எனக்கு முதல் வாய்ப்புக் கிடைத்த தருணம்... சாஹல் பகிர்ந்த தகவலால் நெகிழ்ந்த ரசிகர்கள்...
ஐபிஎல் தொடரில் தனக்கு முதல் வாய்ப்பு கிடைத்த தருணத்தை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நினைவு கூர்ந்துள்ளார்.
கொரோனா காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளை கடந்த ஆண்டைப் போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாமா அல்லது இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தவுடன் நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஐபிஎல் தொடரில் தனக்கு முதல் வாய்ப்பு கிடைத்த தருணத்தை பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டில் ரோகித் சர்மா முதன்முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற போட்டியில்தான் தானும் அறிமுகமான தெரிவித்துள்ளார்.
நானும் ரோகித் சர்மாவும் மிகவும் நெருக்கமானவர்கள். குறிப்பிட்ட அந்த போட்டி தொடங்குவதற்கு முன் ரோகித்சர்மா தன்னிடம் இந்த போட்டியில் நீ விளையாடுகிறாய் என சொன்னபோது தன்னால் நம்ப முடியவில்லை என யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான சாஹல் தற்போது பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.