<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-14T17:38:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346"></link>
            <id>https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346</id>
            <summary type="text">பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளதுடன், முதலமைச்சர் கூறியபடி, அரசு தூய்மையாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>
பழனி கோயில் நிலம் தொடர்பான புகார்கள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d6fa85-7d26-49f9-95e6-4dc56af0c9b0/26-6a565999d2546.webp' /></p><p>
</p><p>
அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளரின் இடத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த அதிகாரி, நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரம் தெரியாமல் பதிவை மேற்கொண்டதாக தெரிவித்தார்.</p><p> பின்னர் தகவல் கிடைத்ததும், நிலப் பதிவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கோயில் நிலம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.</p><h2>ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விடமாட்டோம்</h2><p> </p><p>சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தனது உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய்யானது என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார். </p><p>தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், "ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடப்பாடி பேச்சு நகைப்புக்குரியது- “இரவல் ஆட்சி” விமர்சனத்திற்கு தவெக பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-replay-to-admk-edappadi-palanisamy-1784038699"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-replay-to-admk-edappadi-palanisamy-1784038699</id>
            <summary type="text">திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு தவெக பதில் கொடுத்துள்ளது.
</p><p>
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a2f7a6f-1c95-4e26-84a6-f8f2a9fb043e/26-6a56470edb6c8.webp' /></p><p> </p><p>அதிமுக – திமுகவை “கூட்டு களவாணிகள்” என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ஆட்சியை நடத்துவதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதாக தவெக மீது குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், “தனி பெரும்பான்மை இல்லாமல் வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை நம்பி ஆட்சி நடத்துவதாக” விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும் தெரிவித்தார்.திமுகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><h2>தவெக பதிலடி&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b672f61-7ab3-43ea-bce3-4009bce8274e/26-6a56470f8d411.webp' /></p><p>
இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>“கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. </p><p>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என விமர்சிப்பது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கட்சி நடக்கிறதா?.கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.<br><br>திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.<br><br>கொடநாடு…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2076965958745514078?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-14T14:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? - சீமான் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-slams-vijay-for-nagercoil-custodial-death-1784038079"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-slams-vijay-for-nagercoil-custodial-death-1784038079</id>
            <summary type="text">இதுவரை முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சிறையிலிருந்த நபர் உயிரிழப்பு 

கன்னியாகுமரி மாவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரை முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3>சிறையிலிருந்த நபர் உயிரிழப்பு</h3><p> 

கன்னியாகுமரி மாவட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c147a9-7fb5-4070-90e9-1c768c7095dd/26-6a5642c1c53c8.webp' /></p><p>

விசாரணை கைதியான சபரிவர்மனுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. </p><p>

 சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்த காவல் மரணத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><h3>அதிகாரத்திமிர் இல்லையா?&nbsp;</h3><p>
</p><p>
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>

கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0792d263-64c7-4134-b271-1f1b2dae0177/26-6a5642c274045.webp' /></p><p>

எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. </p><p> 

முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? 

தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? </p><p>இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா?
</p><p>
 திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது?</p><p> சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா?</p><p> 

திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில்…</p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2077005527494856910?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T14:13:10+00:00</updated>
        </entry>
    </feed>
