கடற்கரையில் காதலிக்கு பயங்கரம் - தப்பித்து தெறித்து ஓடிய காதலன்!

Andhra Pradesh
By Sumathi Oct 12, 2023 04:38 AM GMT
Report

காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிய காதலி

ஆந்திரா, அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் காதலிக்கு பயங்கரம் - தப்பித்து தெறித்து ஓடிய காதலன்! | Young Woman Stuck In Beach Lover Escape

அதனால் காதலன் அந்தப் பெண்ணை ரகசிய திருமணம் செய்ய அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இளம்பெண் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். உடனே மகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் போலீஸில் புகாரளித்துள்ளனர்.

தப்பி ஓடிய காதலன்

அதன் அடிப்படையில், பெண்ணை தேடி வருகின்றனர். பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு லாட்ஜில் தங்கி இருந்துள்ளார். தொடர்ந்து இருவரும் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு உயரமான இடத்தில் அமர்ந்திருந்த நிலையில்,

சென்னையில் பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள் - அலறியடித்து ஓடிய மக்கள்

சென்னையில் பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள் - அலறியடித்து ஓடிய மக்கள்

ராட்சத அலை வீசியதால் இளம்பெண் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். ஆனால், பனிந்திரா அவரை காப்பாத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், மீனவர்கள் வந்து அந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றியுள்ளனர்.

உடனே தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீஸார் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காதலன் பனிந்திராவுக்கும் தொடர்பு கொள்ள முயன்றதில் அவர் போனை எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.