நெல்லையில் ZOHO-வின் புதிய அலுவலகம்; இது ஆபிஸா.. இல்ல வீடா..? - வைரலாகும் Photos!
ஜோஹோ நிறுவனத்தின் புதிய அலுவலகம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஜோஹோ (ZOHO)
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) உலகம் முழுவதும் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சிஇஒ (CEO) தமிழகத்தின் தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு என்பவர் ஆவார். அமெரிக்காவிலிருந்த அவர் தற்போது தென்காசிக்கு திரும்பி, அங்கிருந்தபடியே தனது பணிகளை செய்து வருகிறார்.
மேலும், தனது நிறுவனத்தின் கிளைகளை சென்னை, மும்பை, பெங்களூரு, போன்ற மெட்ரோ நகரங்களை அடுத்து தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களிலும் அமைத்து வருகிறார்.
புதிய அலுவலகம்
அந்த வகையில் மதுரை கப்பலூரில் சமீபத்தில் 40 ஏக்கர் பரப்பளவிலான சோஹோ கிளை அலுவலகத்தை அமைத்து வருகிறார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் அடுத்து திருநெல்வேலி தருவை கிராமத்தில் சோஹோ நிறுவனத்தின் அலுவலகம் தயாராகி வருகிறது. இது வீடா இல்லை அலுவலகமா என குழப்பத்தை ஏற்படும் அளவிற்கு இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய அலுவலகத்தின் வெளிப்புற தோற்றம் வீட்டைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.