ரம்மியில் லட்சங்களை இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்த இளைஞர் - கதறும் குடும்பம்
நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). இவர் ஒரு பட்டதாரி.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைனில் விளையாடக் கூடிய ரம்மி என்ற ஆப்யை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கி உள்ளார்.
அப்ப அப்போ, ஆன்லைன் ரம்மி விளையாட்டை செல்போனில் விளையாடி சின்ன,சின்ன தொகையை வென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பெரிய தொகையை வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அதில் (சிவன்ராஜ் தன்னுடைய ஒட்டு மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது).
இந்நிலையை தொடர்ந்து, அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விட்ட பணத்தை மீண்டும் விளையாடி எப்படியாவது திரும்பப்பெற வேண்டும் என நினைத்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரியவந்துள்ளது.
விஷம் குடித்து தற்கொலை
பின், இதனை தொடர்ந்து நடந்த சோகம் என்னவென்றால். அதிலும், சிவன்ராஜ் தோல்வியடைந்து, கடன் வாங்கிய பணத்தை இழந்தது தான்.
கணக்குப்படி, மொத்தம் ரூ15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று மனமுடைந்த அவர் தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி அதில் குளிர்பானத்தை கலந்து குடித்துள்ளார்.
பின், மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் பார்த்து பதறிபோய். பின், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.