Thursday, Jun 26, 2025

காதல் திருமணம் செய்துக் கொண்ட இளம் தம்பதி - ஒரே நாளில் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

Tamil nadu Crime Death Thiruvarur
By Swetha 7 months ago
Report

 இளம் தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சேர்ந்தவர் சமரசபாண்டி. இவரது மகன் பிரகாஷ்(23). இவர் பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலையை செய்து வந்தார்.

காதல் திருமணம் செய்துக் கொண்ட இளம் தம்பதி - ஒரே நாளில் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்! | Young Love Marriage Couple Commits Sudden Suicide

இதனிடையே பிரகாஷ் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஹேமா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வீட்டில் பிரகாஷும், ஹேமாவும் தூங்கி கொண்டு இருந்தனர்.

இளம் தம்பதி 

அதிகாலை பிரகாஷ் கண் விழித்து பார்த்தபோது வீ்ட்டில் உள்ள அறையில் அவருடைய மனைவி ஹேமா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை பார்த்த அதிர்ச்சியில் பிரகாஷ் கத்தி கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ஹேமாவின் உடலை மீட்டனர்.

காதல் திருமணம் செய்துக் கொண்ட இளம் தம்பதி - ஒரே நாளில் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்! | Young Love Marriage Couple Commits Sudden Suicide

அப்போது திடீரென ஹேமா தூக்கில் தொங்கிய கயிறை எடுத்துக்கொண்டு அருகே இருந்த புளியமரத்துக்கு சென்ற பிரகாஷ் அங்கு அதே கயிற்றால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  


(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.)