குழந்தை திருமணம் செய்த இளைஞர் - கர்ப்பிணியாக மீட்கப்பட்ட 13 வயதுச் சி்றுமி
ராஜபாளையம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை அடுத்த மேலூர் துரைச்சாமி புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் 28 வயதான நிலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய உறவினர் மகளான 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் அப்பெண்ணை திருமணம் செய்த நிலையில் தற்சமயம் அச்சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு வயது 19 எனக் கூறி கர்ப்பிணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை அச்சிறுமி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த சென்ற போது ஆதார் அட்டை மூலம் அவரின் வயது 13 என இருந்ததால் உடனடியாக அரசு மருத்துவர் மூலம் மகளிர் நல அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் ஊர் நல அலுவலர் அனுராதா அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கர்பிணியான சிறுமியை மீட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் அவரை விருதுநகரில் செயல்படும் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.