திடீரென ஓடிச்சென்று காளி சிலையை கட்டித்தழுவி அவமதித்த இளைஞர் - அடித்து தும்வசம் செய்த பக்தர்கள் - நடந்தது என்ன?
பூஜை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென இளைஞர் ஓடிவந்து காளிமாதா சிலையை கட்டிப் பிடித்த தழுவிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2 மணி அளவில் பஞ்சாப் மாநிலத்தில் புகழ்பெற்ற காளி மாதா கோயிலில் காளி மாதாவுக்கு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, கூட்டத்தில் இளைஞன் ஒருவர் கைக்குட்டையை வாயில் கட்டிக்கொண்டு கோவிலுக்குள் நின்றுகொண்டிருந்தார். அந்த இளைஞர், காளி பூஜையின்போது சிலை முன் சிறிது நேரம் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்.
அந்த வேளையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஓடிச் சென்று பீடத்தின் மீது ஏறி அலங்கரிக்கப்பட்டிருந்த காளிமாதா சிலையை கட்டி தழுவினான். அந்த இளைஞனின் இந்த செயலை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பதறினார்கள்.
இதைப் பார்த்த குருக்கல்கள் அதிர்ச்சி அடைந்து, இருக்கைகளில் அமர்ந்திருந்த பூசாரிகள் உடனடியாக அந்த இளைஞனை சிலையிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினார்கள். அங்கிருந்த பக்தர்களும் காளி மாதா சிலையை கட்டி அவமதித்த அந்த இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த பெண் காவலர் உடனடியாக கோட்வாலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர்.
இதுவரை அந்த இளைஞன் யார் எங்கிருந்து வந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காளிமாதா கோயிலுக்கு முன்பு திரண்டனர். இச்சம்பவத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு பதற்றம் அதிகரித்ததையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து தலைவர் காக்கி பண்டிட் என்பவர், கடவுளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
இந்த செயல் சகிக்க முடியாதது என்றும், பஞ்சாப் மாநிலத்தின் சூழலை கெடுக்கும் நோக்கில் இந்த சதி நடந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.