அஷ்வின் அதற்கு தகுதியற்றவர்; இந்திய அணியில் இருந்து நீக்குங்கள் - யுவராஜ் சிங் கருத்து!
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்திய அணியின் தலைசிறந்த பாபுலர்களில் ஒருவராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் அவரின் திறமைகள் இந்திய அணிக்கு மிகப்பெரிய பயனை கொடுத்துள்ளது.
இதுவரை இந்திய அணிக்காக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தகுதியில்லை
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பேசுகையில் "ரவிச்சந்திரன் அஷ்வின் மிகச்சிறந்த பவுலர்.
அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் விளையாட தகுதியில்லை. அவர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் என்ன செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
நிச்சயம் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாட வேண்டும். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து அஷ்வினை நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.