பால்பவுடர் கிடைக்காததால்..தாய்ப்பாலை விற்பனை செய்யும் இளம் பெண்..!
அமெரிக்காவில் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தாய்ப்பாலை விற்று வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட பால் பவுடரையே பிரதான உணவாக கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்நாட்டில் பால் பவுடருக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்காவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா எனப்படும் பால் பவுடர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து யூடாவை சேர்ந்த அலிசா சிட்டி என்ற பெண் தனது தாய்ப்பாலை (118 லிட்டர்) பல குடும்பங்களுக்கு விற்றுள்ளார்.
இளம் வயதான அவர்,தனக்குச் சுரக்கும் தாய்ப்பாலை கெடாமல் இருப்பதற்காக ஃப்ரீஸரில் வைத்து தேவைபடுவோருக்கு விற்பனை செய்து வருகிறார்.
ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதாக அலிசா சிட்டி கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல் IBC Tamil

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan
