வீடு முழுவதும் ரத்த வெள்ளம்..ஒரே குடும்பத்தில் 4 பேர் கொடூர கொலை - காதலனின் பகீர் வாக்கு மூலம்!

Uttar Pradesh Crime Murder
By Vidhya Senthil Oct 07, 2024 09:33 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

ஒரு தலைக்காதலால் ஒரு குடும்பபே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தலைக்காதல்

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி என்ற பகுதியில் கடந்த 3-ம் தேதி ஆசிரியர் சுனில் குமார், அவரது மனைவி பூனம் மற்றும் இரண்டு குழந்தைகள் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர்.

murder

சந்தன் வர்மா என்ற நபரை டெல்லியில் கைது செய்தனர். அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியர் சுனில் குமார் மனைவி பூனத்துடன் தனக்கு மூன்றரை ஆண்டுகளாகத் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் அத்தொடர்பை பூனம் துண்டித்துக்கொண்டார்.

22 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தந்தை - காத்திருந்து பழி தீர்த்த மகன்

22 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தந்தை - காத்திருந்து பழி தீர்த்த மகன்

இதன் காரணமாக நான்கு பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்யத் திட்டமிட்டு இருந்தேன் என்றும், ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். ஆனால் அவர் அளித்த வாக்குமூலத்தில் நம்பக தன்மை இல்லாததால் சந்தன் வர்மாவை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 சுட்டுக் கொலை

உண்மையில் பூனம், சந்தனை காதலிக்கவில்லை என்று தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னை காதலிக்கும்படியும், தன்னுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும்படியும் பூனத்தை சந்தன் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

crime

சந்தன் பூனத்தை ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்துள்ளார். இது குறித்து பூனம் ஏற்கனவே சந்தன் சர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை புகார் செய்துள்ளார். சந்தன் சர்மா இதற்குப் பழிவாங்க பூனத்தையும், அவரது குடும்பத்தையும் கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.