டி20 ஃபைனலில்16 ரன்னுக்கு ஆல்-அவுட் - மோசமான சாதனையை படைத்த அணி!
ஜிம்பாவே டி20 கிரிக்கெட்டில், டர்ஹாம் அணி 3வது வெற்றியை பதிவுசெய்தது.
இறுதிப்போட்டி
ஜிம்பாவே டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மஷோனாலண்ட் ஈகிள்ஸ் - டர்ஹாம் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற டர்ஹாம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய 230 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ஈகிள்ஸ் அணி விளையாடியது.
மோசமான சாதனை
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் ஓவரிலேயே ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் உட்பட 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 8.1 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஈகிள்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.
இதன் மூலம் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக மோசமான சாதனையை ஈகிள்ஸ் அணி படைத்துள்ளது. ஈகிள்ஸ் அணியை 213 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டர்ஹாம் அணி ஜிம்பாவே டி20 கிரிக்கெட்டில் 3வது வெற்றியை பதிவுசெய்தது.