நிச்சயிக்கப்பட்ட இளைஞரை மலைக்கு அழைத்து சென்று இளம்பெண் செய்த காரியம் - ஆந்திராவையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்
ஆந்திரா மாநிலம், அனகப்பள்ளியை சேர்ந்தவர் புஷ்பா. இவருக்கு பெற்றோர்கள் சேர்ந்து திருமணம் நிச்சயித்துள்ளனர். ஆனால், இந்த திருமணத்தில் புஷ்பாவிற்கு விருப்பம் இல்லை.
இதனையடுத்து, நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கு சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி அந்த இளைஞரை மலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த மலை மேல் இருவரும் ஏறியதும், இளைஞரின் கண்களை புஷ்பா மூடியுள்ளார். பின்னர், அந்த இளைஞரின் கழுத்தை அறுத்திருக்கிறார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வரவே புஷ்பா அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நபரை மீட்டு அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் புஷ்பாவை கைது செய்துள்ளனர். புஷ்பாவிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த விசாரணையில் புஷ்பா, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை. ஆதலால் நான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.