அரசு ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடாத வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாக செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T10:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-government-bans-color-papad-1784193888"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-government-bans-color-papad-1784193888</id>
            <summary type="text">அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

கலர் அப்பளங்களை குழந்தைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.</p><p>

கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbfbbc7-581d-4e36-ae5c-fa48cfb86048/26-6a58a508c5231.webp' /></p><h2>ஆரோக்கிய பிரச்சினை</h2><p> </p><p>இவற்றை அடிக்கடி உட்கொள்வதால் செரிமானக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1c6f00-1f16-4fe7-ba76-8c0b05880e53/26-6a58a509759ff.webp' /></p><p> </p><p>இதற்கு மாற்றாக, உளுந்து, அரிசி போன்ற பாரம்பரிய பொருட்களால் தயாரிக்கப்படும் அப்பளங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தைகள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக் கூடாது என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T09:32:56+00:00</updated>
        </entry>
    </feed>
