சினிமா பட பாணியில் ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற மணமகனுக்கு அடி, உதை..!
சினிமா பட பாணியில் தலையில் விக் வைத்து திருமணம் செய்ய முயன்ற மணமகனை பெண் வீட்டார் அடித்து, உதைத்தனர்.
உண்மையை மறைத்து திருமணம்
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். விழாவின் போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி செஹ்ரா என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம்.
அதன்படி தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது.
அடித்து உதைத்த மணமகள் வீட்டார்
மெட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார். இதை கண்ட மணமகள் குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடும் ஆவேசமடைந்த அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதையடுத்து அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி மன்னிப்பு கோரி கெஞ்சினார்.
அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.