<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-14T20:42:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346"></link>
            <id>https://ibctamilnadu.com/article/palani-temple-land-dispute-minister-ramesh-1784043346</id>
            <summary type="text">பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளதுடன், முதலமைச்சர் கூறியபடி, அரசு தூய்மையாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>
பழனி கோயில் நிலம் தொடர்பான புகார்கள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d6fa85-7d26-49f9-95e6-4dc56af0c9b0/26-6a565999d2546.webp' /></p><p>
</p><p>
அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளரின் இடத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த அதிகாரி, நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரம் தெரியாமல் பதிவை மேற்கொண்டதாக தெரிவித்தார்.</p><p> பின்னர் தகவல் கிடைத்ததும், நிலப் பதிவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கோயில் நிலம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.</p><h2>ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விடமாட்டோம்</h2><p> </p><p>சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தனது உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய்யானது என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார். </p><p>தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், "ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:46:13+00:00</updated>
        </entry>
    </feed>
